Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு அதிரடி தடை விதித்த இந்தியா! அடுத்து இங்கதான் முக்கிய முடிவெடுத்த இந்தியா!

Oredesam by Oredesam
April 28, 2025
in இந்தியா, செய்திகள்
0
YouTube

YouTube

FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானின் Dawn, Samma TV, Ary News உட்பட 16 ஊடகங்களின் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் யூ டியூப் சேனலும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் தடை செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு7 காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவிகளை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல்கள், மத உணர்வைத் தூண்டும் வகையில், தவறான, பொய்யான தகவல்களை பரப்புவதால் மத்திய அரசு தடை விதித்துள்ளது.பாகிஸ்தானின் முன்னணி ஊடகங்களான DAWN, SAMMA TV, ARY NEWS, GEO NEWS உள்ளிட்டவைகளின் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல், விளையாட்டு உள்ளிட்டவை தொடர்பானவை இந்த டிவி சேனல்கள்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தரின் யூடியூப் சேனல் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. அவரது யூடியூப் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேசப் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்திய அரசு விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோயப் அக்தரின் யூ டியூப் சேனலும் பல லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் யூடியூப்களை கணக்கெடுக்கும் பனி தீவிரமடைந்து வருகிறது

இது ஒருபுறம் என்றால் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக ராணுவம் மற்றும் காவல்துறை தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். ராணுவத்தினர் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் அனுதாபிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்டன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 48 மணி நேரத்தில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட 5 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதி செயல்களிலும் ஈடுபடுவோர் அல்லது துணை செல்வோருக்கு இதே நடவடிக்கைகள் தொடரும். முக்கியமாக அனந்த்நகரில் உள்ள மோஸ்ட் வான்டட் தீவிரவாதிகள் ஆதில் தோகீர், அசீப் ஷேக் ஆகியோரின் நெட்வொர்க்கை தீவிரமாக சோதனை நடத்தி வருகிறோம்.

இவர்களில் ஆதில் தோகீர் நேரடியாகவே பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. முக்கியமாக தெற்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு துணை செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட களப்பணியாளர்களை சுற்றி வளைத்துள்ளோம். அப்போது பந்திப்போரா பகுதியில் தீவிரவாதிகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கி சண்டையின்போது 2 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

அனந்த்நகர் முழுவதும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகளை அதிகரித்து சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். குல்காம் பகுதியில் 2 தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஶ்ரீநகரிலும் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறோம்.” என்றனர்.

சிந்து நதி நீர் நிறுத்தம், அட்டாரி – வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானும் பதிலுக்கு ஷிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. தங்கள் நாட்டு வான்பரப்பை இந்திய விமானங்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. அதுபோக எல்லையிலும் அடாவடியாக அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.

பாகிஸ்தானின் இந்த துப்பாக்கி சூடு நடவடிக்கைக்கு இந்தியாவும் தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தினால் பாகிஸ்தானில் பெரும் பஞ்சம் ஏற்படும் அபாயம் என்று கதறும் பாகிஸ்தானிய அதிகாரிகள், இந்தியாவின் இந்த எதிர்பாராத அடியை கண்டு மிரண்டு போயுள்ளனர். இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஓடும் ஜீலம் நதியில் திடீரென தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளது.

ஜீலம் நதியில் அதிக நீர் திறந்துவிட்டதாக வெளியாகும் தகவலை ஏற்கவோ, நிராகரிக்கவோ இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதேநேரத்தில் தண்ணீர் திறந்துவிடுவது என்பது வழக்கமான நடைமுறைதான் எனவும், ஜம்மு காஷ்மீரில் அதிக மழை பெய்ததால் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டதாகவும் சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பீர் பஞ்சல் தொடரில் ஜீலம் ஆறு உருவாகி, ஸ்ரீநகர் மற்றும் வுலர் ஏரி வழியாக பாய்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானை அடைகிறது.எனவே எல்லா வழிகளிலும் பாகிஸ்தானை சம்பவம் செய்து வருகிறது இந்தியா

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அற்பப் பதர்களே…அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள்-மருத்துவர் ராமதாஸ் ஆவேசம்.

அற்பப் பதர்களே…அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள்-மருத்துவர் ராமதாஸ் ஆவேசம்.

November 8, 2024
இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட DRDO !

இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட DRDO !

November 18, 2024
இந்தியாவின் சோதனையால் அரளும் நாடுகள் ! இந்த ஒன்னு போதும் 5,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரி காலி!

இந்தியாவின் சோதனையால் அரளும் நாடுகள் ! இந்த ஒன்னு போதும் 5,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரி காலி!

October 28, 2021
குரு பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி 2024 : கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x