Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

Oredesam by Oredesam
May 21, 2022
in செய்திகள், தமிழகம்
0
மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பணிபுரியும் வட மாநில ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் தமிழ் கற்க வேண்டும் என்றும், தமிழில் பேச வேண்டும் என்றும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தி உள்ளார்.சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஒரு மணி நேரம் நடந்த ஆய்வின்போது, ‘வந்தே பாரத்’ ரயிலுக்கான பிரத்யேக பெட்டிகள், இதர பெட்டிகள், தயாரிப்பு பணிகள், பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து, அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த 12 ஆயிரமாவது எல்.ஹெச்.பி., ரயில் பெட்டியை கொடிஅசைத்து துவக்கி வைத்தார்.

பின், அமைச்சர் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடியின் கனவின்படி, சிறந்த பயண அனுபவம், மேம்பட்ட பாதுகாப்பு, அதிக பயணியர் பயணம் செய்ய வசதி போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள், சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் தற்போது, 50 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணிகள் நடக்கவுள்ளன. தமிழகத்தில் முதல் கட்டமாக, எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய ஐந்து நிலையங்களும் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இந்த பட்ஜெட்டில், தெற்கு ரயில்வேக்கு மட்டும், 3,860 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இது, காங்., ஆட்சியுடன் ஒப்பிடுகையில், மூன்று மடங்கு அதிகமாகும். நாட்டின் முக்கிய துறைமுகங்களை, நகர், கிராமப்புறங்களை இணைக்கும் வகையில், ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சர்வதேச தரத்துடன் ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் விரைவு ரயில், புதுடில்லி – வாரணாசி இடையே இயக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்படும். இதேபோல், 75 ரயில்கள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன. இந்திய ரயில்வே தனியார் மயமாக்கப்படாது. ‘கவச்’ எனப்படும் ரயில் பாதுகாப்பு கருவி போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

காலத்துக்கு ஏற்றது போல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயணியருக்கான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், ரயில் பாதைகள் வரும் ஆண்டுகளில் மேம்படுத்தப்படும். உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வந்தே பாரத் ரயிலுக்கான சக்கரங்கள், இந்தியாவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் பணிபுரியும் ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள், தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பயணியரிடம் தமிழில் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்திஉள்ளோம். அப்போது தான், தெற்கு ரயில்வே சார்பில் ரயில் பயணியருக்கு சிறப்பான சேவையை அளிக்க முடியும்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை – குஜராத் மாநிலம், அகமதாபாத் இடையே ‘புல்லட் ரயில்’ இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தென் மாநிலங்களிலும் புல்லட் ரயில் இயக்குவதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள, மாநில அரசுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, ஐ.சி.எப்., பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, ஐ.சி.எப்., தலைமை இயந்திரவியல் பொறியாளர் எஸ்.ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி தினமலர்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.

இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.

July 18, 2020

Your Favorite Home Cook Needs One of These Fun Gifts

December 21, 2019
KP PARK

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்கு மீண்டும் வந்த பேட்ச் ஒர்க் குமார்…

February 10, 2024
திமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க ! புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக

திமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க ! புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக

August 10, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x