ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு ஜாமீன் சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

நாடி முன் ஜாமீன் ‘வாங்கி’ வழக்கை இழுத்தடித்து வந்தார். அதனை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்க டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்ததை அடுத்து ப.சிதம்பரம் தலைமறைவானார். அந்நேரத்தில் உயர்நீதிமன்றம் நாடி ப.சிதம்பரம் கைதை தடுக்க கபில் சிபல், சிங்வி உள்ளிட்டோர் முயற்சித்தும் தடை கிடைக்கவில்லை. தலைமறைவால் ஊடகங்களால் அசிங்கப்பட்டதை அடுத்து, மேலும் பாதிப்பை குறைக்க ஒரு பிரஸ் மீட் வைத்து தன் வீடு சென்றார். அவரை கைது செயய அமலாக்க பிரிவும் சி.பி.ஐ யும் வந்திருந்தாலும், சிபிஐ முந்திக்கொண்டது. சிபிஐ கைது செய்தது 3 மாதங்களுக்கு மேல் டில்லி திஹார் சிறையில் இருந்த சிதம்பரத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் தான் ஜாமின் கிடைத்தது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2007 ல் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியாவில், அதிகளவு வெளிநாடு முதலீடு செய்வதற்கு சிதம்பரம் உதவி செய்துள்ளார். இதன் மூலம், சிதம்பரம் மகன் கார்த்திக்கு பலன் கிடைத்துள்ளது.

இந்திராணி முகர்ஜி மூலம் கிடைத்த பலன் மூலம், ஸ்பெயின், இந்தியா, பிரிட்டனில், சிதம்பரமும், கார்த்தியும் சொத்துகளை வாங்கியுள்ளனர். என தெரிவித்துள்ளது. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை வைத்து இந்த குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஐ.என்.எக்ஸ் மீடியாவில் வெளிநாட்டு முதலீடு செய்வதற்கு சிதம்பரம் மற்றும் சிலர் ரூ.10 லட்சம் பணம் லஞ்சமாக வாங்கியதாக கூறப்பட்டிருந்தது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இதன் பின்னர் அக்டோபர் 16 ல் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், கடந்த 2017 மே மாதம், ஐ.என்.எக்ஸ்., மீடயாவுக்கு கடந்த 2007 ம் ஆண்டு வெளிநாட்டு நிதி கிடைப்பதற்கு, வெளிநாட்டு முதலீட்டு வாரியம் அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இதன் பின்னர் 9 மாதங்கள் கழித்து சிதம்பரம், கார்த்தி, மற்றும் சிலர் பணமோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Exit mobile version