திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! நம்மால இந்த வாக்குறுதி மட்டும்தான் குடுக்க முடியும்! வைரலாகும் பேச்சு!

மிகமோசமான ஊழல் ஆட்சியை நடத்தியதால், கடந்த பத்தாண்டுகளாக திமுகவால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை! இந்நிலையில் தற்போது எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று தவியாய் தவிக்கிறது திமுக! இதற்காக என்ன பொய்யை வேண்டுமானாலும் அடித்துவிடத் தயாராக உள்ளது!

சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகச் சுற்றிவருகிறது. அது ஒரு திமுக பிரச்சார மேடை. அந்த கூட்டத்தில் பேசும் திமுக நிர்வாகி ஒருவர், பெட்ரோல் விலை குறித்து பேசிய அடுத்த நிமிடமே குவாட்டர் மது பானத்தின் விலை குறித்து பேசுகிறார். மதுபான விலை அதிகரித்துவிட்டதாகக் கூறுகிறார்.

ஒருபக்கம், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்குவந்தால் பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவோம் என்று கூறுகிறார். ஆனால் அவரது கட்சிக்காரர்களோ, இலவசமாக மதுவைக் கொடுப்போம் என்று கூறுகிறார்கள்! இப்படி போகுமிடமெல்லாம் பொய்யாகப் பேசிப்பேசித்தான் மக்களை ஏமாற்றி வாக்குசேகரிக்கிறார்கள்! இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகச் சுற்றிவருகிறது!

Exit mobile version