Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

திமுக மற்றும் இண்டி கூட்டணி தொடர்ந்து இந்து தெய்வங்களை இழிவு படுத்துகின்றன பிரதமர் மோடி ஆவேசம் !

Oredesam by Oredesam
March 19, 2024
in அரசியல்
0
திமுக மற்றும் இண்டி கூட்டணி தொடர்ந்து இந்து தெய்வங்களை இழிவு படுத்துகின்றன பிரதமர் மோடி ஆவேசம் !
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாநகரில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், பெரும் திரளென, ஆர்ப்பரிப்புடன் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி எழுச்சி உரையாற்றினார்.

அப்பொழுது அவர் பேசியதாவது கோட்டை மாரியம்மனை வணங்கித் தொடங்கிய தனது உரையில், தமிழகத்தில், தமக்கும், பாஜகவுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும், நாடே இன்று கவனித்துக் கொண்டிருக்கிறது என்று பெருமையுடன் குறிப்பிட்ட நமது பிரதமர் அவர்கள், இதனால் திமுக தனது தூக்கத்தைத் தொலைத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

வரும் ஏப்ரல் 19 தேர்தல் அன்று, ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று கூறிய நமது பிரதமர் அவர்கள், தேசிய அளவில் 400 தொகுதிகளுக்கும் மேல் நிச்சயம் வெற்றி பெறப் போகிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு, வளர்ச்சியடைந்த தமிழகத்துக்கு, நவீன உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாக, பாரதம் தன்னிறைவு பெற, விவசாயிகள் பயனடைய, மீனவர்கள் பாதுகாப்புக்கு, என, இம்முறை 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்று உறுதி தெரிவித்தார்.

தமிழகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக உருவாகியிருக்கிறது என்று கூறிய நமது பிரதமர், பாமக நிறுவனர் ஐயா ராமதாஸ் அனுபவமும்,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆற்றலும், தமிழகத்தை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல உதவும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்த நமது பிரதமர், பாட்டாளி மக்கள் கட்சியை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

தாம் பல முறை சேலம் வந்திருப்பதாகக் குறிப்பிட்ட நமது பிரதமர் அவர்கள், இம்முறை சேலத்திற்கு வரும்போது, தம்முடைய கைலாஷ், மானசரோவர் பயணத்தின்போது உடன் வந்த,

சேலத்தைச் சேர்ந்த அமரர் திரு ரத்தினவேல் அவர்களை நினைவு கூர்ந்தார். சேலம் மாநகரின் சிறப்புக்களைக் குறித்து அமரர் திரு. ரத்தினவேல் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின், சேலம் மாநகரின் மீது பெரும் ஈர்ப்பு உருவானதாகத் தெரிவித்தார்.

சேலம் மாநகரத்தைச் சேர்ந்த, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அமரர் K.N.லட்சுமணன் அவர்களை நினைவுகூர்ந்த நமது பிரதமர் அவர்கள், நெருக்கடி நிலையின்போது கூட, தடைகளை மீறிப் போராட்டம் நடத்தியவர்,

தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்காக, ஆரம்ப காலத்தில் பாடுபட்டவர், என்று புகழாரம் சூட்டினார். மேலும், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷ் அவர்களை நினைவுகூர்ந்தபோது, கண்கலங்கிய நமது பிரதமர் அவர்கள், கட்சிக்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஆடிட்டர் ரமேஷ் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்.

திமுக காங்கிரஸ் அமைத்துள்ள இந்தி கூட்டணியின் நோக்கம், இந்து மதத்தை அழிப்பது மட்டுமே என்பது, அவர்களின் முதல் கூட்டத்தில் இருந்தே தெளிவாகிவிட்டது என்று கூறிய நமது பிரதமர் அவர்கள், இந்து மதத்தில் சக்தி வழிபாடு எத்தனை முக்கியமானது என்பதைப் பற்றிப் பேசிய நமது பிரதமர், கோட்டை மாரியம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மன், சமயபுரம் மாரியம்மன் என, நமது வழிபாடே பெண்களை முன்னிறுத்திய சக்தி வழிபாடாகத்தான் இருக்கிறது.

ஆனால், திமுக காங்கிரஸ் இந்தி கூட்டணியின் நோக்கம் சக்தி வழிபாட்டை அழிக்க முயற்சிப்பதே என்றும் குற்றம் சாட்டினார். வேண்டுமென்றே, இந்து மதத்தை அவமதிப்பதும், திட்டமிட்டு, இந்து மதத்துக்கு மட்டுமே எதிராகச் செயல்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்திக் கூட்டணிக் கட்சிகள், தமிழர்களின் பாரம்பரியமான, இந்து மத அடையாளமான செங்கோலை, புதிய நாடாளுமன்ற மையக்கட்டிடத்தில் வைப்பதை தடுக்க முயற்சித்தார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

கடவுளை பெண்வடிவில் சக்தியாக, பாரத அன்னையாக வழிபட்ட மகாகவி பாரதியார் வழியில், தாமும் ஒரு சக்தி உபாசகர் என்று குறிப்பிட்ட நமது பிரதமர் அவர்கள், சக்தி வழிபாட்டை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் அழிந்து போனதுதான் வரலாறு என்று குறிப்பிட்டார். மேலும், இந்தி கூட்டணியின் அழிவு,

ஏப்ரல் 19 அன்று முதல் கட்டத் தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கப்போகிறது என்று உறுதியுடன் தெரிவித்தார்.

சக்தியின் வடிவமான நமது சகோதரிகளுக்கு, புகையில்லா சமையல் செய்ய, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, இலவச மருத்துவ சிகிச்சைக்காக ஆயுஷ்மான் திட்டம், தமிழகத்தில், மூன்று கோடியே 65 லட்சம் பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள்,
வீடுதோறும் சுத்தமான குடி நீர் தரும் ஜல்ஜீவன் திட்டம், நாட்டிலேயே முத்ரா கடனுதவி அதிகம் வழங்கப்பட்ட தமிழகத்தில், பெண்கள்தான் அதிகம் பயனடைந்துள்ளனர் என்று குறிப்பிட்ட நமது பிரதமர், பெண்களுக்கான இந்த நலத்திட்டங்களால் பலனடைந்த நாடு முழுவதும் உள்ள பெண்கள்தான் தமக்கும், பாஜகவுக்கும் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!
அரசியல்

குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!

August 28, 2025
தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!
அரசியல்

தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!

August 28, 2025
AI மூலம் எடிட்செய்து மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு-ஆதாரத்தை வெளியிட்ட நயினார்நாகேந்திரன்
அரசியல்

AI மூலம் எடிட்செய்து மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு-ஆதாரத்தை வெளியிட்ட நயினார்நாகேந்திரன்

August 21, 2025
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்தா? மத்திய ரிசர்வ படை பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவு!
அரசியல்

நெல்லையில் மாநாட்டில் அமித்ஷா ! தமிழக அரசியலில் அடிக்கப்போகும் சூறாவளி இதுதானாம் !

August 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சீனா… சிதறி… உடையும்…. சீனாவுக்கு கட்டம் கட்ட தொடங்கி விட்டது ஐரோப்பா

அமெரிக்கா அதிரடி ! சீனாவில் செய்யப்பட்ட முதலீடுகள் திரும்பபெறப்படும் !

May 15, 2020
காம லீலைகள் புகாரில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி! 21 பேராசிரியர்களின் கதி என்ன! திடுக்கிடும் தகவல்கள்!

காம லீலைகள் புகாரில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி! 21 பேராசிரியர்களின் கதி என்ன! திடுக்கிடும் தகவல்கள்!

September 21, 2021
ஒரு பக்கம் அண்ணாமலை… ஒரு பக்கம் ஆளுநர்… திராவிட மாடல் ஆட்சி அந்தரத்தில்…

ஒரு பக்கம் அண்ணாமலை… ஒரு பக்கம் ஆளுநர்… திராவிட மாடல் ஆட்சி அந்தரத்தில்…

April 29, 2022

ஆட்டத்தை துவக்கிய ஆளுநர்! டி.ஜி.பி சைலேந்திரபாபுவுடன் முதல் சந்திப்பு! பயங்கரவாதிகள் பைல்களை கேட்ட ஆளுநர்! அப்போ அந்த 700 பேர் ரீலிஸ்?

September 22, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x