Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்தோர் பற்றிய ஆற்றிய சாதனையின் சிறப்புத் தகவல்கள்.!

Oredesam by Oredesam
December 9, 2021
in இந்தியா, செய்திகள்
0
ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்தோர் பற்றிய ஆற்றிய சாதனையின் சிறப்புத் தகவல்கள்.!
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம்…

இந்த விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் இதற்கு முன் 2015ஆம் ஆண்டு லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தபோது அவர் நாகலாந்தின் திமாப்பூரில் அவர் சென்ற சீட்டா வகை ஹெலிகாப்டர் புறப்பட்ட சற்று நேரத்தில் எஞ்சின் கோளாறால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரும், விமானிகள் இருவரும், கர்னல் ஒருவரும் உயிர்தப்பியது குறிப்பிடத் தக்கது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

திருச்சூர் மாவட்டம் புதூரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி பிரதீப் கேரள, உத்தரக்கண்ட் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பின்போது மீட்புப் பணியாற்றியதற்காகக் கேரள அரசிடமும் குடியரசுத் தலைவரிடமும் பாராட்டுப் பெற்றவர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையிலும் பங்குபெற்றவர்.ஆறு மாதங்களுக்கு முன் சூலூருக்குப் பணியிட மாற்றம் பெற்று வந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தையைப் பார்க்கச் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். சில நாட்களுக்கு முன் தனது மகனின் பிறந்த நாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பிய நான்கே நாட்களில் அவர் விபத்தில் உயிரிழந்தார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைபெறும் அவர் தந்தைக்கு இந்தத் தகவலை இன்னும் தெரிவிக்கவில்லை.


விபத்தில் உயிர்தப்பிய விமானியும் கேப்டனுமான வருண் சிங் சிறந்த பணிக்காகச் சவுரிய சக்கர விருது பெற்றவர். உடலில் 85 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விங் கமாண்டராக இருந்த அவர் அண்மையில்தான் குரூப் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றார்.

ஹெலிகாப்டரின் விமானியான விங் கமாண்டர் பிஎஸ் சவுகான் உத்தரப்பிரதேசம் ஆக்ராவைச் சேர்ந்தவர். செவ்வாய் இரவில் அவர் தாயுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். மறுநாள் ஹெலிகாப்டர் விபத்தில் மகன் இறந்த செய்தியை அறிந்த பெற்றோர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்தனர். சவுகானுக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

பிபின் ராவத்தின் பாதுகாப்பு அதிகாரியாக ஓராண்டாகப் பணியாற்றி வந்த பிரிகேடியர் லக்வீந்தர் சிங்கும் இந்த விபத்தில் உயிரிழந்தார். அரியானாவின் பஞ்ச்குலாவைச் சேர்ந்த இவர் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற இருந்தார். பயங்கரவாதிகளுக்குப் பதிலடி கொடுப்பதில் வல்லவர் எனக் கருதப்படும் இவர் சேனா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர்.ராஜஸ்தானின் ஜுன்ஜுனு என்னும் நகரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி குல்தீப் சிங்கும் இந்த விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவர் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கோவைக்கு  வர வேண்டாம்  ஸ்டாலின் திரும்பி போங்க  ட்விட்டரில் அடிச்சு தூக்கும் கோ பேக் ஸ்டாலின் #GoBackStalin

கோவைக்கு வர வேண்டாம் ஸ்டாலின் திரும்பி போங்க ட்விட்டரில் அடிச்சு தூக்கும் கோ பேக் ஸ்டாலின் #GoBackStalin

May 30, 2021
Vanathi Srinivasan

முருக பக்தர்களை ஒடுக்க மதுரையில் 144 தடை உத்தரவா?’ திமுக அரசை விளாசி தள்ளிய வானதி சீனிவாசன்!

February 3, 2025
ஒரே நாளில் உலக சாதனை ! பதிவியேற்ற 100 நாளில் பட்டைய கிளப்பிய பவன் கல்யாண் !

ஒரே நாளில் உலக சாதனை ! பதிவியேற்ற 100 நாளில் பட்டைய கிளப்பிய பவன் கல்யாண் !

September 17, 2024
பிரதமர் மோடி குறித்து அவதூறு..சென்னை நபரை சென்னையில் தட்டி  தூக்கிய உத்திரபிரதேச போலீசார்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு..சென்னை நபரை சென்னையில் தட்டி தூக்கிய உத்திரபிரதேச போலீசார்!

December 12, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x