Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

போலி பட்டா மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட ₹60 கோடி கோவில் நிலம் மீட்பு!

Oredesam by Oredesam
February 9, 2021
in செய்திகள், தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள மிகப் பழமையான சிவன் கோவில் அமைந்த ஊர்.

இங்கு தானம் அளித்தவர்களுக்கு வாரிசு இல்லாததைப் பயன்படுத்தி தனிநபர் ஆக்கிரமிப்பு.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

காசி-ராமேஸ்வரம் புனிதப் பயணம் செய்ய பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாதையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது

இந்து முன்னணியின் முயற்சியால் தானமாக வழங்கப்பட்ட கோவில் நிலத்தை ஆக்கிரமித்திருந்த தனியாரிடம் இருந்து கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. செய்யூர் தாலுகா கடப்பாக்கம் கிராமத்தில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது.

காசி-ராமேஸ்வரம் புனிதப் ‌பயணம்‌ மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட பழமையான வழிப் பாதையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவில் கடந்த 1903ஆம் ஆண்டு நரசிம்மாச்சாரி என்பவரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. காசி-ராமேஸ்வரம் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அன்னதானம் அளிக்க சத்திரம் கட்டிய அவர், அதற்கு தேவையான உணவுப் பொருட்களை விளைவிக்க கோவிலைச் சுற்றியுள்ள 18.5 ஏக்கர் நிலத்தை தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இதில் 14.90 ஏக்கர் புஞ்சை நிலம், 4.04 ஏக்கர் நஞ்சை நிலம். நரசிம்மாச்சாரி இறந்த பின்னர் அவரது மகன் கோவிந்தாச்சாரி, மகள் புஷ்பம்மாள் ஆகியோரும் வாரிசுகள் இல்லாமல் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

காலப்போக்கில் வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப் பட்டதால் இந்த வழிப்பாதை பயனற்று போயிருக்கிறது.

இதனால் கோவில் பழைய பொலிவை இழந்த நிலையில், கோவிலுக்கு எழுதிக் கொடுத்த நிலத்தின் பட்டா 50 வருடத்திற்கும் மேல் ‘நரசிம்மாச்சாரி வாரிசுகள்’ என்ற பெயரில் தனி நபர்கள் சிலரால் அனுபவிக்கப்பட்டு வந்துள்ளது.

தனியார் நிர்வாகத்தில் கிராமக் கோவிலாக செயல்பட்டு வந்த இந்தக் கோவிலை 2008ஆம் ஆண்டு வாக்கில் இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு வாரிசுகள் என்று இருந்த பட்டாவை ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பெயரில் மாற்றம் செய்துள்ளனர். மேலும் வேறு சிலருக்கு அந்த சொத்துக்களை 99 வருட குத்தகைக்கு விட்டுள்ளனர்.

இது குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்த அப்பகுதியில் வசித்து வரும் பக்தர்கள் ஆலய நில மீட்பு குழு அமைத்து பல ஆண்டுகளாக நிலத்தை மீட்க போராடி வருகின்றனர்.

ஆலய நில மீட்பு குழுவினர் உரிய ஆதாரங்களுடன் நிலத்தை மீட்க முயற்சித்தும் எதிர்தரப்பினர் வராததால் தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்துள்ளது.

பின்னர் வட்டாட்சியர் நில உரிமையாளர் குறித்து ஆய்வு செய்தபோது கிராம கணக்கு பதிவேட்டில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் கணினியில் மட்டும் பட்டா மாற்றம்‌ செய்திருந்ததை கண்டறிந்துள்ளார்.

கிராம கணக்கு சிட்டாவில் பதிவு செய்யாமல் கணினியில் மட்டும் சிட்டா மாற்றம் செய்து முறைகேடாக வாரிசுதாரர்கள் மாற்றப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டதால் போலியாக பதியப்பட்ட பட்டாவை ரத்து செய்தும் கோவிலின் பெயரில் புதிதாக பட்டா பதிவு செய்தும் தரக்கோரி நில மீட்பு குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பட்டா மாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்ட வட்டாட்சியர் அதுகுறித்து கோவிலின் முன் அறிவிப்பு பலகையும் வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால் அதன் பின்னர் கோவில் பெயரில் பட்டா பதிவு செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படாததால் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தை முறைகேடாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

நிலத்தை மீட்க அறநிலையத்துறை அக்கறை காட்டாததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்த நிலையில், இந்து முன்னணி மற்றும் ஆலய மீட்பு குழுவின் தொடர் முயற்சியால் தற்போது நரசிம்மாச்சாரி கோவிலுக்கு என்று எழுதிக் கொடுத்த 18.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட நிலத்துக்கு கோவிலின் பெயரில் பட்டா பதிவு செய்த அதிகாரிகள் தற்போது இந்த நிலத்தின் மதிப்பு 60 கோடி என்று தெரிவித்துள்ளனர்…..

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திருக்கோவில்களுக்குள் திருக்குறள் ? ஆலயங்களுக்குள் (தென்) அரசுக்கு என்ன வேலை? கிருஷ்ணசாமி சுளீர்!

திருக்கோவில்களுக்குள் திருக்குறள் ? ஆலயங்களுக்குள் (தென்) அரசுக்கு என்ன வேலை? கிருஷ்ணசாமி சுளீர்!

September 2, 2021
ஆவடி அருகே சிப்காட்டிற்காக 10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா அன்புமணி ராமதாஸ் ஆவேசம் !

ஆவடி அருகே சிப்காட்டிற்காக 10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா அன்புமணி ராமதாஸ் ஆவேசம் !

October 22, 2024
கொரோனவால் முதல் உயிரிழப்பு தமிழகத்தில்! இறந்தவரின் வீடிருக்கும் பகுதி சீல் !

கொரோனவால் முதல் உயிரிழப்பு தமிழகத்தில்! இறந்தவரின் வீடிருக்கும் பகுதி சீல் !

March 25, 2020
ஜெய்பீம் சூர்யா’வின் முகத்திரையை கிழித்த நிஜ ‘செங்கேனி’ – எங்களுக்கு ஏதும் செய்யவில்லை” !

ஜெய்பீம் சூர்யா’வின் முகத்திரையை கிழித்த நிஜ ‘செங்கேனி’ – எங்களுக்கு ஏதும் செய்யவில்லை” !

November 15, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x