Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

‘காசா மக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?’ வாயைமூடி மவுனம் காக்கும் போராளிகள் !

Oredesam by Oredesam
October 16, 2023
in உலகம், செய்திகள்
0
‘காசா மக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?’ வாயைமூடி மவுனம் காக்கும் போராளிகள் !
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து, ஐ.நா.,வுக்கான அமெரிக்க முன்னாள் துாதரும், அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளவருமான நிக்கி ஹாலே, தனியார் ‘டிவி’க்கு பேட்டி அளித்துள்ளார்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

பாலஸ்தீன மக்களை, குறிப்பாக அப்பாவி மக்களை நாம் கவனிக்க வேண்டும். தற்போதுள்ள போர் சூழலை அவர்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தில் அரபு நாடுகளான லெபனான், ஜோர்டான், எகிப்து ஆகியவை என்ன செய்கின்றன?

எகிப்துக்கு கடந்தாண்டு பல கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளோம். அவர்கள் ஏன் தங்கள் கதவை திறக்கவில்லை? பாலஸ்தீனியர்களை ஏன் ஏற்கவில்லை?ஏனென்றால், ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்களுக்கு அருகில் இருப்பதை இந்த அரபு நாடுகள் விரும்பவில்லை.

அப்படியிருக்கும்போது, இஸ்ரேல் மட்டும் எப்படி தனக்கு அருகில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இருப்பதை ஏற்க முடியும்? அதனால் இந்த விஷயத்தில் நாம் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.யார் நல்லவர், யார் கெட்டவர் என்று நம்ப முடியாததால், பாலஸ்தீனியர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு இந்த நாடுகள் விரும்பவில்லை.

ஆனால், தற்போது நடப்பதற்கு இஸ்ரேலையும், அமெரிக்காவையும் குற்றம் கூறுவர்.அவர்கள் நினைத்தால், இந்த பிரச்னையை தீர்க்க முடியும். பயங்கரவாதத்தை நிறுத்தும்படி ஹமாஸ் அமைப்புக்கு கூற முடியும்.ஹமாஸ் அமைப்பு மற்றும் அதன் தலைமையுடன், கத்தார் தொடர்ந்து இணைந்து செயல்படுகிறது.

ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் தொடர்ந்து நிதி அளித்து வருகிறது.அதனால், இந்த அரபு நாடுகள் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கின்றன. ஆனால், இஸ்ரேலையும், அமெரிக்காவையும் குற்றஞ்சாட்டுகின்றன.காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வெளியேறுவதை ஹமாஸ் விரும்பவில்லை.

அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். அந்த மக்களையே மனித கேடயமாக பயன்படுத்துகிறது.அதற்கு அந்த மக்கள் அங்கு இருக்க வேண்டும். அப்பாவி மக்களை கொல்கின்றனர் என, இஸ்ரேலுக்கு எதிரான பிம்பத்தை உருவாக்க, அந்த மக்கள் காசாவிலேயே இருப்பதை, ஹமாஸ் விரும்புகிறது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய அட்டூழியங்கள், கொடுமைகளை மறக்க முடியுமா? உயிரை காப்பாற்றிக் கொள்ள பெண் குழந்தைகள் ஓடியதை மறக்க முடியுமா? தொட்டிலிலேயே குழந்தைகள் உயிரிழந்து கிடந்ததை மறக்க முடியுமா? மக்களை சாலைகளில் இழுத்து வந்து, கொடுமைப்படுத்தியதை மறக்க முடியுமா? ஆனால், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக குரல் கொடுக்கின்றனர்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இருந்து, ஐந்து அமெரிக்கர்களை மீட்பதற்காக, 50,000 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. ஐந்து பேருக்கே இவ்வளவு கொடுத்தால், அத்தனை பேரையும் மீட்க எவ்வளவு கேட்பர்? அமெரிக்கா வலுவாக இருக்க வேண்டும். இஸ்ரேல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

” இந்தியா எனும் யானையிடம் ”  கனடா  எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து

” இந்தியா எனும் யானையிடம் ” கனடா எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து

September 23, 2023
இந்து முன்னணி நிர்வாகியின் காருக்கு தீ வைப்பு! திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம் ! காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்குமா ?

இந்து முன்னணி நிர்வாகியின் காருக்கு தீ வைப்பு! திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம் ! காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்குமா ?

February 12, 2020
விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே 13ம் தேதி பிரச்சனைகளுக்கு தீர்வு ! பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே 13ம் தேதி பிரச்சனைகளுக்கு தீர்வு ! பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

September 11, 2025
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியருக்கு .எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மனு!!!

November 17, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x