தீராத நோய் கூட, தீரும்! நோயை விரட்ட, எளிமையான வழி

நாம் சம்பாதிக்கும் பணத்தை கொண்டுபோய், மருத்துவமனையில் கொட்டி தருகின்றோம். நம் உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கின்றது. மருந்து, மாத்திரை சாப்பிடாத மனிதர்களே பூலோகத்தில் குறைவு. பூலோகத்தில் கலிகாலம் முற்றிக் கொண்டே வருகிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். இதை ஆன்மீக ரீதியாக சொல்ல வேண்டும் என்றால், உகத்தில், ராகு கேதுவின் ஆட்சி குடிகொண்டு விட்டது.

உண்மையில்லாத தன்மை, நடிப்பு, பொய், ஏமாற்றம், இப்படிப்பட்ட பிரச்சனைகள் எங்கெல்லாம் அதிகமாகிக்கொண்டு இருக்கின்றதோ, அந்த இடத்தில் ராகு கேதுவின் ஆதிக்கம் குடிகொள்கிறது என்பது தான் உண்மை. தீராத நோய்களும், பசியும், பஞ்சமும், நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நாம் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? நம்முடைய உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளவும், தீராத வியாதியை தீர்த்துக் கொள்ளவும், செய்யவேண்டிய எளிமையான, பரிகாரம் தான் இது. இந்த பரிகாரம் செய்தால் நோய் தீர்ந்து விடும் என்ற சந்தேகத்தோடு பரிகாரத்தை யாரும் செய்ய வேண்டாம். முழு நம்பிக்கையோடு செய்து வந்தால் கை மேல் பலன் நிச்சயம் உண்டு.

இன்று நாம், நரசிம்மர் வழிபாட்டை பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். நரசிம்மர், சுவாதி நட்சத்திரத்திற்கு உரியவர். ராகுவை ப்ரீதி செய்யக்கூடியது, சுவாதி நட்சத்திரம். ஆகவே, நரசிம்மர் வழிபாட்டை திங்கட் கிழமையும், சனிக்கிழமையும் செய்வது மிகவும் விசேஷமானது. உங்களுக்கு நீண்ட நாட்களாக உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருந்து கொண்டு வந்திருந்தால், தொடர்ந்து நீங்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுபவர்களாக இருந்தால், கட்டாயம் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது ஒரு வகையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நரசிம்மருக்கு மஞ்சளையும், தேனையும்(தேன்), தானமாக வழங்க வேண்டும். குறிப்பாக திங்கள்கிழமை மற்றும் சனிக்கிழமை இந்த தானத்தை செய்து, அந்த மஞ்சள், தேனைக் கொண்டு நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து, அந்தத் தேனை, ஒரு சொட்டு வாங்கி நீங்கள் நாக்கில் தடவிக் கொண்டால் கூட போதும். அது உங்களுக்கு இருக்கக்கூடிய பிணியை நீக்கும். மருத்துவர்களால் கைவிடப்பட்ட உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கூட நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும். நரசிம்மரை வழிபட்டால் பிரச்சினை தீரும்.

இந்த பரிகாரத்தை இத்தனை வாரங்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் நரசிம்மரை தரிசனம் செய்து வாருங்கள். வழிபாடு செய்யுங்கள். உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மட்டுமல்ல, உங்களுடைய மன குழப்பங்களுக்குக் கூட நல்ல தீர்வு தரும் அம்சம் கொண்டவர் நரசிம்மர். ஆம். (நரசிம்மரே ஆக்ரோஷமான தெய்வம்! அவரை வணங்கினால் மனம் அமைதி அடையுமா?) கட்டாயம் அமைதி கிடைக்கும். நீங்கள் முன்கோபக்காரராக இருந்தாலும், எல்லோரையும் எதிர்த்து பேசுபவர்களாக இருந்தாலும், 48 நாட்கள் தொடர்ந்து நரசிம்மர் வழிபாட்டை செய்தால்! உங்கள் சுபாவம், நிச்சயம் அமைதியானதாக மாறும்.

Exit mobile version