Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நீதிமன்றத்தை மதிக்காத தமிழக அரசு… மொத்தமாக முடித்த சம்பவம்.. இனி அப்படி நடந்தால் தகுதி நீக்கம் தான்…

Oredesam by Oredesam
March 13, 2025
in செய்திகள்
0
இதுதாங்க சம்பவம்! தமிழகத்தின் தலைமை நீதிபதி மாற்றம்! உத்திர பிரேதேசத்திலிருந்து வரும் புதிய நீதிபதி! பீதியில் குற்றவாளிகள்!
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் நிறைய வழக்குகளில் எதிர் மனுதாரராக அரசுதான் இருக்கிறது. அரசு எடுத்த ஒரு தவறான நடவடிக்கைக்கு நிவாரணம் வேண்டி, அரசு இழைத்த அநீதிக்கு நியாயம் வேண்டி, பலரும் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். நியாயமாக, ஒருவர் நீதிமன்றத்துக்கு வர வேண்டிய தேவை இல்லாமலே அதைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால், வழக்குகளை இழுத்தடிப்பதும், பாதிக்கப்பட்டவர்களை வஞ்சிப்பதும், மேல் முறையீடு என்ற பெயரில் நீதியைத் தடுக்க முயல்வதும் நடக்கிறது. அதற்கு உதாரணம், சமீபத்தில் தமிழ்நாடு அரசு தொடுத்த ஒரு மேல்முறையீட்டு வழக்கு.

சென்னை வேப்பேரியில்‌ உள்ள அரசு உதவிபெறும்‌ கல்லூரியில்‌ தூய்மைப் பணியாளர்‌ நியமனத்துக்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல்‌ வழங்கவில்லை. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிபதி ‘உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தாமல்‌, தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர்‌ மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நான்கு வாரங்களில் அமல்படுத்த உத்தரவிட்டதோடு, ஏற்கெனவே தீர்வு காணப்பட்ட விவகாரத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்ததற்காக ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்தது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இதேபோல இன்னொரு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி தேவானந்தம், ‘‘நீதிமன்ற உத்தரவுகளைத் தமிழ்நாடு அரசும் அதிகாரிகளும் மதிப்பதாகத் தோன்றவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என்று அரசு உறுதிபூண்டது போல் இருக்கிறது” என்று விமர்சித்தார். நீதிமன்ற உத்தரவுகளை அரசு நிறைவேற்றாதபோது, சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க மீண்டும் நீதிமன்றம் வருகிறார்கள். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம்.

இந்திய நீதிமன்றங்கள் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளால் திணறிக்கொண்டிருக்கின்றன. கடந்த 2023 ஜூலையில் ஒரு முக்கியமான மைல்கல்லை இந்திய நீதித்துறை தொட்டது. முதல்முறையாக இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அப்போது 5 கோடியாக உயர்ந்தது. விசாரணை தாமதமாவது ஒரு காரணம் என்றாலும், போதுமான நீதிமன்றக் கட்டமைப்புகளை உருவாக்காமல் போனது, காலிப் பணியிடங்களை முறையாக நிரப்பாதது என அரசுகளே அதற்கும் மறைமுகக் காரணமாக இருக்கின்றன.

ஏற்கெனவே வழக்குகளால் திணறும் நீதிமன்றங்களை அநாவசிய மேல்முறையீடு என்ற பெயரில் அரசுகளே மேலும் சிக்கலுக்குள்ளாக்குவது, முக்கியமான பிரச்னைகளில் இருந்து திசை திருப்பிவிடும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் சம்பந்தப்பட்டவர்கள் நெடுங்காலம் மன உளைச்சலோடு காத்திருக்க வேண்டியுள்ளது. இது நிர்வாகத்தையும் நீதிமன்றங்களையும் மட்டுமன்றி, தனி மனிதர்களையும் பாதிக்கும் பிரச்னையாக இருக்கிறது.

அதிகாரிகள் மக்களிடம் ஈகோ காட்டாமல், மனசாட்சிப்படியும் சட்டத்துக்கு உட்பட்டும் செய்ய வேண்டிய விஷயங்களைத் தயங்காமல் செய்தாலே பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்துவிடும். எல்லாவற்றுக்கும் நீதிமன்றங்களைத்தான் நாட வேண்டும் என்பது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல. நீதியைத் தாமதிப்பதும், நீதியை மறுதலிப்பதே ஆகும்.இவ்வாறு இனியும் நடனத்தால் தகுதி நீக்கம் தான்..

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

2G ஆ.ராசா மீது புதிய வழக்கு தொடரும் சிபிஐ அடுத்த அதிரடியில் அரசியல்களம்.

2G ஆ.ராசா மீது புதிய வழக்கு தொடரும் சிபிஐ அடுத்த அதிரடியில் அரசியல்களம்.

October 2, 2021
கொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்.

தமிழக மக்களுக்கு ஓர் அதி முக்கிய வேண்டுகோள் மற்றும் ஒரு முக்கிய எச்சரிக்கை! 10 நாட்களுக்கு நாம் என்ன செய்யலாம் !

March 24, 2020
ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்ல- ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.

ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்ல- ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.

November 16, 2022
balochistan

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x