Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

எல்லையில் இரு நாடுகளும் படைகளை விலக்கி கொள்ள முடிவு! இந்திய சீன ராணுவம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

Oredesam by Oredesam
June 23, 2020
in செய்திகள்
0
எல்லையில் இரு நாடுகளும் படைகளை விலக்கி  கொள்ள முடிவு!  இந்திய சீன ராணுவம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும் சீன இராணுவ வீரர்கள் எல்லை பகுதியில் இருந்து சற்று பின்வாங்குவதாக உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இந்தியா-சீனா ராணுவ படைப் பிரிவு தளபதிகள் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கை விலக்கிக் கொள்ள உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

கிழக்கு லடாக் எல்லையில், கால்வன் பள்ளதாக்கு, பாங்கோங்சோ ஏரி உள்ளிட்ட 5 இடங்களில் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில், சீன வீரர்களின் அத்துமீறலால், மே மாதம் 5ஆம் தேதி இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, கற்களை வீசிக் கொண்டதில் வீரர்கள் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடந்த 6ஆம் தேதி, இரு நாட்டு ராணுவ படைப் பிரிவு தளபதிகளின் நிலையில் நடத்தப்பட்ட பேச்சில், மோதல் போக்கை விலக்கிக் கொள்ள உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், இந்த உடன்பாட்டில் முறிவு ஏற்பட்டுத்தான், ஜூன் 15ஆம் தேதி மோதல் நிகழ்ந்து, இரு தரப்பிலும் உயிர் பலிகள் நேரிட்டன. உடன்பாட்டின்படி பின்வாங்கிச் செல்லாத சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் இறந்துள்ளார்கள் ஆனால் அதை சீனா மறைத்து வருகிறது.

இதன் பின் இருநாட்டு அரசும் படைகள் தொடர்ந்து குவித்து வந்தன . இந்நிலையில், இரு நாட்டு ராணுவ படைப் பிரிவுகளின் தளபதிகள் மட்டத்தில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சீனப் பகுதியில் மோல்டோ என்ற இடத்தில் நடைபெற்ற பேச்சில், இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் பங்கேற்றார். சீன தரப்பில் மேஜர் ஜெனரல் லியு-லின் பங்கேற்றார். முற்பகல் 11.30 மணிக்கு தொடங்கி, இரவு 11.45 மணி வரை 12 மணி நேரத்திற்கும் மேல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் நரவானே, இன்று லடாக் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு, அங்கு ராணுவ அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவதோடு, வீரர்களோடும் உரையாட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்தான், லெப்டினென்ட் ஜெனரல் நிலையில் 12 மணி நேரம் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை, சுமூகமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற்று உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உரசல் ஏற்பட்ட பகுதிகளில், மோதல் போக்கை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் படி அமைச்சர் சேகர் பாபு கெஞ்சிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் படி அமைச்சர் சேகர் பாபு கெஞ்சிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

May 9, 2022

இந்தியாவில் கொரோனா குணமடைந்தோர் விகிதம் 52.47 விழுக்காடாக அதிகரிப்பு.

June 16, 2020
திமுக கூட்டணி கட்சியில் குழப்பம் ! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுக்கு கண்டனம்.

திமுக கூட்டணி கட்சியில் குழப்பம் ! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுக்கு கண்டனம்.

September 12, 2022
பெண் முன்களப்பணியாளரை சாதி ரீதியில் ஆபாசமாக திட்டிய தி.மு.க நிர்வாகி : காவல்துறை வழக்குப்பதிவு!

பெண் முன்களப்பணியாளரை சாதி ரீதியில் ஆபாசமாக திட்டிய தி.மு.க நிர்வாகி : காவல்துறை வழக்குப்பதிவு!

July 24, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x