பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,தமிழ்நாட்டில் நேற்றும் இன்றும் தேனி மற்றும் ஒசூர் ஆகிய இரு இடங்களில் பட்டப்பகலில் நடந்த கொடூர ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்குலைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
விடியா திமுக ஆட்சியில் ரவுடியிசமும், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
தொடர்ந்து இத்தகைய கொடூர குற்றங்கள் நிகழும் அளவிற்கு தமிழகத்தை கடந்த 5 ஆண்டுகளில் வன்முறை மாநிலமாக மாற்றி வைத்திருப்பது தான் உங்கள் திராவிட மாடலா..?
காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் அவர்களே, இரும்புக் கரம் கொண்டு காக்க வேண்டிய சட்டம் ஒழுங்கை இன்று சர்வசாதாரணமாக தினசரி கொலைகளும், தாக்குதல்களும் நடைபெறும் அளவிற்கு மாற்றி தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டதுதான் திமுக ஆட்சியின் அவலம் என அதில் தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















