திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே பஞ்சாயத்து ஆரம்பித்து விட்டது.

வெயிட்டிங் பார் பிரேக்கிங் நியூஸ்-

திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே பஞ்சாயத்து ஆரம்பித்து விட்டது. காங்கிரசை முடிந்த அளவிற்கு இறங்கி வர திமுக
அழுத்தம் அளிக்கிறது.

எதைக் கொடுத்தாலும் வாங்கி கொள்வோம் நோ டிமாண்ட் என்று தமிழக காங்கிரஸ் இறங்கி வருவதை வைத்து திமுக பாண்டிச்சேரியின் ஆட்சியை திமுகவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று புதிய டிமாண்டை ஆரம்பித்து இருக்கிறது

இதை நிச்சயமாக காங்கிரஸ் ஏற்றுக்கொ ள்ளாது என்பதால் அதை முன் வைத்தே பாண்டிச்சேரியை காங்கிரஸ் கட்சிக்கு அளித்தால் தமிழகத்தில் திமுக கொடு க்கும் தொகுதிகளை வாங்கி கொள்ள வேண்டும் என்று திமுக நிபந்தனை விதி க்கும்.

காங்கிரஸ் கட்சிக்கு திமுக நிச்சயமாக 25 தொகுதிகளுக்கு மேலாக அளிக்காது என்பதை உறுதியாக கூற முடியும்.

ஏன் என்றால் கூட்டணி தொகுதி பங்கீடு என்று அனைத்தையும் உதய நிதியின் மேற்பார்வையில் தான் இருக்கிறது.

சமீபத்தில் ஜல்லிக்கட்டுவை காண்கிற சாக்கில் உதயநிதியிடம் ராகுல் வைத்த காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் லிஸ்டை வாங்கி படித்து பார்த்த உதயநி தி ஜல்லிக்கட்டு முடிந்தபிறகு பொங்கல் சாப்பிட்டு விட்டு ராகுல் அளித்த அந்த பே ப்பரை வைத்தே கையை துடைத்து தூர வீசி விட்டார்.


இப்பொழுது பாண்டிச்சேரி ஆட்சியும் திமு கவுக்கு தான் என்று திமுக மார் தட்ட ஆரம்பித்து இருக்கிறது.காங்கிரஸ் கட்சிக்கு
இப்பொழுது உள்ள நிலையை நினைத்து

திமுக ஏறி மிதிக்க நினைக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு இப்பொழுது திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலை இருக்கிறது.

அடுத்த மாதம் மத்
தியில் தமிழகத்தில் மூன்றாவது நான்கா வது அணிகள் பற்றிய ஒரு முன்னோட்டம்
கிடைத்து விடும்.

அதற்கு பிறகு காங்கிரஸ் திமுக இடையே மோதல் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விடும்.

வெயிட்டிங் பார் தி பிரே க்கிங் நியூஸ் ஆப் திமுக காங்கிரஸ் அலையன்ஸ்..

கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version