பிரியாணிக்கு முண்டியடித்த திமுக தொண்டர்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் திமுகவின் உறுப்பினர் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த நிலையில் மதிய உணவாக மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. அப்போது அந்த பிரியாணி பார்சலை வாங்குவதற்காக திமுக தொண்டர்கள் முண்டியடித்து வாங்கியுள்ளனர். இந்த நிலையில் பிரியாணியை வாங்குவதற்காக கூட்டத்தில் முண்டியடித்து வாங்க சென்றபோது கூட்டத்தில் சிக்கி நிலைத்தடுமாறி கீழே விழுந்து இரண்டு பேர் மயக்கம் போட்டுள்ளனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒருபக்கம் பெண் அதிகாரிகளை முடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்துகின்றனர். மறுபக்கம் ஒரு பிரியாணி பொட்டலத்துக்காக திமுக தொண்டர்கள் அடித்து கொள்கின்றனர். திமுக ஆட்சியில் தான் இதுபோன்ற சமூக நீதியான சம்பவங்களை பார்க்க முடியும்.

Exit mobile version