தினம் தோறும் அதிகரிக்கும் போதை ஆசாமிகளின் தொல்லை. மக்களை மட்டுமல்ல காவல் பணியில் இருப்பவர்களையம் அச்சுறுத்திவருகிறது. திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் அரசு மருத்துவமனையில் ஈடுபட்டிருந்த காவலரை போதை இளைஞர் வீண் வம்புக்கு இழுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிராஜன் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் மது போதையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இருவரும், மருத்துவர் இல்லை என தகராறு செய்துவிட்டு, காயத்துக்கு உரிய டிஞ்சரை எடுத்து போட்டுள்ளனர். அதன்பின் தலைக்கேறிய மதுபோதையின் காரணமாக அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் தகாத வார்த்தைகளில் பேசி, அவரை வீண் வம்பு இழுத்து அவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தனர்.
இந்த காட்சியை அந்த மருத்துவமனைக்கு வந்த நபர் தன்னுடைய அலைபேசியில் எடுத்து அதனை இணையத்தில் பரப்பி உளளார், அந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.காவலரை தகாத வார்த்தைகளில் பேசி வீண் வம்பு இழுத்த அரவிந்தன் மற்றும் ஹரிராஜன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















