Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நேபாள சர்ச்சை திடீரென ஏற்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் சொல்லிகொண்டிருக்கின்றன

Oredesam by Oredesam
May 23, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

நேபாள சர்ச்சை திடீரென ஏற்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் சொல்லிகொண்டிருக்கின்றன இந்த விடயம் நேற்று நடந்ததல்ல சுமார் 1 வருடமாகவே நடக்கும் சர்ச்சை

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இது பற்றி நாம் 8 மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தோம்

இப்பொழுது நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லை தகறாறு முட்டி கொண்டிருக்கின்றது, இது பெரும் சிக்கலை உருவாக்குகின்றது.

இந்தியாவின் வட எல்லையாக இமயமலையில் படர்ந்திருக்கும் நாடு நேபாளம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உலகின் ஒரே ஒரு இந்துநாடாக அது அரணாக இருந்தது, எதையுமே சரியாக செய்ய தெரியாத காங்கிரஸ் அரசு ஈழத்தில் குழப்பியது போல் நேபாளத்திலும் குழப்ப, அந்த குழப்பத்தை சீனா மிக சரியாக தன் கம்யூனிஸ்ட் அடிபொடிகள் மூலம் பயன்படுத்தி அங்கு தன் பிடியினை இறுக்கிவிட்டது

பழைய நம்பகமான இந்து நேபாளம் இப்பொழுது இல்லை கம்யூனிஸ்டுகள் எனும் குழப்பவாதிகளின் கூடாரமாகி சீனாவுக்கு ஏவல் வேலை செய்யும் தேசமாயிற்று

இப்பொழுது இந்தியா வெளியிட்டிருக்கும் வரைபடத்தில் காலா பாணி , லிம்பியாதுரா, லிபுலேக், எனும் தங்கள் பகுதி சென்றுவிட்டதாகவும் அது தங்கள பகுதி எனவும் வாளை உருவுகின்றது நேப்பாள்

அந்த இடம் திபெத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் வரும் பகுதி, இதுகாலமும் சிக்கல் இல்லை இப்பொழுது மத்திய அரசு இந்தியாவின் புதிய வரைபடைத்தை சொல்லும் பொழுது வருகின்றார்கள்

கலாபாணி என்பது அந்த ஆறும் கிராமமும் கொண்ட பகுதி இந்தியாவின் ஜார்கண்டை ஒட்டி வரும், ஏற்கனவே மதராசிகள் தங்கள் நாட்டை அதாவது பீகார் மற்றும் உபிமக்கள் நேபாளத்தை ஆக்கிரமிக்கின்றார்கள் எனும் சர்ச்சை நடக்கும் நிலையில் இப்பொழுது நேரடியாக இந்தியா ஆக்கிரமிக்கின்றது என்கின்றது நேப்பாள்

இந்தியா அது எங்கள் பகுதிதான், தேவைபட்டால் இதுபற்றி பேசலாம் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது

உண்மையில் அதன் அருகில் ஒரு கணவாய் உண்டு, திங்கர் பாஸ் என்பார்கள், அதை கடந்தால் அப்பக்கம் திபெத்துக்கு அதாவது சீனாவுக்கு செல்லலாம்

இங்குதான் இப்பக்கம் இந்தியாவும் அப்பக்கம் நேபாளத்தை முன்னால் நிறுத்தி பின்னால் சைனாவும் ஆடுகின்றன

கடந்த அக்டோபரிலே இதை வைத்து சர்ச்சை செய்தது நேபாளம் பின் அடங்கிற்று, இப்பொழுது எல்லையில் இந்தியா கடும் காவலை ஏற்படுத்த, காஷ்மீர் சிக்க தீர்க்கபட்டு அக்சாய் சின் எனப்படும் சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மீட்பில் ஈடுபட சீனாவுக்கு பொறுக்கவில்லை

இந்தியா சில நாட்களுக்கு முன்பு சீன வீரர்களை விரட்டி பரபரப்பினை ஏற்படுத்தியதும் நினைவிருக்கலாம்

கொரோனொவால் உலக சிக்கலை சந்தித்து, உலகில் இருந்து தனித்து நிற்கின்றது சீனா, அதன் எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக தெரியவில்லை, கைகொடுத்த கம்பெனிகளெல்லாம் நடையினை கட்டுகின்றன‌

எதையாவது செய்துதன் ஆத்திரத்தை காட்ட நினைக்கும் சீனா, நேபாளத்தை தூண்டிவிட்டு ஆட்டம் பார்க்கின்றது

ஒரு காலத்தில் உலகில் ஒரே இந்துநாடு எனும் பெருமையோடு இந்தியாவின் வடக்கு அரணாக இருந்தது நேபாளம், இந்தியா அதை எப்பொழுதும் அரவணைத்தது

இந்தியாவில் இந்து எழுச்சி ஏற்பட்ட 1990களில் , நேபாளத்தில் கம்யூனிச எழுச்சி எழுந்தது, இந்தியா அதை திறமையாக கையாண்டு அரசரை நீட்டிக்க செய்து பூட்டான் போல நேபாளத்தையும் கையில் வைத்திருக்க வேண்டும், செய்யவில்லை

வாஜ்பாய் அரசு ஓரளவுக்கு எல்லைகளை வலுபடுத்தியது, கார்கில் மீட்பெல்லாம் அப்படித்தான். ஆனால் கூட்டணி என்பது நேபாளத்தில் அவர் கைகளை கட்டியது, இந்து நாடான நேபாளத்தில் இந்துத்த்வா வாஜ்பாய் அரசு தலையிடுவதை “மதசார்பற்ற” கூட்டணிகள் ஏற்காது என யோசித்தார்

வெளியில் தெரியபடாமல் செய்யபட்ட பல ஆப்பரேஷன்கள் சொதப்பின, 2001ல் நடந்த நேப்பாள் அரச குடும்ப கொலையோடு எல்லாம் மாறிற்று.

இப்பொழுது சீனாவின் அடிப்பொடி நாடு நேப்பாளம், மாவோயிஸ்டுகள் ஆட்டம் நடக்கின்றது அதனால் இப்படித்தான் நடக்கும், ஆனால் மக்கள் இந்துக்கள், ஒரு மத எழுச்சி ஏற்படும் நேரம் எல்லாம் சரியாகும்

ஏன் இப்படி அஞ்சுகின்றது சீனா?

மோடி அரசு 70 ஆண்டுகளில் வட எல்லைகளில் இந்தியா செய்யாத பல சீர்திருத்தங்களை செய்கின்றது, யுத்தம் என வந்தால் 2 மணிநேரத்தில் டெல்லியினை பிடிப்போம் என சீனா சவால்விடும் அளவு வட எல்லை பலவீனமாய் இருந்தது

இப்பொழுது மோடி அரசு லடாக்கில் மிகபெரும் ராணுவதளம் , சிக்கிமில் கடும் காவல் என பலபடுத்துகின்றது

இந்த சர்ச்சையினை தொடங்கி வைத்தது யாரென்றால் சாட்சாத் இந்தியாதான், ஆம் காங்கிரஸ் அட்சியின் வரைபடத்தில் இந்த கலபாணி,லிம்பியாதுரா, லிபுலேக் பகுதிகளை ஏனோ விட்டுவிட்டார்கள், நேபாளம் அது தங்களுக்கு என்றது

கடந்தவருடம் இந்தியா வெளியிட்ட வரைபடத்தில் இவைகளை இந்திய பகுதிகளாக அறிவித்தது, உண்மையும் அதுதான்

மன்மோகன் அரசு செய்யா திருத்ததை துணிச்சலாக செய்தார் மோடி,.

அதிலிருந்து வெடித்த சர்ச்சை அவ்வப்போது கிளம்பும், இப்பொழுதும் கிளம்புகின்றது. இந்தியா இதற்கெல்லாம் அஞ்சாது, அது தன் எல்லையினையும் தன் மண்ணையும் பாதுகாக்கும்

மோடியின் அரசு இதை நிச்சயம் செய்யும்.

கட்டுரை:+ வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒட்டுமொத்த உலகிற்கும் யோகா அமைதியை தருகிறது-பிரதமர் மோடி உரை.

ஒட்டுமொத்த உலகிற்கும் யோகா அமைதியை தருகிறது-பிரதமர் மோடி உரை.

June 21, 2022
இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

December 6, 2023
சீனாவிடம் இருந்து நிறுவனங்களை திரும்ப பெற்றது ஜப்பான்! இந்தியாவுடன் கை கோர்க்கும் ஜப்பான்!

மோடியின் தொலைநோக்கு திட்டம் பொருளாதாரத்தில் முன்னணி நாடாக இந்தியா !

April 22, 2020
ஹாட் பாக்ஸ், கொலுசு, பணம் இதுதான் திராவிட மாடல் வெற்றியா? அண்ணாமலை அதிரடி !

தமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …

May 19, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x