Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை மஹிந்திரா நிறுவனம் உள்ளட்ட இந்திய நிறுவனங்கள் அதிரடி..!

Oredesam by Oredesam
June 21, 2022
in இந்தியா, செய்திகள்
0
அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை மஹிந்திரா நிறுவனம் உள்ளட்ட இந்திய நிறுவனங்கள் அதிரடி..!
FacebookTwitterWhatsappTelegram

‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்து, நான்காண்டு பணி முடிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக, மகிந்த்ரா, ஆர்.பி.ஜி., உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நம் ராணுவத்தில் ‘அக்னி வீரர்’கள் என்ற பெயரில் புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. ‘அக்னிபத்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு 60 ஆயிரம் வீரர்கள் வரை நியமிக்கப்பட உள்ளனர். நான்கு ஆண்டுக்குப் பின், இவர்களில் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர். நான்கு ஆண்டுக்குப் பின், இவர்களுக்கு துணை ராணுவம் உட்பட பல துறைகளில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இந்நிலையில், ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நான்கு ஆண்டு பணி முடிந்ததும், தங்களுக்கு வேறு வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காத சூழல் ஏற்படும் என்றும், அதனால் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், அவர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, வட மாநிலங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல தனியார் நிறுவனங்கள், அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளன. கட்டுமான உபகரணம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மகிந்த்ரா குரூப் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா, இது குறித்து சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நடக்கும் வன்முறை, வருத்தம் அளிக்கிறது. கடந்தாண்டு இந்த திட்டம் முன் மொழியப்பட்டபோது கூறியதை, மீண்டும் இப்போது கூற விரும்புகிறேன்.அக்னி வீரர்களின் திறமை மற்றும் ஒழுக்கம் ஆகியவை, அவர்களை வேலைவாய்ப்புகளுக்கு சிறந்தவர்களாக மாற்றும். ராணுவப் பணியை முடித்த திறமையான, பயிற்சி பெற்ற அக்னி வீரர்களை பணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பை, மகிந்த்ரா குழுமம் வரவேற்கிறது.

கார்ப்பரேட் துறையில் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தலைமைப் பண்பு, குழுமப் பணி மற்றும் உடற்பயிற்சி போன்ற சிறந்த பயிற்சி பெற்ற அக்னி வீரர்கள், தொழில் துறை சந்தைக்கு தேவையான தீர்வுகளை வழங்குவர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பயோகான் லிட்., நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் கூறுகையில், ”எதிர்காலத்தில் தொழில் துறையில் அக்னி வீரர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்,” என்றார்.

ஆர்.பி.ஜி., என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஸ் கோயங்கா கூறுகையில், ”எங்கள் நிறுவனமும் அக்னி வீரர்களை வரவேற்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. மற்ற நிறுவனங்களும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி ஏற்க வேண்டும்,” என்றார்.

அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் இணை மேலாண்மை இயக்குனர் சங்கீதா ரெட்டி, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுதர்சன் வேணு ஆகியோரும் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ‘அக்னி வீரர்கள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பர்’ என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முறையான அறிவிப்பு


‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியில் சேருவது தொடர்பான முறையான அறிவிக்கையை, இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. இதன்படி, அக்னி வீரர்களாக பணியில் சேர விரும்புவோர், ராணுவத்தின் ஆள்சேர்ப்பு தொடர்பான இணையதளத்தில் முறையாக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை முதல், இதற்கான பதிவு துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:அக்னிபத் திட்டத்தின் கீழ் சேருவோர், ஏற்கனவே ராணுவத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள, ‘ரேங்க்’கின் கீழ் இல்லாமல், தனித்துவமான ரேங்கின் கீழ் பணியமர்த்தப்படுவர். நான்கு ஆண்டு பணி முடித்த அக்னி வீரர்கள், தங்கள் பணிக்காலத்தில் அறிந்து கொண்ட ராணுவம் பற்றிய முக்கியமான தகவல்களை, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இதை மீறினால், அதிகாரப்பூர்வ ரகசிய சட்டப் பிரிவுகளின் கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்காலம் முடிவடைவதற்கு முன், பணியிலிருந்து வெளியேற அக்னி வீரர்களுக்கு அனுமதி இல்லை. தகுதி வாய்ந்த அதிகாரிகள் அனுமதி அளிக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் மட்டும் இதற்கு விலக்கு உண்டு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Kerela

கேரளாவில் தடம் பாதிக்கும் பாஜக! தேவாலயத்தில் ஒளிபரப்பபட்ட கேரளா ஸ்டோரி! பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த பாதிரியார்கள்

April 23, 2024
பயங்கரவாதத்தின் பிறப்பிடம் பாகிஸ்தான்… காஷ்மீர் விஷயத்தில் நெத்தியடி பதில் இந்தியா..!!!

பயங்கரவாதத்தின் பிறப்பிடம் பாகிஸ்தான்… காஷ்மீர் விஷயத்தில் நெத்தியடி பதில் இந்தியா..!!!

October 24, 2020
சட்டவிரோதமாக கட்டப்பட்ட புதிய சர்ச்! களத்தில் இறங்கிய கன்யாகுமரி பா.ஜ.க ஹிந்து இயக்கங்கள்! நிறுத்தப்பட்டது சர்ச் கட்டுமான பணிகள்!

சட்டவிரோதமாக கட்டப்பட்ட புதிய சர்ச்! களத்தில் இறங்கிய கன்யாகுமரி பா.ஜ.க ஹிந்து இயக்கங்கள்! நிறுத்தப்பட்டது சர்ச் கட்டுமான பணிகள்!

June 20, 2021

காங்கிரசுக்கு காரியம் செய்யும் கமிட்டி – விஷயம் சீரியஸ் தானோ?

August 25, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x