Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அரசு மருத்துவமனையில் மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்! கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடும் அவலம்

Oredesam by Oredesam
April 30, 2024
in செய்திகள், தமிழகம்
0
tablet Govt Hospital,

tablet Govt Hospital,

FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நிர்வாக சீர்கேடு அதிகரித்து வருகிறது வேற்று விளம்பரங்களால் மட்டுமே ஆட்சியை நடத்தி வருகிறது ஸ்டாலின் அரசு. அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தாமல் கோதுமை பீரை அறிமுகம் செய்கிறது தமிழக அரசு. ஒரு பக்கம் கஞ்சா போதை பொருள் புழக்கத்தில் இளம் தலைமுறையினர் சீரழிந்து வருகிறார்கள். இன்னொருபக்கம் நிர்வாக சீர்கேட்டினால் மக்கள் பெரும் பாதிப்புக்களை சந்தித்து வருகிறார்கள்.

தேனி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு மருத்துவமனையில் அலட்சியமாக வழங்கப்பட்ட மாத்திரையால் அவரது கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது. திராவிட ஆட்சியில் மக்களின் உயிருக்கு உலைவைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் தான் கட்டிட தொழிலாளியான ராமராஜ். இவருக்கு ஆதிபராசக்தி என்ற மனைவியும் 14வயதில் சந்தோஷ் என்ற மகனும், 13 வயதில் திவானி என்ற மகளும் உள்ளனர். ராமராஜின் வருமானத்தை நம்பி மட்டுமே அவரது குடும்பம் இயங்கி வந்த நிலையில் தான், கடந்த 2018 ஆம் ஆண்டு ராமராஜுக்கு புற்று நோய் அறிகுறி ஏற்பட்டுள்ளது

இதனால் குடும்பத்தினர் தவியாய் தவித்த நிலையிலும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நரம்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து கதிர் வீச்சு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்த நிலையிலும் மூளையில் புற்றுக் கட்டி வளர்ந்தது எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் உறுதியானது.

இதனைத் தொடர்ந்து ஆபரேசனுக்குப் பின்னர் புற்று நோய்க்கான மருந்துகளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாங்கிப் பயன்படுத்தி வந்த நிலையில், ராமராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தானாக நடப்பது, தன்னுடைய வேலைகளை செய்வது என ஆரோக்கியமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் செப்டம்பர் 11ஆம் தேதி பூதிப்புரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ((T.Telmisartan 1od,T.Svp 1tds,T.Eptoin 2hs
T.Bct 1od,)) கொடுத்த சில மாத்திரைகளை எழுதப் படிக்கத் தெரியாத ராமராஜின் மனைவி வாங்கி வந்து கணவருக்கு கொடுத்துள்ளார். இந்த மருந்துகளை பயன்படுத்த தொடங்கிய முதல் நாளிலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தவர், தொடர்ந்து பயன்படுத்தியதில் கை, கால்கள் செயல்படாமல் போயுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைவியில் விசாரித்தபோது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரப்பட்ட பிரஷர் மாத்திரையைப் பயன்படுத்தியதால்தான் இந்த பிரச்சனை வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பூதிப்புரம் அரசு மருத்துவமனையில் சென்று விசாரித்தபோதும் அவர்கள் அலட்சியமாகப் பதில் அளித்ததால், பாதிக்கப்பட்ட ராமராஜுடன் அவரது குடும்பத்தினர், தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாமுக்கு வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியர் சஜீவனாவிடம் புகார் அளித்த நிலையில் அவர், சுகாதாரத்துறை அலுவலர்களை விசாரிக்குமாறு அனுப்பியுள்ளார்.

ஆனால் அவர்களோ தங்கள் தரப்பில் தவறில்லை என்று கூறி வாக்குவாதம் செய்த நிலையில், ராமராஜின் குடும்பத்தினர், சிகிச்சைக்கான ஆவணங்களை எடுத்துக் காட்டி விளக்கியுள்ளனர். இதனால் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என கூறிவிட்டு கண்டு கொள்ளாமல் சென்றுள்ளனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சஜீவனா, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் தான் பேசி உள்ளதாகவும், உடனடியாக ராமராஜை அங்கு கொண்டு சென்று அனுமதிக்குமாறும் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு செவ்வாய்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட ராமராஜுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதனிடையே அட்சியர் சஜீவனா, பூதிப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் விசாரித்தபோது தங்கள் மீது தவறு இல்லை என்பதைப் போல மறைத்து பேசியதாக மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமராஜின் சகோதரி மகேஸ்வரியை நியூஸ் ஜெ செய்தியாளர் சந்தித்து பேசியுள்ளார். இதனை கண்ட மருத்துவமனை மருத்துவர்களும், ஊழியர்களும் தொலைக்காட்சிக்கு பேட்டியா கொடுக்கிறீர்கள்? உங்களுக்கு இங்கே சிகிச்சை அளிக்க முடியாது மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என மிரட்டியதாக கூறப்படுகிறது. விடியா அரசின் மருத்துவத்துறையின் அலட்சியத்தால் ஏழைத் தொழிலாளியின் குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதற்கு கண்முன் சாட்சியாக இருக்கிறது ராமராஜின் குடும்பம். இதற்குப் பிறகாவது அவர்களுக்கான உரிய நடவடிக்கைகளைஎடுக்க மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர்!

திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர்!

October 17, 2021
கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் .

சிவசேனா ஆட்சி காலி ! விரைவில் மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி.

June 22, 2022
திமுகவில் 90% இந்துக்கள் இருப்பதாக கூப்பாடு  போடும் ஸ்டாலின் ஏன்  கிருஷ்ணஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை….

மக்களை காப்பாற்ற தவறிய ஸ்டாலின்! உலக அளவில் கப்பலேறிய தமிழக மானம்! யார் இந்த ஸ்டாலின் தற்போது வைரல் !

June 10, 2021

Supreme London Offers Reward for IDing Man Who Damaged Store Sign

January 10, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x