காவிரி விவகாரம் காங்கிரஸ் பெயரை காணோம்… தி.மு.கவை வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் காவிரி நதிநீர் தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சியின் பெயரை சொல்லாமல் விட்டது ஏன் என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி தீர்மானம் முழுமையாக இல்லை என்று கூறி சட்டசபையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். காவிரி நீர் உரிமையை காப்பதில் திமுக அரசு எப்போது உறுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரி தனி தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் தீர்மானத்தை கொண்டுவந்தது ஏன் கர்நாடகா அரசு என்று மட்டும் கொண்டு வந்தது ஏன் என்று பாஜக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தீர்மானம் முழுமையாக இல்லை என்று கூறி பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கர்நாடகா மாநில அரசிடம் இருந்து சட்டப்பூர்வமான உரிமையை விவசாயிகளின் நலனை பாதுகாக்கின்ற வகையில் காவிரி நதி நீரை பெற்றுத்தர முடியாமல் இயலாமையை மறைக்க முயல்கிறார். முதலவர்

அணை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற போது அதை எதிர்த்து விட்டு இப்போது இரட்டை நிலைப்பாடு எடுப்பது ஏன். இந்த தீர்மானம் முழுமையான தீர்வை நோக்கி நகராமல் இருக்கிறது.

தமிழக மக்களின் நலனை சமரசம் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. தமிழகத்தின் நீர் உரிமைக்காக என்றும் நாங்கள் குரல் கொடுப்போம். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்த போது எந்த சிக்கலும் வரவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த போது மட்டும் சிக்கல் வருவது ஏன்? திமுகஅரசு காவிரி நீரை பெற்றுத்தர முடியாமல் மக்கலை ஏமாற்றுகின்றனர். தமிழக மக்களை

தீர்மானம் முழுமையாக இல்லாததை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

நான்தான் எல்லாம் என்று சொல்பவர்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர கெப்பாசிட்டி இல்லை என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். பாஜக கூறியுள்ள சில அம்சங்களை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version