போலி முகநூல் கணக்கிற்கு ஆப்பு! 24 மணி நேரத்திற்குள் போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும்! மத்திய அரசு அதிரடி!

ஒரு போலி கும்பல் பல போலி முகநூல் முநூல் மற்றும் சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி சாட் செய்து மூலம் நண்பர்கள் வட்டாரத்தில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு ஏமாற்றுகின்றனர். இது தொடர்பாக பல புகார்கள் காவல் நிலையத்தை அளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த குற்றசெயல்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தான் மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டுவந்துள்ளது. புதிய தகவல் தொழிநுட்ப சட்டத்தின் படி சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் குறித்து, சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும்’ என, மத்திய அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

உலகம் முழுவதும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெண்களிடையே பாலியல் துன்புறுத்தல்கள், பண மோசடிகள், நாட்டிற்கு எதிரான கருத்துக்கள். சாதி மத ரீதியான பதிவுகளால் ஏற்படும் சண்டைகள் என சமூக வலைத்தளங்கள் குற்ற செயல்களின் கூடாரமாக மாற்றியுள்ளார்கள் குற்றவாளிகள். இதனை இந்தியாவில் கட்டுப் படுத்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை, மத்திய அரசு சமீபத்தில் நடைமுறைப்படுத்தியது.

முகநூல் டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உட்பட கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பெயரில் கணக்குகள் வைத்துள்ளனர்.பிரபலங்களின் கணக்கு களில் இருந்து புகைப்படங்களை எடுத்து, அவர்கள் பெயரில் போலியான கணக்குகளை துவங்கும் போக்கு பரவலாக உள்ளன.குறிப்பிட்ட பிரபலங் களின் சமூக வலைதள கணக்கு என தவறாக நினைத்து, அதை பலர் பின்தொடர்வதும் நடக்கிறது.

சாமானியர்களின் புகைப்படங்களை திருடி, அவர்கள் பெயரில் போலி கணக்குகள் துவங்கி, அவர்களின் நண்பர்கள் வட்டத்தில் பணம் கேட்டு மோசடி செய்யும் போக்குகளும், சமீபநாட்களாக அதிகரித்து உள்ளன.இதற்கு முடிவுகட்டும் விதமாக, தகவல் தொழில்நுட்ப விதிகளில் புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.’சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பயனாளர்களின் பெயர்களில் துவங்கப்படும் போலி கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால், 24 மணி நேரத்திற்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும்’ என, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version