Sunday, January 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தெறிக்கவிட்ட இந்தியா…காஷ்மீர் தாக்குதலை நாங்க நடத்தவில்லை.. எங்களை விட்ருங்க.. பயந்து பல்டி அடித்த தீவிரவாத அமைப்பு!

Oredesam by Oredesam
April 26, 2025
in இந்தியா, செய்திகள்
0
தெறிக்கவிட்ட இந்தியா…காஷ்மீர் தாக்குதலை நாங்க நடத்தவில்லை.. எங்களை விட்ருங்க.. பயந்து பல்டி அடித்த தீவிரவாத அமைப்பு!
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றது. தற்போது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிரமாகி வரும் நிலையில் காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அமைப்பு திடீரென்று பல்டி அடித்துள்ளது. அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளதுஜம்மு காஷ்மீரில் பஹல்காம் என்ற இடத்தின் அருகே பைசரன் என்ற புல்வெளி பகுதி உள்ளது. கடந்த கடந்த 22ம் தேதி அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவித்தனர். அப்போது ராணுவ உடை அணிந்து 4 பயங்கரவாதிகள் வந்து பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். 12 பேர் வரை காயமடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. பஹல்காம் தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக அந்த அமைப்பு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தது. இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதோடு, இது லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணைப்பிரிவாக உள்ளது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இதையடுத்து பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் சல்லடை போட்டு சட்ட விரோதமாக இருக்கும் நபர்களை தட்டி தூக்கி வருகிறது. காஷ்மீர் தாக்குதலுக்கு உதவியதாக சந்தேகப்படும் 175 பேரை தட்டி தூக்கியுள்ளது. இந்திய ராணுவம். தீவிரவாதிகளின் வீடுகளை இடித்து தரைமட்டமாகி உள்ளது. மேலும் இந்தியாவில் முழுவதும் இந்திய ராணுவம் காட்டுப்பாட்டுகள் வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் லக்ஷர் தொய்பா தளபதி சுட்டு கொல்லப்பட்டுள்ளன்

மேலும் இந்தியா முப்படைகளையும் பாகிஸ்தான் பக்கம் திருப்பியுள்ளது. இதனால் பாகிஸ்தான் நடுங்கிப்போய் உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு பல்டியடித்துள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.டிஆர்எஃப் எனும் ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛பஹல்காம் சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்த தெடர்பும் இல்லை என்பதை டிஆர்எஃப் சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக எங்கள் மீது குற்றம்சாட்டுவது தவறானது மட்டுமின்றி அவசரமானதோடு காஷ்மீரை அவமதிக்கம் பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். பஹல்காம் தாக்குதல் நடந்த சிறிது நேரத்துக்கு பிறகு எங்களின் டிஜிட்டல் பிளாட்பார்மில் எங்களால் அங்கீகரிக்கப்படாத ஒரு மெசேஜ் பதிவிடப்பட்டது.

முதலில் காஷ்மீர் தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என்று ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ அமைப்பு அறிவித்தது. ஒருவேளை அவர்களின் வலைதள பக்கத்தில் தவறாக பதிவிடப்பட்டு இருந்தால் அதனை உடனடியாக நீக்கி இருக்கலாம். இல்லாவிட்டால் உடனடியாக மறுப்பு தெரிவித்து இருக்கலாம். ஆனால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை என்பது முற்றி மோதல் வெடிக்கும் வரை அந்த அமைப்பு காத்திருந்து இப்போது அறிக்கை விடுவது ஏன்? என்ற கேள்வி இப்போது எழுகிறது.

இதனால் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதை பார்த்து அந்த அமைப்பும், பாகிஸ்தானும் பயந்தது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது தற்போது பாகிஸ்தான் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவத்தை ஓடஓட தாலிபான்கள் விரட்டியடித்தனர். அதன்பிறகு பலுசிஸ்தான் அமைப்பினர் உள்நாட்டில் நடத்திய தாக்குதலிலும் பாகிஸ்தான் ராணுவம் பெரும் இழப்பை சந்தித்தது.

பாகிஸ்தானின் ராணுவ பலம் இப்படி இருக்கும்போது நம்மிடம் மோதினால் அது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறும். குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் புறமுதுகை காட்டிவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள். மேலும் தற்போது முதற்கட்டமாக நம் நாடு பாகிஸ்தானுக்கு சில முக்கிய விஷயங்களில் கைவைத்துள்ளது.இதற்கிடையே நம் நாட்டுடன் மோதினால் அது பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரத்தை இன்னும் அதிகமாக பாதிக்கும். அதோடு இந்த பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் பெரும்பான்மையான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்பட பல உலக நாடுகள் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனை உணர்ந்து தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நியாயமான விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இன்று அறிவித்தார். இப்படி பாகிஸ்தான் பயந்து வரும் நிலையில் தான் ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ அமைப்பும் காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களும் தொடர்பு இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ராமர் கோவில் கட்டும் பணிமுடியும் வரை ராமர் சிலை தற்காலிக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ராமர் கோவில் கட்டும் பணிமுடியும் வரை ராமர் சிலை தற்காலிக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

March 25, 2020
மேற்குவங்கத்திற்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க! ஜான் பர்லாவுக்கு அமைச்சர் பதவி! மேற்கு வங்கம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா!

மேற்குவங்கத்திற்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க! ஜான் பர்லாவுக்கு அமைச்சர் பதவி! மேற்கு வங்கம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா!

July 13, 2021
ஒரே நேரத்தில் 4 உலக சாதனைகள் படைத்தஇந்தியா.

ஒரே நேரத்தில் 4 உலக சாதனைகள் படைத்தஇந்தியா.

February 3, 2021
பணம் கொடுத்த சீனா ! தேச விரோத செய்திகளை பரப்பிய இந்திய செய்தி நிறுவனம்! விசாரணையை தீவிரப்படுத்தியது அமலாக்கத்துறை!

பணம் கொடுத்த சீனா ! தேச விரோத செய்திகளை பரப்பிய இந்திய செய்தி நிறுவனம்! விசாரணையை தீவிரப்படுத்தியது அமலாக்கத்துறை!

August 10, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x