Breaking: இந்து முன்னணி போராட்டம் வெற்றி! பிரியாணி கடை சீல் வைக்கப்பட்டது. கோயில் மீண்டும் திறக்கப்பட்டது

சென்னை அருகே மந்தவெளி மார்க்கெட் பகுதி உள்ளது இந்த மார்க்கெட் பகுதி அருகில் பழமைவாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது மிகவும் பழமையான கோவிலாகும் இந்த கோவிலில் ஆடிமாத நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த நிலையில் அக்கோவிலில் ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டது

அந்த அறிவிப்பில் : கோயிலின் அருகினிலே அசைவம் சமைத்து, விற்பதனால், அதனால் ஏற்படும் தர்ம சங்கடங்களால் கோயில் மூடி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.கோயில் அருகில் அசைவம் சமைக்கப்படுவதால், குருக்கள், பக்தர்கள் வர தயங்குகிறார்கள். இந்த கோயில் நேற்று திறக்கப்பட்டு இருந்த நிலையில், அருகில் அசைவம் சமைக்கப்படுவதால் இன்று முதல் தற்காலிகமாக பூட்டப்பட்ட்டு இருந்தது

இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவிலை திறக்க வேண்டும் என அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் மேலும் இந்து முன்னணி மற்றும் இந்த சங்கங்கள் ஒன்றிணைந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறியுள்ளார்கள்.

சென்னை மந்தைவெளி மார்க்கெட் அருகே தண்டு மாரியம்மன் கோவில் வாசலில் இஸ்லாமியர் பிரியாணி செய்து விற்பனை செய்து அராஜகம்.தடுக்க இயலாத வேதனையில், கோவிலுக்கு பூட்டு போட்டார் பூசாரி.இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தலையீட்டால் மீண்டும் கோயில் திறக்கப்பட்டு உள்ளது. அருகில் செயல்பட்டுவந்த பிரியாணி கடை சீல் வைக்கப்பட்டது.

Exit mobile version