இன்றைய திமுக நிலவரம் : ஓசியில் மளிகை பொருட்கள் தராததால் மாளிகைக்கடைக்காரரை மட்டை செய்ய முயன்ற திமுக நிர்வாகியின் மகன்

தி.மு.க தினமும் ஒரு அட்டகாசசெயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் இது தின செய்தியாகவே ஆகிவிட்டது இவ்வாறு வானிலை நிலவரம் போல தி.மு.க இன்று என்ன செய்தது என்ன நெட்டிசன்கள் தேட ஆரம்பித்தார்கள் ஏனென்றால் தமிழகத்தில் தி.மு.க வின் அராஜகம் அதிகரித்து வருகிறது. மேலும் ஆட்சியில் இல்லாத போதே ஆட்சிக்கு வந்து விடுவோம் என்ற கனவில் இவ்வாறு அடாவடிகள் ரவுடிசம் செய்து வருகிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பார்த்தால் பல அடாவடி சம்பவங்களில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர் அந்த வரிசையில் நேற்றைய தினம் கடலூர் முதுநகரில் ராஜா என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார், அதே பகுதியே சேர்ந்த தி.மு.க பிரமுகரின் மகன் இமயன் என்பவர் ராஜா’வின் மளிகை கடையில் ஓசிக்கு மளிகை சாமான் கேட்டு அரிவாளை வீசி மிரட்டியுள்ளார்.

தி.மு.க பிரமுகரின் மகன் அவர் பெயர் இமயன் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார் அங்கு மளிகை பொருள் வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் சென்றுள்ளார் பணம் கேட்ட கடைக்காரரை மிரட்டியுள்ளார் இமயன். அதுமட்டுமில்லாமல் இமயன் கொண்டுவந்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.இதற்கு முன்னும் இதேபோல் பிரச்சனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் திமுக நிர்வாகியின் மகன் தகுந்த ஆதாரங்களோடு காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை அந்த தைரியத்தில் தான் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.

இதன்பின் கடைக்காரர் உயர் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்துள்ளனர் அங்கு பதியப்பட்ட சிசிடிவி காட்சிகளை அமைப்பு விசாரித்ததில் இமயன் என்ற திமுக நிர்வாகி மகனை கைது செய்து விசாரணை செய்து அனுப்பி உள்ளார் இதற்கு எப்போ தான் விடிவுகாலம் பிறக்குமோ ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு ரவுடிசம் என்றால் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்

Exit mobile version