Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஜெர்மனி சென்ற ஜெ.ஆர்.டி. டாட்டாவிடம் உதவி கேட்டு நின்ற ஜெர்மன் நிறுவனம்.

Oredesam by Oredesam
May 5, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் லோகோமோட்டிவ் டீசல் இஞ்சின் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்று JRD. டாடா முடிவு செய்தார். இதற்கான தொழில்நுட்பம் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இல்லை. டீசல் இஞ்சின் உற்பத்தியில் தலைசிறந்த நிறுவனங்கள் ஜெர்மனியில் தான் இருந்தன.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

அது 1946ம் வருடம். இரண்டாம் உலகப்போர் முடிந்து விட்டது. ஜெர்மனியின் முன்னணி ஆட்டோ நிறுவனமான Krauss Maffei நிறுவனத்துடன் ஒரு தொழில்நுட்ப உடன்படிக்கை‌ ஏற்படுத்தி, இந்தியாவில் டீசல் இஞ்சின் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜெ.ஆர்.டி. டாடாவும் டெல்கோ நிறுவனத்தின் இன்ஜினியர் திரு சுமந்த் மல்கோங்கரும் ஜெர்மன் நாட்டில் உள்ள மியூனிச் நகருக்கு சென்றனர்.

மியூனிச் ரயில் நிலையத்தின் உள்ளே ரயில் மெதுவாக நுழைந்தது. Krauss Maffei நிறுவனத்தின் டைரக்டர்களில் சிலர் இந்தியாவிலிருந்து வந்த விருந்தாளிகளை வரவேற்க ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

ஜெர்மனி சென்ற டாடாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் நடந்த வான்வழி குண்டு வீச்சில், மியூனிச் நகரம் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்து விட்டிருந்தது.

இரண்டாம் உலகப்போரின்போது ராணுவ விமானங்களின் குண்டு வீச்சினால் ஜெர்மனியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் அழிந்து விட்டிருந்தன. தொழிற்சாலைகள் இல்லாததால் வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பஞ்சம் தலைவிரித்தாடியது.

டீசல் இஞ்சின் லோகோமோட்டிவ் தொழில்நுட்ப உடன்படிக்கை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு சென்ற டாடாவிடம் Krauss Maffei நிறுவன டைரக்டர்கள் ஒரு உதவியைக் கோரினர்.

எங்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்த சில முன்னணி இன்ஜினியர்கள் இப்பொழுது வேலை இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். அவர்களில் சிலரை குடும்பத்துடன் இந்தியா அழைத்துச் செல்லுங்கள். அவர்களை உங்கள் நிறுவனத்தில் பணியில் அமர்த்திக் கொள்ளுங்கள். உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கொடுத்து அவர்களை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று Krauss Maffei நிறுவனத்தின் டைரக்டர்கள் டாடாவிடம் கோரிக்கை வைத்தனர். இந்த இன்ஜினியர்கள் திறமை வாய்ந்தவர்கள் உங்கள் கம்பெனிக்கு உதவுவார்கள் அது மட்டுமல்ல இந்திய இன்ஜினியர்களுக்கு பயிற்சியும் அளிப்பார்கள்.

ஜெர்மனி இன்ஜினியர்களில் சிலரை இந்தியா அழைத்துவந்த டாட்டா, தன் தொழிற்சாலைகளில் அவர்களுக்கு கௌரவமான வேலையும் அளித்தார்.

பிற்காலத்தில் இந்தியன் ரயில்வேயுடன் டீசல் இன்ஜின் தயாரிக்கும் ஒப்பந்தம் போடப்பட்ட போது ஜெர்மனியில் இருந்து வந்த விஞ்ஞானிகள் அந்த ஒப்பந்தத்தை செயல்படுவதற்கு பெரிதும் உதவினர்.

1950ம் வருடம் – டெல்கோ நிறுவனம் டயல் மர் பென்ஸ் உடன் இணைந்து டிரக்குகள் தயாரிக்க தொடங்கியது.

இது நடந்து சில வருடம் கழிந்தது. Krauss Maffei நிறுவனத்திற்கு திடீரென்று டாடா நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம். “நீங்கள் அனுப்பிய இன்ஜினியர்கள் மூலம் டெல்கோ நிறுவனத்திற்கு தொழில்நுட்ப உதவிகளும் மற்றும் எங்கள் நிறுவன இன்ஜினியர்களுக்கு பயிற்சியும் கிடைத்தது. இதற்காக டாட்டா நிறுவனம் எவ்வளவு தொகை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதைத் தெரியப் படுத்துங்கள்”.

Krauss Maffei நிறுவனத்தில் உள்ள டைரக்டர்கள் யாருமே எதிர்பாராத கடிதம் இது. எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை. அதுமட்டுமல்ல இன்ஜினியர்களுக்கு வேலை கொடுத்து அவர்களை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையை Krauss Maffei நிறுவனம்தான் வைத்திருந்தது. இந்த சூழ்நிலையில் JRD டாடா கடைபிடித்த நேர்மையான வழி முறை அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பல வருடம் முன்பு (1950களில்) நடந்த இந்த நிகழ்ச்சி பற்றி இன்றும் கூட Krauss Maffei நிறுவனத்தில் பெருமையாகப் பேசப்படுகிறது.

1970 ம் வருடம். Krauss Maffei நிறுவனத்தின் ஒரு டெண்டர் விஷயமாக டெல்கோ நிறுவனம் ஒரு பேங்க் கேரண்டி அளிக்க வேண்டியிருந்தது. அப்போது இருந்த மத்திய அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய வங்கிகளால் அந்த பேங்க் கேரண்டி தர இயலவில்லை.

இந்த விஷயம் ஜெர்மன் கம்பெனிக்கு தெரியப்படுத்தப்பட்டது.

“உங்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு பேங்க் கேரண்டியும் தேவையில்லை. டாட்டா நிறுவனத்தின் லெட்டர் ஹெட்டில், JRD டாட்டா கையெழுத்துப் போட்ட ஒரு கடிதம் இருந்தால் போதுமானது” என்று Krauss Maffei கூறிவிட்டது.

“JRD டாடாவின் கையெழுத்து போட்ட கடிதத்தை நாங்கள் பேங்க் கேரன்டியை விட அதிக மதிப்புடன் ஏற்றுக்கொள்வோம்” என்று Krauss Maffei நிறுவனம் கடிதம் எழுதியது.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் பத்மநாபன் நாகராஜன்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

காஷ்மீரில் மீண்டும் 370 கொண்டு வருவோம் காங்கிரஸ் !பட்டியலின மக்களின்  முன்னேற்றம் எங்களுக்கு முக்கியமில்லை!

காஷ்மீரில் மீண்டும் 370 கொண்டு வருவோம் காங்கிரஸ் !பட்டியலின மக்களின் முன்னேற்றம் எங்களுக்கு முக்கியமில்லை!

August 24, 2020

களத்தில் இறங்கிய அடித்த தமிழக பாஜக இளைஞர் அணி !

July 14, 2020
தி.மு.கவின் உட்கட்சி பூசலும் ! அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தி.மு.க உறுப்பினரான சம்பவமும்!

தி.மு.கவின் உட்கட்சி பூசலும் ! அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தி.மு.க உறுப்பினரான சம்பவமும்!

September 22, 2020
மருத்துவ அலுவலர்களுக்கு இடையூறு இல்லாமல்  நோயாளிகளை கையாள்வதற்கான வசதிகளை செய்ய வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.

மருத்துவ அலுவலர்களுக்கு இடையூறு இல்லாமல் நோயாளிகளை கையாள்வதற்கான வசதிகளை செய்ய வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.

May 11, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x