Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பாகிஸ்தானின் அடிமடியில் கைவைத்த இந்தியா…. பாக் பிரதமருக்கு விழுந்த ஆப்பு! நிலைமையே மாறுதே! சோலி முடிஞ்ச்!

Oredesam by Oredesam
May 1, 2025
in இந்தியா, உலகம், செய்திகள்
0
pak pm

pak pm

FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்பை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சர்வதேச அளவில் விவாதங்களாக வெடித்திருக்கிறது. இதுபற்றிய விசாரணை மற்றும் இதர நடவடிக்கைகளில் இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமருக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக கண்டித்திருக்கிறார். மேலும் இந்தியா மேற்கொள்ளும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதேபோல இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றங்களை குறைத்து, தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் போனில் பேசிய ரூபியோ, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுடனான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு தொடரும் என்றும் கூறியிருக்கிறார். ரூபியோவின் பேச்சு சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ரூபியோவை தொடர்ந்து, ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ், ஜெய்சங்கரிடமும், ஷெபாஷ் ஷெரிப்புடனும் தனித்தனியாக போனில் பேசியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள அவர், நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டு பதற்றம் அதிகரித்திருப்பதற்கும் அவர் கவலை தெரிவித்திருக்கிறார். தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயும் அமைதி ஏற்படுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஐநா செய்ய தயார் எனவும் கூறியிருக்கிறார்.

ஐநா தலைவரே நேரடியாக தலையிட்டு இந்த விஷயத்தில் பாகிஸ்தானை கண்டித்திருப்பதும் அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த நடவடிக்கை பாகிஸ்தானை உசுப்பேற்றியிருக்கிறது. அறிவிக்கப்படாத போர் என்று இதனை பாக். கூறியிருக்கிறது. மட்டுமல்லாது இதற்கு பதிலடி என்று சொல்லி சிம்லா ஒப்பந்தத்தையும் பாக். ரத்து செய்திருக்கிறது.

இந்தியா தரப்பில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசார ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், தங்களது அதிகாரிகளை அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பவும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு பதிலடியாக இந்திய விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த கூடாது என பாக். தடை விதித்திருக்கிறது.

இதனையடுத்து இன்று முதல் இந்திய வான் பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கவும் மத்திய அரசு தடை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.பாகிஸ்தான் விமானங்கள் ஏற்கனவே கடந்த சில நாட்களாக இந்திய வான்வெளியைப் பயன்படுத்துவதை தவிர்த்தே வந்தது. இந்தச் சூழலில் இப்போது அதிகாரப்பூர்வமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை, சீனா அல்லது தென்கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் இனி இந்தியா வான்வெளியைப் பயன்படுத்தாமல் சுற்றிச் செல்ல வேண்டும். இதன் மூலம் எரிபொருள் செலவு அதிகரித்து, பாகிஸ்தானில் விமான டிக்கெட் உயரும்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள விமான நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர்கள் இந்தியா சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் எரிபொருள் அதிகம் செலவாகும். இது பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும். மேலும், பயண நேரத்தையும் அதிகரிக்கும். இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் பட்டியலைத் அளிக்குமாறு மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.

அவசரமாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தகவலை DoP கோரியுள்ளது. தரவுகளின்படி, இந்தியாவின் மருந்து ஏற்றுமதி சந்தையில் 219 நாடுகளில் பாகிஸ்தான் 38வது இடத்தில் உள்ளது. 2023 நிதியாண்டில், இந்தியா $191.36 மில்லியனை ஏற்றுமதி செய்தது, அதைத் தொடர்ந்து 2024 நிதியாண்டில் $176.54 மில்லியனை ஏற்றுமதி செய்தது. சமீபத்திய தரவுகளின்படி மருந்து ஏற்றுமதி வர்த்தகம் சுமார் $200 மில்லியனாக உள்ளது.

துபாய் வழியாக சமயங்களில் பாகிஸ்தானுக்கு இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யும். இந்தியா மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யும். அதை பாகிஸ்தான் துபாயில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதற்கான லிஸ்டையும் மத்திய அரசு கேட்டு உள்ளது

பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக அங்கே மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் இதனால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏபி) அங்கே கடும் பரபரப்பில் உள்ளது. பாகிஸ்தானின் மருந்து விற்பனையில் 40 சதவிகிதம் வரை இந்தியாவில் இருந்து நேரடியாகவும்.. இந்தியாவில் உருவாக்கப்பட்டு வேறு நாடுகள் வழியாகவும் பாகிஸ்தானுக்கு செல்கிறது.

இப்போது பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் மருத்துவ துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது,​​பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருட்களில் 30% முதல் 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது, இதில் செயலில் உள்ள மருந்து பொருட்கள் (API) மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்கள் அடங்கும்.. இதெல்லாம் பாகிஸ்தானுக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருளில் 30%-40% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. மிக முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகள், உயிரியல் தயாரிப்புகள், தடுப்பூசிகள் மற்றும் செரா, குறிப்பாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்பு விஷத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. கிட்டத்தட்ட பாகிஸ்தானின் மருத்துவ துறையின் ப்யூஸை பிடுங்கி உள்ளது இந்தியா. மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.

இனி நிர்வாக ரீதியாக அட்டாக் செய்ய இந்தியா தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது பாகிஸ்தான் அரசியலில் மறைமுகமாக ஆட்டத்தை ஏற்படுத்துவது. அங்கே அரசியல் நிலையற்ற தன்மையை உளவாளிகள் மூலம் ஏற்படுத்துவது. ஏன் அரசையே கூட கவிழ்ப்பது. இது இந்தியாவிற்கு கைவந்த கலை. இதனால் இந்தியா விரைவில் அது போன்ற தாக்குதல்களையும் கூட தொடங்கும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

rasipalan

இன்றைய இராசிபலன் 14.02.2024 புதன் கிழமை நல்லதே நடக்கும்!.

February 13, 2024
AnnamalaiVsStalin

2 ஜி ஞாபகம் இருக்கா? துண்டு சீட்டை ஒப்பிப்பதை நிறுத்துங்க ஸ்டாலின்..அண்ணாமலை ஆவேசம்!

August 28, 2023

சீனா தான் ஒரு வல்லரசு என நம்புகின்றது, அதை உலகை நம்ப வைக்க படாதபாடு பட்டு கொண்டிருக்கின்றது.

July 31, 2021
மேற்குவங்கத்திற்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க! ஜான் பர்லாவுக்கு அமைச்சர் பதவி! மேற்கு வங்கம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா!

மேற்குவங்கத்திற்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க! ஜான் பர்லாவுக்கு அமைச்சர் பதவி! மேற்கு வங்கம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா!

July 13, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x