Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப் பணிக்கு முன்பதிவா? தி.மு.க அரசின் கிடுக்குபிடி! வலுக்கும் எதிர்ப்பு!

Oredesam by Oredesam
July 29, 2021
in செய்திகள், தமிழகம்
0
கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப் பணிக்கு முன்பதிவா?  தி.மு.க அரசின் கிடுக்குபிடி! வலுக்கும் எதிர்ப்பு!
FacebookTwitterWhatsappTelegram

இந்து சமய அறநிலையத்துறை இப்போது, கோவில்களில் உழவாரப்பணி செய்ய விரும்புபவர்கள், முன்பதிவு செய்துகொள்ளலாம் செய்துள்ள அறிவிப்பு, பொது அறிவுக்கும் நடைமுறைக்குப் பொருந்தாத ஒரு வேண்டாத வீணான “சேவை.” யாரு(க்கு)ம் எந்த விதத்திலும் தேவை என்று கேட்காத ஒன்றை முன்பதிவு முறையில் அமல்படுத்துவது சுதந்திர இந்தியாவாக தெரியவில்லை.

ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா. காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்என்ற வெள்ளைக்கார கொடுங்கோல் ஆட்சியை விளக்குவதாக பாடலைப் போல தான் உழவாரப்பணி முன்பதிவு பார்க்கப்படுகிறது.எந்த ஊரில், எந்த நாட்டில், எந்த கோயிலுக்கு உழவாரப் பணி செய்வதற்கு, மக்கள் முண்டியடித்து, போட்டி போட்டுக்கொண்டு வரிசைகட்டி நிற்கிகிறார்களாம்?

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

நூற்றாண்டு காலமாகவே தமிழகத்தில் ஆங்காங்கே பக்தர்கள், தாங்களாகவே தன்னார்வ குழுக்களை அமைத்து, கலைகளின் பொக்கிஷமான, புனிதம் மிகுந்த கோயில்கள் எல்லாம் முட்புதர்கள் மண்டி மண்மேடு ஆகிவிட்டதால், வழிபாடு செய்ய இயலாது, பாழ் பட்டுப்போன திருக்கோயில்களில் மரம் செடி வளர்ந்துள்ள கோபுரங்கள், பிரகாரங்கள் ஆகியவற்றின் குப்பைகளை, செடிகொடிகளை அகற்றி, தங்கள் செலவிலேயே பழுது பார்த்து, வெள்ளையடித்து, காவி தீட்டி, திருக்கோயில்களை மீட்டு, வழிபாட்டுக்கு உரிய பொலிவு மிக்க கோயில்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்து வருகின்றனர்.

இப்படி நீண்டகாலமாக தங்கள் பொன்னான நேரத்தையும் பொருட்செலவையும் உடலுழைப்பையும் பயன்படுத்தி திருக்கோயில்களை சீர்திருத்தவரும் உழவாரப்பணி சேவகர்களுக்கு எல்லாம் ஆப்பு வைப்பதைப் போல், தன்னார்வத் தொண்டு செய்வதற்கு, முன்பதிவு தேவை என்பதை வற்புறுத்துவதாக ஆகி உள்ளது இந்த விளம்பரம்.

திருக்கோயில் நிர்வாகம் மற்றும் திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்க்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய இரண்டும் கைவிட்டுவிட்ட, தொலைதூரத்தில் அமைந்துள்ள கோயில்களை எல்லாம் தேடித் தேடிச் சென்று, சீர்திருத்தம் செய்துவரும் உழவாரப்பணி கூட்டத்தாருக்கு, இந்த அறிவிப்பு மன வேதனையை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பை பார்த்தால், முதல்கட்டமாக, வருவாய் உள்ள, பக்தர்கள் கூட்டத்துக்கு குறைவில்லாத 47 கோயில்களை முன்னிறுத்தி உள்ளார்கள். உழவாரப்பணி செய்யப்படும் கோயில்கள் எல்லாம், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்காத, செல்வச்செழிப்பற்ற, தொலைதூரத்தில், ஜனசந்தடி அற்ற இடங்களில் அமைந்துள்ள, சற்றே சிறிய கோயில்கள் தான் என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் அறிவித்துள்ளது, ஏதோ விளம்பரத்துக்காக செய்துள்ள யோசனையற்ற செய்கை என்றுதான் தோன்றுகிறது.

பல மைல்கள், சொந்தச் செலவில் பிரயாணம் பண்ணி, கால் கடுக்க வரிசையில் மணிக்கணக்காக நின்று, குடும்பத்துடன் மொட்டை அடிப்பது முதல், தரிசன கட்டணம், அர்ச்சனை கட்டணம் போன்ற எல்லா கட்டணங்களையும் செலுத்தி, இறைவனிடம் கையேந்தி நிற்கும் ஏழை பக்தனின் பக்திக்கு முன்னால், கணினியிலும் இணையத்தளத்திலும் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி கொண்ட எவரும் சிறந்தவர் என்று கூறிவிட முடியாது. அடிக்கடி கணினி, இணையதள முன்பதிவு போன்றவற்றை பேசும் இந்து சமய அறநிலையத்துறை ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் குறித்து எந்த வசதியும் செய்வதில்லை.

தன்னார்வத் தொண்டர்கள், சமயப் பற்றும் பக்தி நெறியும் கொண்டவர்கள், தாமாக முன்வந்து கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும், பிரார்த்தனை தலங்களில் குடிதண்ணீர் மற்றும் வழிகாட்டுதல் உதவிகளை செய்வதற்கும், கூட்டம் இல்லாத நாட்களில் குப்பை கூளங்களை அகற்றி, செடிகொடிகளை பிடுங்கி, வெட்டி, சீரமைத்து, திருக்கோயில்களை இருண்ட நிலையிலிருந்து மீட்டு வருகின்ற செய்கை, தானாக எந்தவித குறைபாடும் இன்றி நடந்துவருவதை திடீரென, “எல்லாம் வரிசையில் வாருங்கள்; ஆதார் கார்டு எடுத்து வாருங்கள்; ரேஷன் கார்டு எடுத்து வாருங்கள்” என்று சட்ட திட்டங்களை பொருத்துவதால், இந்து சமய அறநிலையத்துறை என்பது, கட்டுப்பாடுகளை மட்டும் வைத்துக்கொள்ளும் ஒரு போலீஸ் துறையாக பார்க்கப்படும்.

கோயில்கள், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானவை அல்ல. அறநிலையத்துறை மற்றும் அதன் அலுவலர்கள், பணியாளர்கள், திருக்கோயில்களுக்கு கைகட்டி சேவகம் செய்ய வந்த ஏவலர்கள் மட்டுமே என்பதை மறக்க வேண்டாம்.

இந்து சமயஅறநிலைய துறையில் பணியாற்றும் அலுவலர்கள், பொது சேவகர்கள் என்ற ஊழியர்கள் என்ற மனநிலையை மட்டும்தான் கொள்ள வேண்டுமே தவிர, ஆணையிடும் அலுவலர்களாக தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டு, பொது சேவை புரிய வருபவர்களை தாழ்த்திக் காட்டுகின்ற இம்மாதிரி முயற்சிகளை விட்டுவிட வேண்டும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொரோனா எதிரொலியாக, பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைப்பு – மத்திய அமைச்சரவை முடிவு.

April 6, 2020
SenthilBalaji-DMK

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி: திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி..

July 15, 2022
திமுக விற்கு அழிவு காலம் ஆரம்பம் நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் பா.ஜனதா கட்சி கொடியேற்று நிகழ்ச்சி

திமுக விற்கு அழிவு காலம் ஆரம்பம் நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் பா.ஜனதா கட்சி கொடியேற்று நிகழ்ச்சி

August 7, 2020
மகாராஷ்டிரா அரசில் மீண்டும் முட்டல் மோதல் கடுப்பில் சரத்பவார்

மகாராஷ்டிரா அரசில் மீண்டும் முட்டல் மோதல் கடுப்பில் சரத்பவார்

February 15, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x