Sunday, December 7, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

மோடியின் அஸ்திரம் ! அமைதி வழியில் போருக்கு முடிவு ! ரஷ்யா அதிபர் புடின் விருப்பம் !

Oredesam by Oredesam
October 19, 2024
in உலகம்
0
பிரதமர் மோடியின் பேச்சால் போரைநிறுத்த உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்.
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு முடிவு செய்தது. ரஷ்யா, உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய தயாரானது தான்.

உக்ரைன் தலைநகர் கீவை மற்றும் கார்கீவ் நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் எதிர் தாக்குதல் நடத்தப்படுகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டனா்.

READ ALSO

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

இதனால் உலக நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகாித்து வருகிறது. ஏவுகணை, பீரங்கி போன்ற ஆயுதங்களின் சத்தம் இருநாட்டு நகரங்களிலும் எதிரொலிக்கின்றன.அதே சமயம் ரஷ்யா மீது ஆழமான தாக்குதலை நடத்துவதற்கு ஜெலன்ஸ்கி, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அனுமதி கேட்டார். ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. அதாவது அனுமதி கொடுக்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும். முன்னதாக ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல் திட்டமிடும் நாடுகள் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சாித்து இருந்தார். இதனால் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பேரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்கின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. பிரதமர் மோடி, கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவுக்கும்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். போர் விஷயத்தில் இரு நாடுகளும் இறங்கி வந்தால் நன்றாக இருக்கும். ரஷ்யா – உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக செயல்பட இந்தியா தயாராக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதின், இந்தியா தான் மத்தியில் இருந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி இருந்தார். இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், போரை நிறுத்த இந்தியா போன்ற அமைதியை விரும்பும் நாடுகளால் தான் முடியும் என கூறி இருந்தார்.இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சந்தித்தார்.

இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டவர்கள் ஒப்பந்த முறையில் கைமாற்றி கொள்ளப்பட்டனா். ரஷ்யா வீரர்கள் 203 பேரை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்து வைத்து இருந்தது. இதேபோல் உக்ரைன் வீரர்களையும் ரஷ்யா சிறைப்பிடித்து இருந்தது. இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே தற்போது ரஷ்யா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 103 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா். இதேபோல் ரஷ்ய வீரர்கள் 203 பேரையும் உக்ரைன் விடுவித்து உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபரை சந்தித்து சில நாட்களில் நடந்தது என்பதால் உலக நாடுகள் இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில்,புடின் அழைப்பின் பேரில் , பிரதமர் மோடி அக்டோபர் 23ம் தேதி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்கிறார். இது குறித்து மாஸ்கோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் புடின் கூறியதாவது: மோதலை தீர்ப்பதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளது. உக்ரைன் உடனான போர் குறித்து தொடர்ந்து கவலைகள் தெரிவித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றி.

பிரதமர் மோடியுடன் பேசும் போது, ஒவ்வொரு முறையும் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். உக்ரைன் உடனான போரை அமைதியான வழிகளில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

நாங்கள் அல்ல, ஆனால் உக்ரைன் தரப்புதான் அதை செய்ய வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. ரஷ்யா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா தான். இவ்வாறு புடின் கூறினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
உலகம்

மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

June 13, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

லவ் ஜிஹாத் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பல்பு வாங்கும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்கள்…

January 7, 2021
சம்பவம் செய்த எல்.முருகன், வானதி சீனிவாசன்..! காவித் திருவள்ளுவருடன் வாழ்த்து..!காணாமல் போன திராவிடக் கும்பல்கள்..!

சம்பவம் செய்த எல்.முருகன், வானதி சீனிவாசன்..! காவித் திருவள்ளுவருடன் வாழ்த்து..!காணாமல் போன திராவிடக் கும்பல்கள்..!

January 15, 2022
சென்னையில் மாணவியை வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !

சென்னையில் மாணவியை வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !

December 25, 2024
எனக்கு மிரட்டல் மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும்: மதுரை ஆதீனம் நம்பிக்கை…

எனக்கு மிரட்டல் மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும்: மதுரை ஆதீனம் நம்பிக்கை…

May 10, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x