Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் பாஜாகவுடன் கை கோர்க்கிறார் ராஜ்தாக்கரே.

Oredesam by Oredesam
September 1, 2021
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் பாஜாகவுடன் கை கோர்க்கிறார் ராஜ்தாக்கரே.
FacebookTwitterWhatsappTelegram

பாஜாகவுடன் கை கோர்க்கிறார் ராஜ்தாக்கரே மகாராஷ்டிரா அரசியலில் ராஜ் தாக்கரேயின் மகாராஸ்டிரா நவ நிர்மாண் சேனா பிஜேபியுடன் இணைந்து கை கோர்க்க இருக்கிறது.

இதற்கு பிள்ளையார்சுழியை கிருஷ்ண ஜெயந்தி விழா போட்டு இருக்கிறது.கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மிக முக்கியமான கலாச்சார திருவிழாவான தகி அண்டியை மகாராஷ்டிரா அரசு தடை செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபியும் ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியும் இணைந்து உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள்.

READ ALSO

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது நம்முடைய ஊர்களில் கொண்டாட்படும் உறியடி விழா மாதிரி தான் வட இந்தியாவில் தகி அண்டி திருவிழாவாகும் கிருஷ்ணர் குழந்தை பருவத்தில் வெண்ணெய் பானைகளை உடைத்து வெண்ணெய் எடுத்த நிகழ்வுகளை நினைவு படுத்தும் வண்ணம் மிக உயரமான இடத்தில்வெண்ணெய் பானையை கட்டி வைத்து இருப்பார்கள்.

அதனை பல இளைஞர்கள் பிரமிடு வடிவில் இணைந்து ஒருவர் தோளில் ஒருவர் ஏறிச்சென்று உயரத்தில் உள்ள பானையை உடைக்க வேண்டும். இப்படி பானையை உடைக்கும் பொழுது அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பாரகள் இதையும் மீறி மேலே சென்று ஒரு இளைஞன் பானையை உடைத்து வெண்ணையை எடுத்து மக்களை ஆர்ப்பரிக்க வைப்பார்.

இந்த விழாவிற்கு பல லட்சங்களைபரிசாக பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.கடந்த வருடம் கூட தகி அண்டி திருவிழா நடைபெற்றது. இந்த வருடம் தகி அண்டிகிடையாது என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்து இருக்கிறது. வழக்கமாக இதுமாதிரி கலாச்சார நிகழ்வுகள் பாதிக்கப்பட்டால் களம் இறங்கி மகாராஷ்டிராவை கலங்க வைக்கும் சிவசேனாவே இப்பொழுது தகி அண்டியை தடை செய்து இருக்கிறது.

இதனால் பிஜேபி களத்தில் இறங்கி இருக்கிறது. சிவசேனாவுக்கு போட்டியாக ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சியை வளர்த்துவிட்டு கலாசார காவலர்களான சிவசேனாவின் தொண்டர்களை ராஜ்தாக்கரே பக்கமாக கொண்டு செல்ல பிஜேபி நினைக்கிறது.பால்தாக்கரேயின் தங்கை மகனான ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருக்கும் வரை உத்தவ் தாக்கரேவை சிவசேனா தொண்டர்கள் ஏறெடுத்து பார்க்க மாட்டார்கள் அந்த அளவிற்கு ராஜ்தாக்கரேயின் பிடியில் இருந்தது சிவசேனா.

சொந்த மகனான உத்தவ் தாக்கரேவை சிவசேனா தலைவர்களும் கட்சித் தொண்டர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது பால்தாக்கரேக்கு மிகப்பெரிய பிரச்சனையாக குடும்பத்தினரால் உருவாக்கப்பட ராஜ் தாக்கரே வெளியேற்றப்பட்டார்.

ராஜ் தாக்கரே சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்ததும் பிஜேபி ஆதரவை எதிர்பார்த்தார்.ஆனால் பால்தாக்கரே மீது இருந்த பற்று காரணமாக பிஜேபி சிவசேனாவை கட்டி தழுவி ராஜ்தாக்கரேவை கண்டு கொள்ளவில்லை.ஒரு வேளை பிஜேபி ராஜ்தாக்கரேயுடன் இணைந்து இருந்தால் இன்று சிவசேனாகட்சியே இருந்து இருக்காது. இந்தியாவில் மோடி அலை ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தினால் மகாராஷ்டிராவிலும் மிகப்பெரிய அளவில் அரசியல் மாற்றம் அதுவரை மேலே இருந்த சிவசேனாவை கீழே தள்ளி பிஜேபியை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

மகாராஷ்டிராவில் இருபது வருடங்களு க்கு முன் சிவசேனாவுக்குகீழே இருந்த பிஜேபி இன்று சிவசேனாவை காட்டிலும்பல மடங்கு செல்வாக்குடன் வளர்ந்துவிட்டது. இதை ஜீரணிக்க முடியாத இந்தவ் தாக்கரே பிஜேபி கூட்டணியில் இருந்துவெற்றி பெற்றாலும் பிஜேபியின் எதிரிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துமுதல்வராகி விட்டார்.

இந்த முதல்வர் பதவியை தக்க வைக்கஇது வரை சிவசேனாவுக்கு இருந்த கலா ச்சார காவலன் என்கிற பெயரை உடைத்து மதசார்பின்மை அடையாளத்தை திணித்து வருகிறார். இதுவும் நல்லதற்க்கேஇதனால் சிவசேனாவிடம் இருந்து தேசியம் சார்ந்த இந்துத்வா வாக்குகள் பிஜேபி பக்கமாக வந்துவிட்டது.

இருந்தாலும் மகாராஷ்டிரா மண்ணின்அடையாளமான மராட்டியர்களின் அதரவும் வேண்டும் அல்லவா.. அதற்கு தான் ராஜ்தாக்கரேவை துணைக்கு அழைத்து இருக்கிறது பிஜேபி.இனி பல வருடங்களுக்கு பிஜேபி சிவசேனா இடையே கூட்டணிக்கு வாய்ப்புகள் இல்லை என்பதால் பிஜேபி ராஜ்தாக்கரே கூட்டணி மகராஸ்டிரா அரசியலில் நிச்சயமாக புதிய பரிணாமத்தை அடையம்.

ஏற்கனவே கடந்த மாதம் ராஜ்தாக்கரேவை மகராஸ்டிரா மாநில பிஜேபி தலைவர் சந்திரகாந்த் பட்டீல் சந்தித்து பேசிஇருந்தார்.அப்பொழுதே பிஜேபி எம்என்எஸ் இடையே கூட்டணி என்று மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு உண்டானது இந்த நிலையில் இப்பொழுது பகிங்கரமாக உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக தகி அண்டி விழா தடைசெய்யப்பட்டதற்கு எதிராக ராஜ்தாக்கரே பிஜேபி உடன் இணைந்து போராட இருக்கிறார்.

இப்போதைக்கு எம்என்எஸ் பெரிய அரசியல் சக்தியாக இல்லை என்றாலும் எதிர்காலத்தில் சிவசேனா ஆட்சியில் இருந்து இறங்கிய பிறகு ராஜ்தாக்கரே மறுபடியும் சிவசேனா தொண்டர்களிடையே ஆதரவுபெற்று சிவசேனா என்கிற பானையை உடைத்து அதில் இருந்து கலாசார காவலன் என்கிற வெண்ணெயை எடுத்து வெற்றி வீரரனாக வலம் வருவார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே 13ம் தேதி பிரச்சனைகளுக்கு தீர்வு ! பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே 13ம் தேதி பிரச்சனைகளுக்கு தீர்வு ! பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

September 11, 2025
ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

May 14, 2020
டிஜிட்டல் இந்தியாவின் மற்றுமொரு சாதனை! நாடு முழுவதும் 6045 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி!

டிஜிட்டல் இந்தியாவின் மற்றுமொரு சாதனை! நாடு முழுவதும் 6045 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி!

July 28, 2021
இலவச சைக்கிள் வழங்கும் விழா! வெயிலில் காத்திருந்த மாணவி பலி…. சோகத்தில் மூழ்கிய மாணவிகள்..

இலவச சைக்கிள் வழங்கும் விழா! வெயிலில் காத்திருந்த மாணவி பலி…. சோகத்தில் மூழ்கிய மாணவிகள்..

September 6, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x