Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024 : தனுசு ராசிக்காரர்களுக்குமுயற்சிகள் வெற்றியாகும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

Oredesam by Oredesam
April 30, 2024
in ஆன்மிகம், செய்திகள், ராசிபலன்
0
தனுசு குரு பெயர்ச்சி

தனுசு குரு பெயர்ச்சி

FacebookTwitterWhatsappTelegram

தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும்; ஜென்ம ராசி எதுவென்று தெரியாத மார்கழி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்; யே, யோ, பா, பீ, பூ, த, ப, ட, பே … ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.ராசியின் அதிபதி: குரு. நட்சத்திர அதிபதிகள்: கேது, சுக்கிரன், சூரியன். யோகாதிபதிகள்: சூரியன், செவ்வாய், குரு. பாதகாதிபதி: புதன். மாரகாதிபதி: புதன், சுக்கிரன்.

தலைநிமிர்ந்து வாழும் தனுசு ராசி
ஞானத்திற்கும், தெய்வீக அறிவிற்கும், விவேகத்திற்கும் காரகனான குருவின் அம்சத்தில் பிறந்து, மதிநுட்பத்தினால் எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றலும், பேச்சு சாதுரியத்தால் எதிரிகளையும் நண்பராக்கிக்கொள்ளும் திறனும் பெற்ற தனுசு ராசி நண்பர்களே!

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

துணிச்சலும், எதையும் யூகிக்கும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, நாளை நடப்பதை இன்றே அறிந்திடக்கூடிய வல்லமை நிறைந்திருக்கும். ஆழ்ந்த சிந்தனையும், ஆன்மீகத்தில் நாட்டமும் கொண்ட உங்களின் ஆலோசனைகள் பலருடைய வாழ்வை முன்னேற்றம் அடைய வைக்கும். மற்றவர்களைப் பேசவைத்து எடைபோடுவதில் வல்லவரான உங்களிடம் எப்போதும் உற்சாகம் நிறைந்திருக்கும். சாமர்த்தியமாகப்பேசி சமாளிப்பது உங்களுக்கு கைவந்தக் கலை என்றாலும், உங்களால்தான் மற்றவர்களுக்கு முன்னேற்றமே ஒழிய உங்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். சாதனைகள் படைக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட உங்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவதைக்கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தி இருக்கும்.

உங்கள் ராசிநாதன் அறிவுக்கும் மதிநுட்பத்திற்கும் காரகனானவன் என்பதால் அவரின் பிரதிபலிப்பாகவே நீங்கள் இருப்பீர்கள். அதனால், மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். எதிலும் ஒளிவு மறைவில்லாதவர்களாக இருப்பீர்கள். நிதானமாக செயல்பட்டாலும் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் ஆற்றல் உங்களுக்குண்டு. தகுதி குறைவானவருடன் நட்பு கொள்ள உங்களுக்குப் பிடிக்காது. உயர்ந்த எண்ணங்களும், உயர்வான கொள்கையும் கொண்டவர்களாக எப்போதும் நீங்கள் விளங்குவீர்கள்.

ஓய்வு நேரத்தைக்கூட வீணடிக்காமல் உழைப்பதிலும், உழைத்து உயர்வதிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதைச்சிறப்பாக செய்து வெற்றி காண்பீர்கள். கூட்டுத்தொழில் உங்களுக்கு எப்போதுமே ஒத்துவராது. அதனால், லாபமும் கிட்டாது. உங்களுக்கு தற்பெருமை அதிகம் என்பதால் ஒரு சிலர் உங்களை வெறுத்தும் ஒதுக்குவார்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எப்போதும் முதலிடம் வகிப்பவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள். உதவி செய்வதால் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்பவர்களும் நீங்கள்தான். செல்வாக்கும், சொல்வாக்கும் பெற்றவர்களாக விளங்கும் நீங்கள், வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும்போது மட்டும் பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

உங்களுக்கு களத்திரக்காரகன் சுக்கிரன் பகைவன் என்பதால், மண வாழ்க்கை அமைவது இறைவன் கொடுத்த வரமாகவே இருக்கும். எளிய தோற்றத்தைக் கொண்டவராக நீங்கள் இருந்தாலும் எப்போதும் உங்கள் சொல்லுக்குத் தனி மதிப்பிருக்கும். வாழ்வின் பிற்பகுதிதான் உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும்.உங்களுடைய வாழ்க்கை வசதிக்கேற்ப யாவும் இயல்பாகவே அமைந்துவிடும். பணவரவில் தடைகள் இருந்தாலும் கடன் வாங்கியாவது வீடு, மனை, வாகனம் என்று அமைத்துக்கொள்வீர்கள். வீட்டிற்குள் நீங்கள் எப்படி இருந்தாலும் வெளிவட்டாரத்தில் மதிப்பு மிக்கவர்களாகவே இருப்பீர்கள்.

எங்கு சென்றாலும் உங்களுக்கு முதலிடம் கிடைத்துவிடும். உங்கள் வார்த்தைகளைக்கேட்டு மற்றவர்கள் செயல்படுவார்கள். என்றாலும், எந்த விஷயத்தையும் நீங்கள் விட்டுக்கொடுத்து பின்வாங்க மாட்டீர்கள். அந்த அளவிற்கு உங்களிடம் பிடிவாத குணம் மேலோங்கி இருக்கும். இளவயதிலேயே பார்வையில் பிரச்சினை உண்டாகி கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும் இரக்க குணமும், இரக்க சுபாவமும் கொண்ட நீங்கள் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பெரிதாக சந்தோஷம் அடைவீர்கள். ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கும் பெரிதாக வருந்துவீர்கள்.

சுதந்திர மனோபாவத்தைப் பிறவியிலேயே உடையவர் நீங்கள். அதனால், உங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. யாருக்கும் கட்டுப்பட்டும் நீங்கள் வாழமாட்டீர்கள். உங்கள் போக்கில் செல்வதே உங்களுக்கும், உங்களை நம்பி இருப்பவர்களுக்கும் முன்னேற்றத்தை உண்டாக்கும். எதையும் ஊடுருவிப்பார்க்கும் உங்களிடம் சுறுசுறுப்பும் வேகமும் அசாத்தியமான துணிச்சலும் இருக்கும். பிறர் உள்ளத்தில் இருப்பதை சுலபமாக அறிந்துகொள்ளும் சக்தியும் உங்களுக்கிருக்கும். இந்த ஆற்றலை நீங்கள் வளர்த்துக்கொள்ள, வளர்த்துக்கொள்ள உங்கள் எதிர்கால வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.

உங்களில் பலர் சட்ட மேதைகளாகவும், தத்துவ வாதிகளாகவும், கல்வியாளர்களாகவும், ஆன்மிக பிரசங்கிகளாகவும் இருப்பீர்கள். எதிர்காலத்தின்மீது எப்போதும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். பிறருக்கு வழிகாட்டியாக விளங்கும் உங்களுக்கு எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நிறைந்திருக்கும்.உங்கள் ராசியாதிபதி தேவகுருவான, குரு பகவான் என்பதால், அதிர்ஷ்ட வாய்ப்புகளும் அதன்மூலம் வசதிகளும் உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வந்துசேரும். நீங்கள் இருக்கும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பிருக்கும். என்றாலும், அதை வைத்து முன்னேறுவதும், நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.

மற்றவர்களின் செயல்களுக்கு வழிமுறை செய்துதரும் ஆற்றல் இயல்பாக உங்களுக்கிருக்கும். நிர்வாகத்துறையில் மிகச் சிறப்பாக செயல்படுவீர்கள். வாழ்க்கையில் அலங்காரத்தைவிட வசதியாக வாழ்வதையே விரும்புவீர்கள். ருசியான உணவும், அதிகமான இன்ப உணர்ச்சியும் உங்கள் தேவையாக இருக்கும். அதை அடையும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். வெற்றியும் தோல்வியும் உங்களைப் பொருத்தவரையில் சம நிலையிலேயே இருந்துவரும்.

உங்கள் சுய கௌரவத்தை எப்போதும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். நீங்கள் பொருளீட்டுவதும் அந்த வகையிலாகத்தான் இருக்கும். உங்களிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் அதை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதில் லாபத்தை உண்டாக்கிக் கொடுத்து உங்கள்மீது வைத்த நம்பிக்கையை வலுப்படுத்துவீர்கள். எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் கையில் எடுத்தால் அதை முடிக்காமல் ஓய மாட்டீர்கள்.

நல்ல முறையில் நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் நீங்கள், பிறர் செய்யும் குற்றங்களைக் கண்டு கோபப்படுவீர்கள். அவர்களிடமே அதுபற்றிச் சொல்லி அவர்களை திருத்தவும் முயல்வீர்கள். உணர்ச்சிவசப்பட்டு கண்டிக்கவும் செய்வீர்கள். அதனால் மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள்? எப்படிப் பேசுவார்கள்? என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். உங்களைப்போலவே எல்லோரும் நீதியாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் சில சமயங்களில் ஏமாற்றமும் அடைவீர்கள். நேர்மையாக, உண்மையாக நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்கள் உங்கள் மீது வெறுப்பு கொள்ளவும் வைக்கும்.

மதத்தின் மீதும், பக்தியின் மீதும் ஒரு வகை நம்பிக்கை உங்களுக்கிருக்கும் என்பதால் தெய்வீக விஷயங்களில் உங்கள் மனம் ஒன்றிவிடும். கால நிலைகளையும், சூழ்நிலைகளையும், மக்கள் மனநிலைகளையும் புரிந்து கொண்டு செயல்படும் உங்களுக்கு, பக்தியின் மூலமாகவே வாழ்வதற்கேற்ற வழியும், உண்மையின் உயர்ந்த விளக்கமும், எல்லாவற்றையும் உணரும் சந்தர்ப்பங்களும் உண்டாகக்கூடும். உங்களுக்கு பாக்யாதிபதியான சிம்ம லக்னக்காரர்களுடன் வாழ்க்கையின் உறவோ தொடர்போ உங்களுக்கிருருக்கும். வாழ்க்கையில் உஷாராகவே நடந்து கொள்வீர்கள். அறிவியக்கப்படி உங்கள் மனமும் உடலும் இயங்கும் என்பதால், அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்வது அவசியம்.

இவை யாவும் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்குரிய பொதுப்பலன்களாகும். நீங்கள் தனுசு ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நட்சத்திரங்கள் வேறுபட்டிருக்கும். ராசிநாதனான குரு பகவானின் சஞ்சார நிலையும் மாறுபட்டிருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கிரகங்கள் வேறுபட்டிருக்கும். லக்னங்களில் மாற்றம் இருக்கும். தசா புத்திகளில் வித்தியாசங்கள் இருக்கும். ஒருவருக்கு அமைந்திருப்பதுபோல் மற்றவர்களுக்கு கிரகங்கள் அமைந்திருக்காது என்பதால், ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில்தான் கோட்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப்போகும் பலன்களை நாம் அறிந்து கொள்கிறோம். ஜாதக ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்களுக்கும் கோட்சார பலன்கள் வழியே நன்மைகள் உண்டாகும் வாய்ப்புள்ளது. அந்த ரீதியில் சுபகிரகமான குரு பகவானின் பெயர்ச்சியை நாம் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.

ஆறாமிட குரு அதிர்ஷ்டம் தருமா?
கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசியான தனுசு ராசிக்கு பூர்வ, புண்ணிய, புத்திர ஸ்தானம் என்னும் மேஷ ராசியில் சஞ்சரித்துவந்த குரு பகவான் 1.5.2024 அன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ரிஷப ராசியில் சஞ்சரித்து உங்களுக்குப் பலன்களை வழங்கிட உள்ளார்.ஒரு வருடமாக ஐந்தாம் வீட்டிலிருந்த குரு பகவான் உங்கள் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கினார். உடல் நிலையில் முன்னேற்றத்தையும் தெளிவையும் ஏற்படுத்தினார். தவறான நட்புகளின் சகவாசத்தால் சிறைப்பட்ட கைதிபோல் சிக்கியிருந்த உங்களை வெளியில் கொண்டு வந்தார். நல்லது எது? கெட்டது எது? நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பதை தெரிந்து கொள்ளும் சக்தியை உங்களுக்கு வழங்கினார். தடைப்பட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாகக் கூடிவந்து உங்கள் திறமையை, பெருமையை உலகம் காணக்கூடிய நிலையை உருவாக்கினார். தொழில், உத்தியோகத்தில் இருந்துவந்த சிரமங்களையெல்லாம் நீக்கி கவுரவத்தையும், வருமான உயர்வையும் உண்டாக்கினார். மேலதிகாரிகளின் ஆதரவும், உதவியும் கிடைத்து எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றிகளை அடைய வைத்தார்.

சுயதொழில் புரிபவருக்கு லாபம் காணும் நிலையை உண்டாக்கியதுடன் புதிய முதலீடுகளும், கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைத்து எல்லாவற்றிலும் வெற்றிக்கு வழிவகுத்தார். திருமண வயதில் இருந்தவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். வசதியையும் அந்தஸ்தையும் உயர்த்தி கௌரவமான இடத்தில் உங்களை இருக்க வைத்தார். புனிதத் ஸ்தலங்களுக்கு சென்றுவரும் பாக்யத்தை உண்டாக்கினார். சென்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படும் நிலையையும் ஏற்படுத்தினார்.குரு பகவான் 5 ம் இடத்தில் அமர்ந்திருந்த கடந்த வருடம் உங்களுக்கு நன்மையான காலமாகவே இருந்திருக்கும்.”ஐந்தில் இருந்த போது எங்களுக்கு அமோகமான பலன்களை வழங்கிய குரு பகவான், ஆறாம் இடத்திற்கு வரும்போது எத்தகைய பலன்களை வழங்குவார்? நன்மைகளை உண்டாக்குவாரா? இப்போதுள்ள நிலையில் தடுமாற்றத்தை ஏற்படுத்துவாரா? என்னதான் செய்வார் எங்களுக்கு?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இதற்கு ஒரு பழம்பாடல் விடையளிக்கிறது. ‘சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தளை பூண்டதும்…’ என்கிறது அப்பாடல். குரு பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், ஜாதகருக்கு கை, கால்களின் பந்தனம் உண்டாகுமாம். ஆறாம் இடம் என்பது, ரோக ஸ்தானமாகும். இதை, சத்ரு ஸ்தானம் என்றும் சொல்லலாம். வியாதிகளையும் அதனால் உண்டாகும் பாதிப்புகளையும், விரோதிகளையும் அவர்களால் உண்டாகும் தொல்லைகளையும் இந்த இடத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.பாப கிரகங்கள் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு யோகமான பலன்களை வழங்குவர். முழு சுபகிரகமான குரு பகவான் இங்கே சஞ்சரிக்கின்றபோது உங்களுக்கு எதிர்மறையான பலன்களையே வழங்குவார்.

ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பவர், அங்கே சஷ்டாஷ்டக நிலையை அடைகிறார். அதனால், இக்காலத்தில் உறவும் பகையாகும், வீணான விவாதங்களும் விவகாரங்களும் உண்டாகும். வெளியிடங்களிலும் விரோதம் தோன்றும். விரோதிகள் உண்டாவார்கள். வேண்டாத பயம் தோன்றும். எந்தவொரு காரியமும் சரிவர கைகூடாமல் சங்கடம் கொடுக்கும். என்பது நமது முன்னோர்கள் கூறியுள்ள தகவல்.

ஜோதிட விதிகளின்படி விருச்சிகத்தைத் தவிர மற்ற எல்லா ராசிக்காரர்களுக்கும் ஆறாம் இடம் எதிர்மறையான, பாதகமான இடம்தான். பகை, பிணி, கடன் போன்ற பாதிப்பான பலன்கள் தருகிற இடம் ஆறாமிடம். சுபகிரகமும், தன காரகனுமான குருபகவான் அங்கே சஞ்சாரம் செய்யும்போது, அவரின் நல்ல குணங்கள் முடக்கப்படும். அவரால் உண்டாகக்கூடிய நல்ல பலன்கள் தடுக்கப்படும். பொதுவாக குரு பகவான் அமர்கின்ற இடத்திற்கு நன்மைகள் வழங்கமாட்டார் அந்த இடத்திற்கு பாதகமே வழங்குவார் என்பது விதி.

ரோக ஸ்தானமான ஆறாம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும்போது உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். தொற்று நோய்களாலும் பாரம்பரிய உபாதைகளாலும் முழங்கால், வயிறு, கருப்பை, மாதவிடாய்க் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை தலைதூக்கும். பணவரவிலும் தடையுண்டாகும். இக்காலத்தில் அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகினால் மட்டுமே சங்கடங்களில் இருந்து தப்பமுடியும்.

செய்துவரும் தொழிலில் முதலீடு அதிகரிக்கும் என்றாலும், வருமானம் போதிய அளவில் இருக்காது. கடன் தொல்லையால் மனம் கலங்கநேரும். வரவைவிட செலவு பலமடங்கு அதிகரிக்கும். மனம் எதையோ இழந்ததுபோல் எதிலும் நாட்டம் இல்லாமல் போகும். எந்த இடத்திற்குச்சென்றாலும் அங்கே போட்டியாளர்களும் விரோதிகளும் உண்டாவார்கள். கணவன் மனைவிக்குள்ளும் அடிக்கடி கருத்து வேறுபாடு தோன்றும். உறவினர்களும் நண்பர்களும்கூட பகையாவார்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அமையும் என்றாலும், அவர்களும் சுயநலக்காரர்களாகவே இருப்பார்கள். குறுக்குவழியில் செல்ல எண்ணம் வரும். அதனால் தொல்லைகளும் அவமானங்களும் உண்டாகும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் மேற்கண்ட பலன்களை வழங்கக் கூடியவராகவே இருக்கிறார்.

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானதிபதியும் குரு பகவானே ஆவார். ஆறாம் வீட்டில் அவர் அமரும் காலத்தில் சுகத்தில் திருப்தியான நிலையை உங்களால் காண முடியாமல் போகும். சங்கடங்களும், நிம்மதியற்ற நிலையும், குடும்பத்தில் குழப்பங்களும், வருவாயில் தடைகளும் உண்டாகும்.

ஆறாமிட குருவால் நன்மைகளை வழங்க முடியாது என்றாலும், அங்கிருந்து அவர் பார்க்கும் இடங்களுக்கு அதிர்ஷ்டங்களை வழங்கிடக்கூடியவராக இருக்கிறார். ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்ற வார்த்தையை இப்போது நீங்கள் உணரப் போகிறீர்கள். அவர் பார்க்கும் இடங்களினால் நன்மைகள் அடைந்து மகிழ்ச்சி அடையப்போகிறீர்கள்.குரு பகவானின் 5, 7, 9 ம் பார்வைகள் உங்கள் ராசிக்கு 10, 12, மற்றும் 2 ம் இடங்களுக்கு உண்டாகிறது என்பதால் அந்த மூன்று இடங்களும் இக்காலத்தில் சிறப்படையும்.

முதலில், தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் மற்றும் ஜீவன ஸ்தானத்தின் மீது தனது பார்வையை செலுத்தும் குரு பகவான், நீங்கள் செய்துவரும் தொழிலில் அபிவிருத்தியை உண்டாக்குவர். பார்த்து வரும் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அரசியல்வாதிகளுக்கு பட்டம், பதவி என்று வழங்கி யோகநிலையை ஏற்படுத்துவார். புதுப்புது யோசனைகளை மனதில் உண்டாக்கி உங்களை செயல்பட வைப்பார். வசதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதற்கான வழிவகைகளை வழங்குவார். புனிதப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பையும் சிலருக்கு ஏற்படுத்துவார். நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் என்று உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், கல்வி நிறுவனங்கள் நடத்துவோர், நோட்டு, புத்தகம் தயாரிப்பவர்கள், ஆசிரியர்கள், ஆவண எழுத்தர்கள் திட்டமிட்டு செயல்பட்டால் இக்காலத்தில் வெற்றியடைய முடியும். இக்காலத்தில் நெருப்பினால் பாதிப்புண்டாக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம்.

அடுத்து, தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12 ம் வீட்டைப் பார்வையிடும் குரு பகவான், வரவிற்குமீறிய செலவுகளை உண்டாக்குவார். இயந்திரத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தொழிலில் புதுப்பிப்பு பணியை மேற்கொள்ள வைப்பார். விவசாயிகளுக்கு செலவுகளை அதிகரிப்பார். நீங்கள் ஒரு பட்ஜெட் போட்டு வீடு கட்டினாலும் அதைவிட செலவு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஒருசிலருக்கு ஏற்படும். அலச்சல் அதிகரித்து அதனால் உடல்நிலையில் பாதிப்பு தோன்றும். பொன், பொருளை விற்று அவசர செலவுகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளுக்காகவும் கையிருப்பு கரையும். அரசாங்க விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மையாகும்.

அடுத்து, தனது ஒன்பதாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தைப் பார்வையிடும் குரு பகவான், குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்குவார். குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளித்து வாழ வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றுவீர்கள். ஆரம்ப, உயர்க்கல்வி கற்போர்க்கு மேன்மையான பலன் உண்டாகும். படிப்பில் கவனம் செல்லும். அறிவை வளப்படுத்தி அதன் மூலம் அதிர்ஷ்டம் காணும் நிலையை உண்டாக்குவார். கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை அதிகரித்து இன்ப நிலையை அதிகரிப்பார். பூமி, தொழில் வகையில் ஆதாயத்தை வழங்குவார். பயணத்தால் அனுகூலத்தையும் மனதில் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார். கண்களில் இருந்த கோளாறை அகற்றி பார்வையை பலமடைய வைப்பார் உங்கள் வாக்கிற்கு மதிப்பையும் மரியாதையையும் கூட வைப்பார்.

இவையாவும் குரு பகவானின் ஆறாமிட ஸ்தான பலத்தாலும், பார்வைகளினாலும் நீங்கள் காணப்போகும் பலன்களாகும்.ஒன்பது கிரகங்களில் ஒருவர்தான் குரு. மற்ற எட்டு கிரகங்களின் சஞ்சார நிலைகளையும் பார்க்கும்போது மேலே கூறியுள்ள சங்கடப்பலன்களில் மாற்றம் உண்டாகும்.

பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு பகவான் ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து அதிர்ஷ்டமான பலன்களை வழங்கிக் கொண்டிருந்தவர், 1.5.2024 முதல் சத்ரு ஸ்தானத்திற்கு சென்று எதிர்மறையான பலன்களை வழங்கவுள்ள நிலையில், அங்கே சஞ்சரிக்க ஆரம்பித்த மூன்றாம் நாளான, 3.5.2024 முதல் 2.6.2004 வரை அவர் அஸ்தங்கம் அடைகிறார் என்பதால், இக்காலத்தில் ஆறாம் இட குருவின் பாதக பலன்களை அவரால் வழங்க முடியாமல் போகும் என்பதால், நீங்கள் நிம்மதி அடையலாம். இதுவரை உண்டாகி வந்த பலன்களில் சிறு சிறு மாற்றங்கள் இருக்குமே ஒழிய சங்கடங்கள் எதுவும் உங்களை நெருங்காது. ஆனால், ராசிநாதன் அஸ்தங்கம் அடைவதால் செயல்களில் தடுமாற்றம், சரியான முடிவெடுக்க முடியாத நிலை ஏற்படும். இக்காலத்தில், உங்கள் சுய ஜாதகத்தில் யோகமான திசா புத்தி நடந்து வந்தால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். செயல்கள் லாபமாகும்.

வக்ர காலம் உங்களுக்கு வசந்த காலம்
குரு பகவானின் சஞ்சார நிலையில் அஸ்தமனமும், வக்ர நிலையும் ஏற்படுவதால் அக்காலங்களில் அவர் வழங்கும் பலன்களில் மாற்றம் உண்டாகும். 15.10.2024 முதல் 11.2.2025 வரை குரு வக்ரமடைவதால் சத்ரு ஸ்தானத்தில் இருந்து அவர் வழங்கிவரும் பாதக பலன்கள் இக்காலத்தில் மாறுபடும். பொதுவாக குரு பகவான் வக்ரமடையும்போது முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால் இக்காலத்தில் கடந்த காலத்தில் உங்களுக்கு உண்டான யோகமான பலன்கள் மீண்டும் தொடரும். உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். தொல்லைகள் கொடுத்தோரும் சீண்டிப்பார்த்தோரும் விலகிச்செல்வார்கள். நினைத்ததை சாதித்துக் கொள்ளும் நிலை உருவாகும். தெய்வ அருள் கிடைக்கும். பெரியோரின் ஆசிர்வாதம் உண்டாகும். தொழில் உத்தியோகம் போன்றவற்றில் இருந்த பிரச்சினைகள் முடிவிற்குவரும். எல்லாவற்றிலும் லாபம் என்ற நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீசும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். சொத்து சேர்க்கை உண்டாகும்.

மூன்றாமிட சனியால் முயற்சிகள் யாவிலும் வெற்றி
மூன்றாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் போது முயற்சிகள் யாவும் வெற்றியாகும். முன்னேற்றம் உண்டாகும். வாய்ப்புகள் உங்கள் வாசல் தேடிவரும் என்று சொல்லலாம். இக்காலத்தில் உங்கள் பொருளாதார நிலை உயரும். எடுத்த காரியங்கள் யாவற்றிலும் லாபம் உண்டாகும். செய்துவரும் தொழில் சிறப்படையும். தைரியமும் துணிச்சலும் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். வேலைத் தேடியவர்களுக்கு வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும் உங்களுக்கு தொல்லைகள் கொடுத்த எதிரிகளை அடக்கி வெற்றியடையும் ஆற்றல் உண்டாகும். மதிப்பும் மரியாதையும் கௌரவமும் உயரும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். அதற்காக செலவழிக்க நேரும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கம் நீங்கி கைக்கு வரும். பிள்ளைகளின் முன்னேற்றம் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். அரசியல் வாதிகள், அரசு பணியாளர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

ராகு – கேது சஞ்சாரப் பலன்கள்
குருபகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், ராகு உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு ஆசைகளை தூண்டக்கூடியவர் என்பதால் சுகத்தின்மீது இக்காலத்தில் உங்கள் ஆசை அதிகரிக்கும். தவறானவர்களின் சேர்க்கையும் அவர்கள் மீது மயக்கமும் ஏற்படலாம். மறுபக்கம், அலைச்சல் அதிகரிக்கும். வேலைகளில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். நிம்மதியாக உறங்கினோம் சந்தோஷமாக பொழுதைக் கழித்தோம் என்ற நிலை இல்லாமல் போகும். தாயாருக்கு எந்த வழியிலாவது தொல்லைகள் ஏற்படும். அல்லது, தாயாரை விட்டு இக்காலத்தில் பிரிய நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தில் ஏதேனும் ஒரு குறைபாடு உண்டாகும். மருத்துவச்செலவு உண்டாகும். வண்டி, வாகனம் சொத்து விஷயங்களில் கவனம் வேண்டும். பயணத்தில் எச்சரிக்கையாக இருப்பதால் எதிர்பாராத விபத்தில் இருந்து தப்பிக்க முடியும். இந்த நேரத்தில் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால், செய்துவரும் தொழிலில் தேக்கம், பார்த்து வரும் உத்தியோகத்தில் பிரச்சினை, வருமானத்தில் குறைவு, குடும்பத்தில் நெருக்கடி, ஆரோக்கியத்தில் பின்னடைவு, மார்பு வலியால் அவதி, சமூகத்தில் மதிப்பு மரியாதைக் குறைவு, பல வகையிலும் அவமானம், பட்டம் பதவி கிடைப்பதில் சிக்கல், அரசியல்வாதிகளுக்கு தலைமையிடத்தில் அதிருப்தி, வீண் அலைச்சல், பொருள் நஷ்டம், பண நஷ்டம், கஷ்டம் என்று பல வகையிலும் சங்கடங்களுக்கு ஆளாகவேண்டி இருக்கும். ஆனால், திசா புத்தி நன்றாக இருப்பவர்களுக்கு இத்தகைய பலன்களில் மாற்றம் இருக்கும். பாதிப்புகள் இருக்காது.

சூரியனால் உண்டாகும் ராஜயோகம்

ஒன்பது கிரகங்களும் அவரவர் சஞ்சரிக்கும் நிலைக்கேற்ப, சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை வழங்குவது போல், சூரிய பகவானும் அவரவர் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது மற்ற கிரகங்களால் உண்டான சங்கடங்களை எல்லாம் இல்லாமல் செய்வார். அவயோகப் பலன்களை கட்டுப்படுத்துவார். அக்காலங்களில் ஜாதகருக்கு எல்லாவிதமான நன்மைகளையும் உண்டாக்குவார். அந்த வகையில், தனுசு ராசியினரான உங்களுக்கு, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, மாசி ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு எல்லாவித நன்மைகளையும் உண்டாக்குவார். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். தன்னம்பிக்கையை உண்டாக்குவார். தைரியமுடன் செயல்பட வைப்பார். உடலில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளில் இருந்து விடுவிப்பார். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகளை இல்லாமல் செய்வார். உத்யோகத்தில் உண்டான பிரச்சனைகளுக்கு தீர்வினை உண்டாக்குவார். வம்பு வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். எதிரிகள் போட்டியாளர்களை இருந்த இடம் தெரியாமல் செய்வார். செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட தடைகளை நீக்கி வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். எதிர்பார்த்த வருமானத்தை வழங்குவார். சொத்து சேர்க்கையை உண்டாக்குவார்.
மகிழ்ச்சியை அதிகரிப்பார்.

பொதுப்பலன்
குரு பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவர் பார்க்கும் இடங்கள் லாபம் அடைவதால், இக்காலத்தில் உங்கள் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். வீடு நிலம் என்று வாங்குவீர்கள். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். சிறிய வீட்டில் வசித்தவர்கள் பெரிய வீடு கட்டி குடியேறுவீர்கள். செய்து வரும் தொழிலில் இருந்த தடைகள் விலகி வளர்ச்சி அதிகரிக்கும். லாபம் உண்டாகும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த வருமானம் தடையின்றி வரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவி உறவு சிறக்கும். நிம்மதியான உறக்கம், அளவில்லா சந்தோசம் என்ற நிலை ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் விவசாயம் முன்னேற்றம் அடையும். ஆரம்ப, உயர்க்கல்வியில் முன்னேற்றம் தோன்றும். மொத்தத்தில், குருவின் பார்வைகளாலும், மூன்றாமிட சனியினாலும், நான்கு மாதங்கள் சூரியனாலும் உங்கள் வாழ்க்கை வளமாகும். தேவைகள் பூர்த்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.

பரிகாரம்
ஆலங்குடிக்கு ஒருமுறைச் சென்று குரு பகவானை அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதுடன், ஐயா வாடியில் எட்டு மயானங்களுக்கிடையே எழுந்தருளி எதிரிகளை சம்ஹாரம் செய்யும் பிரத்தியங்கிராவை தரிசித்து மனமுருகி வணங்கி வேண்டி வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.

திருக்கோவிலூர் பரணிதரன்9444 393 717

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

October 18, 2025
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

October 16, 2025
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்

October 15, 2025
thiruvannamlai
ஆன்மிகம்

அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி 4ம் நாள் விழாவில் பராசக்தி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி.

September 25, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

kanimozhi Dmk

ஸ்டாலின் அரசுக்கு எதிராக கனிமொழி போட்ட பதிவு.. கனிமொழியை விமர்சிக்க தொடங்கிய சின்னவர் ஆதரவாளர்கள்..

October 7, 2024
ஜாமீன் சிதம்பரத்தை சின்னாபின்னமாக்கிய பிரணாப் மகள் !

ஜாமீன் சிதம்பரத்தை சின்னாபின்னமாக்கிய பிரணாப் மகள் !

February 12, 2020
L MURUGAN

பா.ஜ.க தான் சமூக நீதியை நிலைநாட்டும் கட்சி! நேற்று மாநில தலைவர் இன்று மத்திய அமைச்சர். அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த கவுரவம்!

July 7, 2021
பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்! என்ன நடக்கப்போகிறது தமிழகத்தில்! அடுத்தடுத்த அதிரடிகள்-தி.மு.க எம்.பியின் பதவி பறிபோகுமா?

பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்! என்ன நடக்கப்போகிறது தமிழகத்தில்! அடுத்தடுத்த அதிரடிகள்-தி.மு.க எம்.பியின் பதவி பறிபோகுமா?

October 24, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x