கிருஷ்ணரிடம் தோற்ற மிஷினரி மதபோதகர்!

வெளிநாட்டில் ஒரு மத போதகர் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கூட்டம் சுமாராகத்தான் இருந்தது. இருந்தாலும் அவர்களிடம் ‘நீங்கள் பாவிகள் இயேசுவிடம் சரண் அடைந்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்.

‘தலவிதியே’ என்று மக்களும் அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

எத்தனை காலம்தான் அதர்மம், மக்களை ஆட்சி செய்வதை பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணர் பார்த்துக் கொண்டிருப்பார்?
தனது லீலையை காட்டத் தொடங்கினார்…

ஒருபுறம் மதபோதகர் மக்களிடம் வலுக்கட்டாயமாக மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்க, தெருவின் மற்றொருமுனையில் இருந்து ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று ஒரே சத்தம்…!

என்னடா இது? என மக்கள் திரும்பிப் பார்த்தபோது அங்கே இஸ்கான் என்று அழைக்கப்படும் கிருஷ்ண பக்தி இயக்கத்தை சேர்ந்தவர்கள் பஜனை செய்தபடி வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததுமே மக்கள் படுஉற்சாகமாகி கைவிட்டனர்.

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று சத்தமிட்டபடி கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விட்டனர்.

பாவம் நமது மத போதகர். அரை மணி நேரம் செலவு செய்து கூடிய கூட்டத்தை ஒரே நிமிடத்தில் கிருஷ்ணர் எடுத்துக்கொண்டாரே என்று அப்செட் ஆகிவிட்டார்.

அது மட்டுமல்ல! ‘மக்களே அங்கு செல்லாதீர்கள்…நீங்கள் பாவிகள். இயேசுவிடம் சரணடையுங்கள்.அப்போது தான் சொர்க்கம் கிடைக்கும்’ என்று மீண்டும் மீண்டும் கரடியாக கத்திப் பார்த்தார்.

அதுவரை பொறுமையாக இருந்த மக்கள் பொங்கி எழுந்துவிட்டனர். மதபோதகர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இல்லாமல், ‘இந்தப்பா அப்படி ஓரமா போய் உட்காரு’ என்று அடக்கி விட்டனர்.

பிறகு மொத்த மக்களும் கிருஷ்ணரின் நாமத்தை திரும்ப திரும்ப சொல்லி பரவசம் அடைந்தார்கள்.

உண்மைதான்!!! பகவானின் நாமத்தை சொல்வதே இன்பம் தானே?

என்னதான் உலகம் முழுக்க பொய் பரப்பி மதப் பிரச்சாரம் செய்தாலும், உண்மையை வெல்ல முடியாது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம்

காளிஇயக்கம்

Truth always prevails!
A Christian pastor was trying to preach in public. At the same time ISCKON people were crossing the road singing bajans of lord Krishna.
Immediately people who were listening to Christian pastor left him and joined with hare Krishna group

Thanks to missionkaali.

Exit mobile version