எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா.. ஸ்டாலின்

அன்பழகன் யாரு..??
நாவலர் நெடுஞ்செழியன் யாரு..??
சத்தியவாணி முத்து யாரு..??
EVKS சம்பத்..??
சாதிக்பாட்சா யாரு..??
மதியழகன் யாரு..??

இவங்க எல்லோருமே உன் அப்பா கூட இருந்தவங்க தானே.. இவங்களை எல்லாம் உறவுமுறை வச்சி இப்போ பேச வேண்டியது தானே..

அது என்ன எம்ஜிஆர் மட்டும் இப்போ பெரியப்பா வா தெரியறாரு..

உன் அப்பா கட்சியை விட்டு நீக்கனப்போ தெரியலே.. அவர் படங்களை ஓடவிடாம தடுத்த போது தெரியலே..

அவரை மலையாளத்தான், அட்டைகத்தி வீரன்.. இன்னும் சொல்ல கூடாத வார்த்தைகளில் அசிங்கமா ,கேவலமா முரசொலியில் எழுதிய போதும் அவர் பெரியப்பா ன்னு தெரியலே..

இன்னும் மூணு மாசத்துல தேர்தல் வரப்போகுது இப்போ அவர் பெரியப்பா ன்னு ஞாபகம் வந்திடுச்சி.. நீ பேசற பேச்சை எல்லாம் பத்து வயசு பையன் கேட்டா கூட அட சே.. நீ எல்லாம் ஒரு ஆளுய்யா.. கேவலம் பதவிக்காக கண்டபடி பேசி திரியறே.. இந்துக்களுக்கு நாங்க எதிரானவனங்க இல்லை ன்னு சொல்றே.. வேல் கையிலே பிடிச்சிட்டு விபூதியை வாயிலே போட்டுக்கறே.. பதவி மோகம் உன்னை எப்படி எல்லாம் ஆட்டி வைக்குது பார்த்தாயா..?? ன்னு காறி துப்புவான்..

அதுசரி.. அப்பாவுக்கு பிறகு தானே பெரியப்பா.. உன் அப்பவே அரசியலில் ஜகஜாலக்கில்லாடி ஆச்சே.. 6 தடவை முதல்வராக வேற இருந்து இருக்காரு.. அவர் போட்டோ காண்பித்து இவர் என் அப்பா நான் அவர் பிள்ளை , என் அப்பா கருணாநிதி, வல்லவரு, நல்லவரு.. அவரை மாதிரியே நானும் ஆட்சி செய்வேன் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க ன்னு கேட்க வேண்டியதுதானே..

அதை விட்டு விட்டு.. இன்னொரு கட்சியோட நிறுவனர்.. அதுமட்டுமல்லாம திமுக அழிக்கவும், ஒழிக்கவுமே அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை உருவாக்கியவர்.. அவர் போட்டோ காண்பித்து கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம.. எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது.. தலைவரே உங்களாலே ன்னு நான் கேட்கலே உங்க ஊபிஸ் கேட்பாங்க…

Exit mobile version