Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

வி.சி.க என்பது விழுப்புரம் சிதம்பரம் கட்சியா? கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்திய தொகுதி பங்கீடு?

Oredesam by Oredesam
March 9, 2024
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
vck

vck

FacebookTwitterWhatsappTelegram

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அடுத்த வாரம் இறுதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வேளைகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. முக்கியமாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு என அடுத்தகட்ட நகர்வுகளை எட்டியுள்ளது. பலம் பொருந்திய மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து இண்டி கூட்டணியை உருவாக்கினார்கள்.

அந்த இண்டி கூட்டணி அடுத்தடுத்து பல விக்கெட்டுகளை இழந்து யார் கூட்டணியில் இருக்கிறார்கள் யார் இல்லை என குழப்ப கூட்டணியாக மாறியுள்ளது. மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் மோடி தான் பிரதமர் என தெரிவிக்கிறது. பாஜக தனது 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டது. காங்கிரசும் தன பங்கிற்கு 35 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழகத்தை பொறுத்தவரையில் மும்முனை போட்டி உண்டாகியுள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்த அதிமுக ஒரு அணியாகவும் திமுக கூட்டணி பாஜக தலைமையிலான கூட்டணி என மும்முனை போட்டி உருவாகி உள்ளது. பாஜக இந்த தேர்தலில் இரண்டாமிடம் பிடிக்கும் அதன் வாக்கு சதவீதம் கணிசமாக உயரும் என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளது இது இரண்டு திராவிட கட்சிகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இந்த நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியின் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதியாகியுள்ளது. இதில், இந்திய யூனியன் முஸ்லிக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடமும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா இரண்டு இடங்களும் தி.மு.க சார்பில் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக நீடித்து வந்தது. . இந்த நிலையில், வி.சி.க-வுக் கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே இந்தமுறை இரண்டு இடங்களை தி.மு.க ஒதுக்கியிருக்கிறது.

மக்கள் நீதி மையம் கமலுக்கு ராஜ்யசபா சீட் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் சீட் இல்லை என தெளிவாக கூறி கமலை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இணைத்துக்கொண்டது. ராஜ்ய சபா தேர்தல் நடக்க இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் திமுக கொடுத்த வாக்குறுதியை நம்பி கமலும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.

தி.மு.க-வும், வி.சி.க-வும் கலந்து பேசியதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளில் வி.சி.க போட்டியிடுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. விசிக திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி கேட்டு கோரிக்கை வைத்தனர் ஆனால் அதனை காதில் கூட வாங்கி கொள்ளவில்லை திமுக பின்னர், 2 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி கேட்டு திமுகவிடம் வலியுறுத்தியுள்ளது விசிக அதையும் புறக்கணித்து தள்ளியது திமுக. இறுதியாக இரண்டு தனித் தொகுதிகள் தான் வி.சி.கவிற்கு என அழுத்தம் திருத்தமாக திமுக கூறியது. அதற்கு ஓகே சொல்லி கூட்டணியில் கையெழுத்து போட்டுள்ளார் திருமாவளவன்.

இதற்கு விசிக கட்சியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 40 தொகுதிகளிலும் வேலை செய்யவேண்டும் ஆனால் நமக்கு தொகுதி 2 தானா என கொந்தளிக்க தொடங்கியுள்ளார்கள் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தை பார்த்து கூட ஏன் நமக்கு இந்த நிலைமை என மனக்குமுறல்களை வெளிப்படுத்த தொடங்கிவிட்டர்கள். 2009ல் இரண்டு சீட்டு2014ல் இரண்டு சீட்டு2019ல் இரண்டு சீட்டு 2024லும் இரண்டு சீட்டு தான்… என விடுதலை சிறுத்தை கட்சியை விழுப்புரம் சிதம்பரம் கட்சி என மாற்றிவிட்டார்கள் திராவிட கட்சிகள் இந்த முறை திமுகவிற்கு வேலை செய்ய கூடாது என கட்சியின் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இது ஒருபுறம் இருக்க திமுகவிடம் ஒரு பொதுத் தொகுதியை கேட்டு பெறுவதற்காக விசிக தொண்டர்கள் தீக்குளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்று திமுகவுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படுவதற்கு முதல் நாள் வரை அக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சங்கத் தமிழன் ஆவேசமாக செய்தியாளர்களிடம் கொந்தளித்து இருந்தார்.

ஆனால் அவரோ இரண்டு தனித் தொகுதிகளுக்கு மேல் உங்களுக்கு எதுவும் கிடையாது என்று திமுக கூறிவிட்ட பின்பு இந்த முடிவு எங்களுக்கு மன வருத்தம் தருகிறது என மனக்குமுறலை கொட்டி தீர்த்துவிட்டார்.மேலும் அவரின் ஆதரவாளர்களை சந்தித்து நம் நம் தலைவருக்கு மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனவும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகளுக்கு வேலை செய்வது அவரவர் இஷ்டம் என தெரிவித்துள்ளதாக தெரிகிறது. நம் தென்மாநிலங்களில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்து தான் போட்டியிடுகிறோம் அதனால் தேர்தல் வேலைகள் அதிகம் உள்ளது நாம் அனைவரும் தமிழகத்தில் நம் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேறு மாநிலங்களில் போட்டியிடும் நம் கட்சி வேட்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அறிவுத்தியுள்ளதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு தென் மாநிலங்களிலும் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் விசிக தீவிரமாக இறங்கி இருப்பது இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது விசிக என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்கத்தில் எப்படி இவர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வேலை செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Alexander Wang & Uniqlo’s Underwear Collection Is Available to Cop Now

January 14, 2020
“ஒரே நாடு, ஒரே ரேசன்” திட்டம் – தமிழகத்தில்  முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

“ஒரே நாடு, ஒரே ரேசன்” திட்டம் – தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

October 1, 2020

சீனாவை பாருங்கள் வீசுவோம் திராவிட பொய்களை குப்பையிலே.

February 25, 2020
முரசொலி மூலபத்திரம் நகலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5 லட்சம் பரிசு தொகை!

முரசொலி மூலபத்திரம் நகலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5 லட்சம் பரிசு தொகை!

November 17, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x