Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

காலை மாலை விளக்கேற்ற கடவுள் கூறினாரா? ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?

Oredesam by Oredesam
April 24, 2020
in ஆன்மிகம்
0
FacebookTwitterWhatsappTelegram

காலையும், மாலையும் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கு ஏற்றினால் தான் வாழ்க்கை வளமாக இருக்குமா? கடவுள் வந்து விளக்கேற்ற சொன்னாரா? இப்படி பல பேர் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பார்கள். இன்று நம்மில் எத்தனை பேர் வழக்கமாக விளக்கு ஏற்றும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம்? நமது முன்னோர்கள் நாள் தவறாமல் காலையும், மாலையும் விளக்கு ஏற்றி வந்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கு என்ன காரணம்? கட்டாயம் விளக்கேற்ற அறிவுறுத்துவதன் தத்துவம் என்ன? ஒரு சிலர் காலையில் மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் மாலையில் மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். இன்னும் பலர் வெள்ளிக்கிழமை மட்டும் விளக்கு ஏற்றி வைப்பார்கள். இவ்வாறு விளக்கு ஏற்றுவதற்கு அவர் அவர்களுக்கு வசதியாக இருக்கும் நேரத்தையும், சாஸ்திரத்தையும் கடைபிடிப்பார்கள். உண்மையில் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டுமா? ஏன்? என்று இந்த பதிவில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

READ ALSO

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

காலையில் தீபம் ஏற்றுவது என்பது நமது முன்னோர்கள் தவறாமல் செய்து வந்த ஒரு விஷயம் தான். அன்றைய காலகட்டத்தில் விவசாயத்திற்கும், மற்ற பல வேலைகளுக்கும் செல்லும் குடும்பத் தலைவர்கள் தான் இருந்தார்கள். செல்லும் காரியம் தடைகள் இன்றி நல்லபடியாக முடிக்க வீட்டில் காலையில் தீபம் ஏற்றி சூரிய பகவானை வணங்கும் பழக்கம் இருந்து வந்தது. சூரிய நமஸ்காரத்தை இரு உள்ளங்கைகளை சேர்த்து வான் நோக்கி காண்பித்து பின்னர் கைகூப்பி வணங்குவார்கள். உள்ளங்கையில் பிரபஞ்சத்தின் நல்லவற்றை கிரகிக்கும் ஆற்றல் உண்டு. இதனால் அவர்களின் உடலும், மனமும் தெளிவாக இருந்தது. சூரிய வணக்கம் இன்று உடல் ஆரோக்கியம் தரும் என்று புரிந்து கொண்டு இருக்கிறோம். அன்று எந்த டாக்டரும் இதை சொல்லி நம் முன்னோர்கள் செய்யவில்லை.

சூரியன் உதயமாகும் முன்னர் ஆரஞ்சு வண்ணத்தில் மேல் எழும் சூரியக் கதிர்கள் அருணோதயம் என்று கூறுவார்கள். இந்த அருணோதய நேரத்தில் விளக்கு ஏற்றி வைத்தால் கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும். உடலும், மனமும் ஆரோக்கியம் பெறும். அன்றைய நாள் முழுவதும் எதையோ சாதித்த திருப்தி உண்டாகும். இதை உணர்ந்து பார்த்தால் தெரியும். இந்த வேளையில் தீபம் ஏற்றினால் வீட்டில் மூதேவி நுழைவதை தவிர்க்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

தரித்திரம் ஏற்படாமல், நேர்மறை சக்திகள் வீட்டை சுற்றி இருக்கும். இதற்கு அறிவியல் காரணமும் உண்டு. அருணோதயத்தில் தான் பூக்கள், தன் இனிய இதழ்களை விரித்து அழகாய் மலரும். பூக்கள் மலர்வதை அந்த நேரத்தில் நீங்கள் காண முடியும். செடி, கொடி, மரம் என்று தாவரங்கள் அனைத்திற்கும் இந்த நேரத்தில் தான் உயிர் தன்மை அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் துவங்கும் செயல்கள் நன்மைகளை பெற்றுத் தரும்.

அதே போல் சூரியன் மறையும் நேரத்திற்கு முன்னர் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். மறையும் சூரியக் கதிர்கள் மூலமும் சில தாவரங்கள் உயிர்பெறும். ஓர் இடத்தில் அறிவியல் இருந்தால் அங்கு ஆன்மீகமும் கட்டாயம் இருக்கும். மூதேவியை விரட்டி ஆயிற்று. அடுத்து ஸ்ரீ தேவியை வீட்டிற்குள் அழைக்க வேண்டுமே!! லக்ஷ்மி தேவி வீட்டில் இருந்தால் தான் நன்மைகளும், செல்வ வளமும் இல்லத்தில் நிறைந்து இருக்கும். தினமும் தவறாமல் மாலை சூரியன் மறையும் நேரத்திற்கு முன்னர் தீபம் ஏற்றிவிட வேண்டும். இதனால் அஷ்ட லக்ஷ்மிகளும் வீட்டிற்குள் வருவார்கள். நமது இல்லத்தில் எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் இருக்கும். எண்ணங்கள் தான் வாழ்க்கை. நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனைகள் எந்த நேரத்தில் செய்தாலும் பலிக்கும். ஆனாலும் சூரிய பகவானின் உதயமும், அஸ்தமனமும் நம் பிரார்த்தனைகளை பரிபூரணமாக ஏற்கும் ஆற்றல் கொண்டது.

எவ்வளவு பணிகள் நமக்கு இருந்தாலும் பரவாயில்லை. அதற்கு இடையில் ஒரு நிமிடம் நம்மால் நேரம் ஒதுக்க முடியாதா? தீபம் ஏற்றுவதற்கு முக்கிய காரணம் குடும்பம் அமைதியாக, சுபீட்சமாக இருக்கத் தானே? இன்று பலருக்கும் நிம்மதி இல்லாமல் போனதற்கு காரணம் மன அழுத்தம். தினமும் 2 நிமிடம் காலையும், மாலையும் தீபம் ஏற்றுவதால் மனம் இறுக்கத்திலிருந்து விடுபட்டு தெளிவு பெறும். தொட்டதெல்லாம் துலங்கும். 1 நிமிடம் கண்களை மூடி வேண்டிக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் வேண்டும் வேண்டுதல் அப்படியே பலிக்கும். சகல செல்வங்களும் அமைந்து மோட்சம் கிட்டும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

October 18, 2025
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

October 16, 2025
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்

October 15, 2025
thiruvannamlai
ஆன்மிகம்

அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி 4ம் நாள் விழாவில் பராசக்தி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி.

September 25, 2025
ராசிகளில் தோஷ ராசி என்று உண்டா? தோஷம் என்றால் என்ன?
ராசிபலன்

ராசிகளில் தோஷ ராசி என்று உண்டா? தோஷம் என்றால் என்ன?

September 11, 2025
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தகால் நடும்விழா.
ஆன்மிகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தகால் நடும்விழா.

September 23, 2024

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ராமர் கோயில் கட்டுமானம்! அனில் கதையை மேற்கோள் காட்டி உருக்கமான வீடியோ வெளியிட்ட அக்‌ஷய்குமார்!

ராமர் கோயில் கட்டுமானம்! அனில் கதையை மேற்கோள் காட்டி உருக்கமான வீடியோ வெளியிட்ட அக்‌ஷய்குமார்!

January 19, 2021
rasipalan

இந்த 4 ராசிகளுக்கு இன்று அதிஷ்டம் கொட்டபோகுது,இன்றைய பலன்.

February 27, 2024
விவசாயிகளுக்கான 100வது கிசான் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

விவசாயிகளுக்கான 100வது கிசான் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

December 29, 2020
காவல் துணை ஆணையரை மிரட்டிய திமுக அமைச்சர் சேகர் பாபுவின் உதவியாளர்!  வைரலான ஆடியோ..!!

காவல் துணை ஆணையரை மிரட்டிய திமுக அமைச்சர் சேகர் பாபுவின் உதவியாளர்! வைரலான ஆடியோ..!!

August 5, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x