திமுக தலைவர் ஸ்டாலின் கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது. அவரது கனவு, கனவாக தான் இருக்கும். நனவாகாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், மின்வெட்டு வரும், ரவுடியிசம் தலைதூக்கும் என்பது மக்களுக்கு தெரியும். இதனால், திமுக வெற்றி பெறாது.
சட்டசபை தேர்தல் பணிகள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.
இதுபோல் வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜ., இளைஞர் அணி தாமரை இளைஞர்கள் சங்கமம் மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசுகிறார்.
வரும் 25 அன்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோவை வரும் பிரதமர் மோடி, பா.ஜ., சார்பில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
அதிமுகவுடனான பா.ஜ., கூட்டணி தொடரும். வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிடும், இம்முறை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு செல்வார்கள்
. ராகுல், செல்லும் மாநிலங்களில் எல்லாம் தோல்வி தான் கிடைத்து வருகிறது. இவ்வாறு முருகன் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















