Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

இந்தியா சீனாவை எளிதில் வெல்லும் ! உலக அளவில் ஆய்வுகள் வெளியானது!

Oredesam by Oredesam
June 22, 2020
in செய்திகள்
0
இந்தியா சீனாவை எளிதில் வெல்லும் ! உலக அளவில் ஆய்வுகள் வெளியானது!
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா சீனா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இரு நாடுகளும் தனது படைகளை எல்லி அருகே குவித்து வருகிறது. இந்த நிலையில் போர் ஏற்பட்டால் யார் வெற்றி காண்பார்கள் என உலக அளவில் ஆய்வு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் சீனாவை இந்தியா எளிதில் வெல்லும் திறன் படைத்தது என அந்த ஆய்வு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்தியா-சீனாவின் படை பலத்தை ஆய்வு செய்து உள்ளது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

அதில் இந்தியா சீனா இரு நாடுகளிலும் உள்ள இராணுவ படை வீரர்களின் எண்ணிக்கை, போர் விமானங்கள் மூலம் தாக்கும் திறன் போன்றவை விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளது. அதில் இறுதியாக போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளது. அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்முக்கிய அம்சம் வருமாறு:-

கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாமில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து இந்தியாவும், சீனாவும் எல்லையில் வீரர்களை குவித்து வருகிறது. இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினாலும் எல்லையில் பதற்றம் குறையவில்லை. சீனாவின் அச்சுறுத்தல்கள் எல்லாம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும். ஏனென்றால் உலக அரங்கில் இந்தியா வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. சீன விவகாரத்தில் இந்தியா துணிவதற்கு தனது நாட்டின் ராணுவ நிலைப்பாட்டில் இந்தியா மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளது தான் முக்கிய காரணம்.

பெரும் பிரச்சினை

சீன படை பலத்தின் முன் இந்தியா சாதாரணமானது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டு உள்ளது. இது முற்றிலும் தவறு. ராணுவ கட்டமைப்பு, தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் என்ற ஒட்டு மொத்த கணக்கீட்டில் சீனா முன்னணியில் இருக்கிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த கட்டமைப்புகள் அனைத்தும் பரந்து விரிந்த சீனாவின் எல்லையை பாதுகாக்க போதாது.

போரில் வெற்றி என்பது வீரர்கள், ஆயுதங்களின் எண்ணிக்கையில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. மாறாக களத்தில் செயல்படும் திறனின் அடிப்படையில் அமைந்து உள்ளது. அதன்படி சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் திறன் மிக சிறப்பாக உள்ளது. இந்திய-சீன போர் ஏற்பட்டால் அதில் தரைப்படை மற்றும் விமானப்படை தான் முக்கிய பங்கு வகிக்கும். இரு நாடுகளிலும் கடல் வழி தாக்குதல்கள் சாத்தியமில்லை.

தரைப்படை

தரைப்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கையை பொறுத்தவரை இரு நாடுகளும் சம எண்ணிக்கையில் தான் உள்ளன. ஆனால் இந்திய-சீன எல்லையில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் முன்னணியில் இருக்கிறது. அதாவது சீனா தனது நாட்டை பாதுகாக்க 5 படைப்பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளது. அதில் இந்திய எல்லை அருகே நிலைகொண்டு இருக்கும் படை மேற்கு திடேட்டர் கமாண்டட் ஆகும்.

இந்த படைப்பிரிவில் இருக்கும் சீன வீரர்களின் எண்ணிக்கை வெறும் 2 லட்சத்து 30 ஆயிரம் தான் உள்ளது. இவர்கள் மட்டுமே மலை பாங்கான அந்த பகுதிகளில் போரிடும் திறன் பெற்று இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ராணுவம் அனைத்தும் இந்திய-சீன எல்லையில் தான் உள்ளது. அதாவது மொத்தம் 20 லட்சம் இந்திய வீரர்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய-சீன எல்லையில் இருக்கும் இடங்களை நன்கறிந்தவர்கள். மலை பகுதிகளில் போரிடும் திறன் பெற்றவர்கள். எனவே தரைப்படையில் இந்தியாவே பலம் பொருந்தி உள்ளது.

விமானப்படை

சீனாவின் மேற்கு திடேட்டர் கமாண்ட் பகுதியில் மொத்தம் 157 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் இந்த பகுதியில் மட்டும் 270 போர் விமானங்கள் மற்றும் நிலப்பரப்பை அழிக்கும் 68 சிறிய ரக விமானங்களும் உள்ளன. அதன்படி விமானப்படையின் எண்ணிக்கையில் இந்த பகுதியில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. சீனாவின் ஜே-10 போர் விமானத்திற்கு இணையாக இந்தியாவில் மிராஜ் விமானங்கள் உள்ளன. போர் என்றால் இரு நாடுகளும் முதலில் விமான தளங்களை குறி வைத்தே தாக்குதல்களை தொடங்கும்.

அதன்படி இந்தியா தனது பகுதியில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் சீனாவின் எல்லை பகுதிகளில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் மிக எளிதாக தாக்கி விடும். அந்த சூழ்நிலையில் சீனாவின் உட்பகுதியில் உள்ள விமான நிலையங்களில் இருந்து இந்திய பகுதிகளை தாக்குவது சீனாவிற்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். ஒரு வேளை தாக்குதலை தொடங்கினால் கூட இந்தியா அதனை எளிதாக முறியடிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

ஏவுகணைகள்

சீனா இந்தியாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும் தாக்க 104 தாக்குதல்களை நடத்த வேண்டும். ஆனால் இந்தியாவின் 10 எண்ணிக்கையிலான அக்னி 3 ஏவுகணை மூலம் சீனாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும் இந்தியாவால் தாக்க முடியும். அதேபோல் அக்னி-2 ஏவுகணைகள் மூலம் இந்தியா மத்திய சீன பகுதி முழுவதையும் தாக்கும் திறன் கொண்டது. மிக முக்கியமாக 51 அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட ஜாக்குவார் விமானங்கள் மூலம் ஒட்டுமொத்த சீனாவின் திபெத் பகுதியை இந்தியா எளிதாக அழித்து விடும்.

இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டால் சீனா தனது நீளமான எல்லையில் உள்ள அனைத்து படைகளையும் ஒன்று திரட்ட வேண்டும். ஆனால் இந்தியாவிற்கு அப்படியல்ல, எளிதாக தனது படைகளை சீன எல்லையில் சேர்த்து விடும். ஏனென்றால் இந்தியாவின் படைகளில் அதிக சதவீதம் ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தான் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய பலம். இந்தியா சீனாவை விட வலுவான நிலையில் உள்ளது.

இவ்வாறு அந்த ஆய்வு தெரிவிக்கிறது

Share1188TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அமித்ஷா ஆவேசம் !

ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அமித்ஷா ஆவேசம் !

October 16, 2023
தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

August 7, 2022

திருக்கோவிலூர் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

March 17, 2021
Annamalai

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு.. வான்டட்டாக வந்து சிக்கும் திமுக…. இவ்ளோ இருக்கா?

January 11, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x