Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

கொரானா மூன்றாவது ஸ்டேஜ் முடியப்போகிறதா?

Oredesam by Oredesam
March 23, 2020
in உலகம்
0
கொரானா மூன்றாவது ஸ்டேஜ் முடியப்போகிறதா?
FacebookTwitterWhatsappTelegram


நியூயார்க்கில் கொரானாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை பாருங்கள்…இது தான் 3 வது ஸ்டேஜ். கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் பல தரப்பட்ட மக்களிடையே உருவாகும் தொடுதலால் ஏற்படக்கூடிய பரவல்.

இதுதான் டேஞ்ச ரான ஸ்டேஜ்.இந்த ஸ்டேஜில் தான் நாம் இருக்கிறோம் .ஆனால் இந்த மூன்றாவது ஸ்டேஜில் இந்தியா அமெரிக்கா இடையே கொரானாவினால் ஏற்பட்ட பாதிப்பின் வித்தியாசம் தான் ஆச்சரியத்தை அளிக்கிறது.

READ ALSO

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

அமெரிக்காவில் நியூயார்க்கையும் இந்தியாவில் மகாராஷ்டிராவையும் எடுத்துக் கொண்டால் கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிராதான்.

ஏனென்றால் மகாராஷ்டிராவில் ஒரு சதுர கிலோ
மீட்டரில் 365 பேர் வாழ்கிறார்கள்.

ஆனால்நியூயார்க் மாநிலத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 162 பேர் தான் இருக்கிறார்கள்.இருந்தாலும் நியூயார்க்கில் ஏன் அதிக மான பாதிப்புகள்?ஒரு வேளை இந்தியாவில் இறக்குமதி யான கொரானோவின் வீரியம்
குறைவாக இருக்கிறதோ..

கொரானா வைரஸ் இந்தியாவில் தோன்றி யது அல்ல அது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களினால் இறக்குமதியான வைரஸ் தான் .இப்படி வந்தவர்களால் இந்தியாவில் உண்டான பாதிப்புகள் தான் ஸ்டேஜ்-1

அடுத்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையே பரவுவது
தான் ஸ்டேஜ்-2 என்கிற லோக்கல் டிரான்ஸ்மிசன்.

இப்பொழுது இந்தியா3 வது ஸ்டேஜுக்கு செ ன்று விட்டாலும் இது பற்றிய ஒரு சரியான புரிதல் இல்லை இது எப்பொழுது ஆரம்பித்தது என்பது தான் கேள்விக் குறியாக இருக்கிறது.இந்த கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் நியூயா ர்க்கில் ஒரு வாரத்திலேயே நடைபெற்று விட்டது. அமெரிக்காவில் மட்டுமல்ல நிறைய நாடு களில் 3 வது ஸடேஜ் மிகவிரைவாக வந்து விட்டது.

மகாராஷ்டிராவில் மார்ச் 9 ம்தேதி புனேயில் ஒரு தம்பதியினருக்கு கொரானா தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தான்
மகாராஷ்டிரா வில் முதல் கொரானா கேஸ்.இந்த தம்பதிகள் குவைத்தில் இருந்து வந்தவர்கள்.அடுத்த மறுநாள் அதாவது மார்ச் 10ம் தேதி அந்த தம்பதியினர் க்கு நெருக்கமான 3 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டது.

மார்ச் 11 ம் தேதி மும்பையில் இருந்த இருவ ருக்கு கொரானா பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இந்த இருவரும் துபாயில் இருந்து புனேக்கு வந்த தம்பதியின் நெருங்கிய உறவினர்கள்.அதே 11 ம் தேதி அமெரிக்காவில் இருந்த 4 பேருக்கு கொரானா வின் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்து. 13ம்தேதி அமெரிக்காவில் இருந்து வந்தவர்களின் உறவினர்களுக்கு பரவியது அடுத்து 14 ம் தேதி அமெரிக்கா துபாயில் இருந்து வந்தவர்களுக்கு கொரானா இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.அடுத்து 15 ம் தேதி ரஷ்யா மற்றும் கசகஸ்தானில் இருந்து வந்த வர்களுக்கு கொரானா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

16 ம்தேதி அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர் வீட்டுக்கு சென்ற பிறகு அவரின் மனைவி மற்றும் 3 வயது குழந்தைக்கும் பரவியது.ஆக மகாராஸ்டிராவில் கொரானா பரவ ஆரம்பித்த 9 ம் தேதியில் இருந்து 16 ம்
தேதி வரை ஒரு வார காலத்தில் 37 பேருக்கு நோய் பரவி இருந்தது.

இப்பொழுது நியூயார்க்கை பார்ப்போம்.

அமெரிக்காவில் நியூயார்க்கில் மார்ச் 1 ம் தே தி ஈரானில் இருந்து வந்த ஒரு பெண் மூலமாக அவருடைய கணவருக்கு பரவியது.அடுத்து மார்ச் 3 ம் தேதி இஸ்ரேல் நாட்டில் இருந்து நியூயார்க் வந்த ஒரு லாயருக்கு இருந்தது.மார்ச் 4 ல் லாயரின் மனைவி மகன் மகள் பக்கத்தில் இருந்தவர்கள் என்று 9 பேருக்கு பரவியது.

அதே மார்ச் 6 ம் தேதி புதிதாக இந்த லாயர்க்கு உறவினர் அல்லாத வேறு ஒரு விதத்தில் தொடர்புடைய 22 பேருக்கு புதியதாக நோய் தொற்று ஏற்பட்டது.அதாவது லாயர் வீட்டுக்கு பால் பாக்கெட் போட வந்தவர் மூலமாக பரவி யது.இது தான் கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன்.

இப்படி 6ம் தேதியே 44 ஐ தொட்டு கொரானாவின் 3 வது ஸ்டேஜ் நியூயார்க்கில் தெரிந்துவிட்டது. 7 ம் தேதி அந்த இஸ்ரேலில் இருந்து
வந்த லாயர் இருந்த வெஸ்ட்செஸ்டர் கவுண்டியில் கொரானோ 89 பேருக்கு பரவியது மார்ச் 8 ல் 108 பேருக்கு பரவி விட்டது.இதில் யாரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் கிடையாது.

இப்பொழுது மகாராஷ்டிரா மற்றும் நியூயார்க்க் இரண்டு மாநிலங்களிலும் முதல் ஸ்டேஜான வெளி நாட்டவர்களினால் தான் கொரானா இறக்குமதியாகி 2 வது ஸ்டேஜான உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் லோக்கல் டிரான்ஸ் மிசன் மூலமாக பரவியது அறிந்துகொள்ளலாம்.

ஆனால் நியூயார்க்கில் மூன்றாவது் ஸ்டேஜ் ஒரே வாரத்தில் வந்து விட்டது. இப்படிக்கும் மகாராஷ்டிரா நியூயார்க்கை விட மக்கள் தொகை மிகுந்த மாநிலம்.அதுமட்டுமின்றி நியூயார்க்கை விட நிறைய வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வழியாக லோக்கல் டிரான்ஸ்மிசன் மூலமாக கொரானா மகாரா ஷ்டிராவில் தான் ஸ்டேஜ் 1ல் பரவியது.

இப்பொழுது நாம் யோசிக்க வேண்டிய விசய ம் என்னவென்றால் அமெரிக்கர்களை காட்டிலும் இந்தியர்கள் தான் வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு உறவினர்கள் நண்பர்கள் என்று எல்லோரையும் தேடி செல்வார்கள்.

இப்படி தேடிசென்றவர்கள் மூலமாக உருவான லோக்கல் டிரான்ஸ்மிசன் மக்கள் அடர்த்தி மிகுந்த மகாராஷ்டிராவில் நியூயார்க்கை விட முன்னதாகவே நடைபெற்று இருக்க வேண்டும்..புகழ்பெற்ற தொற்றுநோய் நிபுணர், டாக்டர் ரமணன் லக்ஷ்மிநாராயன் அவர்கள் என்டிடிவி க்கு அளித்த பேட்டியில் நாம் 100 சதவீதம் 3வது ஸ்டேஜில் இருக்கிறோம் என்றே கூறி இருக்கிறார்.

நியூயார்க்கில் இஸ்ரேலில் இருந்து வந்த ஒருவர் மூலமாகவே 3 நாட்களில் 30 பேருக்கு இடையே நடைபெற்ற கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் மகாராஷ்டிராவில் 6 க்கும் மேற்பட்ட வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் ஏன் பெரியளவில் நடைபெற வில்லை.

நியூயார்க்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு தனித்தனியாக வீடு கார் என்று தனிமைப்பட வாய்ப்புகள் இருந்தும் எப்படி இவ்வளவு வேகமாக கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் நடைபெற்றது? மகாராஷ்டிராவில் தான் நியூயார்க்கை
விட மக்களின் உறைவிடம் போக்குவரத்து என்று பொதுவாகவே இருக்கிறது.

எனவே மகாராஷ்டிராவில் தான் கம்யூனிட்டி டிரான்ஸ் மிசன் உடனடியாக நடந்து இருக்கவேண்டும். ஆனால் அது ஏன் நடைபெறவில்லை. லோக்கல் டிரான்ஸ்மிசனுக்கும் கம்யூனிட்டி டிரான்ஸ் மிசனுக்கும் இடையில் எந்த
ஒரு காலக்கெடுவும் கிடையாது என்பதை நியூயார்க்கில் ஒரே வாரத்தில் கொரானா 3 வது ஸ்டேஜுக்கு பரவியதில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் மகாராஷ்டிராவை அடுத்து இந்தியாஇன்னொரு மாநிலமான கேரளாவி ல் ஜனவரி 30 ம் தேதியே முதல் கொரானா கேஸ் சீனாவில் உஹானில் இருந்து வந்தவர் மூலமாக பதிவானது.அதற்கடுத்து மார்ச்
மாதம் 8 ம் தேதியில் இருந்து இத்தாலியில் இருந்து வந்தவர்களால் கேரளாவில் கொரா னாவினால் பாதிக்கப்பட்ட அவர்களின் எண் ணிக்கை அதிகமானது.

இப்பொழுது மகாராஷ்டிரா தான் கொரானா வினால் 74 பேர் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது.2 வது இடத்தில் உள்ள கேரளாவில் கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கை 67ஆக இருக்கிறது. கேர ளாவில் மக்கள் தொகைஅடர்த்தி மிக அதிகமான மாநிலங்களில் கேரளா பீகார் மேற்கு வங்காளத்தை அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

கேரளாவில் ஒரு சதுர கிலோமீட்டரில் 859 பேர் வாழ்கிறார்கள்.அங்கேயும் மூன்றாவது ஸ்டேஜான கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் முன்பே ஆரம்பித்து இருக்க வேண்டும்.இருந்தாலும் நியூயார்க்கை விட 5 மடங்கு மக்கள் தொ கை அடர்த்தியை உடைய கேரளாவில் பரவல் பெரியளவில் இல்லை.

இருக்க காரணம் இந்திய தட்பவெப்ப நிலை யில் கொரானாவினால் சீனா அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளைப்போல வேகமாக பரவ முடிய வில்லை என்பதே உண்மையாக இருக்க முடியும்.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொரோனா நெருக்கடியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றது தமிழகம்.

May 23, 2021
அட்டகாசமான கேட்ச், அதிக ரன் சாதனை! ரசிகர்கள் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்லீன் தியோல்! மித்தாலி ராஜ்!

அட்டகாசமான கேட்ச், அதிக ரன் சாதனை! ரசிகர்கள் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்லீன் தியோல்! மித்தாலி ராஜ்!

July 11, 2021
கட்டாய மதமாற்றம் செய்த சர்ச்சில் விஷ்வ ஹிந்து பரிஷத் செய்த தரமான சம்பவம்! பாதிரியாரை பதறவைத்த வைரல் வீடியோ!

கட்டாய மதமாற்றம் செய்த சர்ச்சில் விஷ்வ ஹிந்து பரிஷத் செய்த தரமான சம்பவம்! பாதிரியாரை பதறவைத்த வைரல் வீடியோ!

October 20, 2021
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !

பிரதமர் மோடி கலவர பொய்களை சிவபெருமான் நஞ்சை உண்டது போல் தாங்கிக்கொண்டார்-மத்திய அமைச்சர் அமித்ஷா.

June 25, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x