தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 5வது நாள் யாத்திரையில் பொதுமக்களிடையே பேசியதாவது :- தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதேபோல், மத்தியில் பிரதமர் மோடி 3வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை தமிழகம் முழுவதும் நடக்க உள்ளது.
திமுகவினர் யாத்திரை நடத்தினால் ‘என் மகன் என் பேரன்’ என்று சொல்லி இருப்பார்கள். இதை நாம் கடந்த 27 மாதங்களாக பார்த்து கொண்டிருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்.
டாஸ்மாக் வருமானம் இன்னும் அதிகமாக வேண்டும் என திமுக நினைக்கிறது. மானாமதுரையில் பானை செய்யும் தொழில் புகழ் பெற்றது. திருக்குறள் நூல் பிரதமருக்கு மிகவும் பிடித்தமானது. இவ்வாறு அவர் பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















