பக்கத்துவீட்டு குளியலறையில் பவர் பேங்குடன் வெப் கேமரா! காம கொடூரன் முகம்மது நசீர்! அதிர்ச்சியில் பெண்கள் !

தஞ்சாவூரில் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி மற்றும் அவரின் மகளை குளிப்பதை பார்ப்பதற்காக அவர்களின் குளியலறையில் வெப் கேமரா பொறுத்தி குளிப்பதை படம் பிடித்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரின் மகன் முகம்மது நசீரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். பக்கத்துக்கு வீட்டுக்காரர் முன்னாள் காவல் ஆய்வாளர் இக்பால் இவரின் மகன் முகமது நாசீர்.

சில வருடங்களுக்கு முன் வெங்கடேசனின் மனைவி மற்றும் மகள் குளிப்பதை மாடியில் இருந்து பார்த்து ரசித்துள்ளான் காமக்கொடூரன் முகமது நசீர்.இதனால் வெங்கடேசனுக்கும் இஃபாலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெங்கடேசனை பழி வாங்குவதற்காக இக்பாலின் மகன் முகமது நாசீர் வீட்டின் வெங்கடேசன் வீட்டின் குளியலறையில் சிறிய துளை போட்டு வெப் கேமராவை வைத்துள்ளான். பவர் குறையாமல் இருக்க பல்வேறு பவர் பேங்க் பொறுத்தியுள்ளார்.

குளியலறையில் குளியலறையில் ஏதோ மின்னுவது போல் உள்ளதாக வெங்கடேசனின் மனைவி அவரிடம் தெரிவித்துள்ளார்.

அங்கு சென்று பார்த்த போது வெப்கேமிரா இருந்துள்ளது. சார்ஜ் இறங்காமல் இருக்க அந்த வெப் கேமராவுடன் பவர் பேங்கும் இணைக்கப்பட்டு இருந்துள்ளது. இவரது வீட்டின் குளியலறையின் மேல் பகுதியில் ஏதோ சின்னஞ்சிறிய லைட் மின்னுவது போல் இருப்பதை பார்த்த வெங்கடேசன் மனைவி, தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.குளியலறையில் கேமராவை கண்ட வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்து போலீஸ் உதவியை நாடினார்.

வழக்குபதிவு செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் வெங்கடேசனின் அண்டை வீட்டில் வசிக்கும் முகம்மது நசீர் என்பவர் வெங்கடேசனின் வீட்டு குளியல் அறையில் கேமராவை பொருத்தி அவர்கள் குளிப்பதை பார்த்து ரசித்தது அம்பலமாகியது

இதனை தட்டிக்கேட்ட போது முன்னாள் காவல் ஆய்வாளரான முகமது நசீரின் தந்தை, தனது அதிகார தொடர்புகளை பயன்படுத்தி வெங்கடேசனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்னைக்கு மாற்று வழி யோசித்த முகம்மது நசீர், வெங்கடேசனின் வீட்டு குளியல் அறையில் கேமரா பொருத்தி அவர் மனைவி மற்றும் மகள் குளிப்பதை பார்த்து தன் இச்சையை தீர்த்து கொள்ள தொடங்கியுள்ளார்.

வெங்கடேசனின் குளியல் அறையை ஒட்டி ஒரு வீடு காலியாக உள்ளது. அதனை வாடகைக்கு கேட்டு வருபவர்களிடம் வீட்டை திறந்து காட்ட அந்த சாவியை முகமது நசீரிடம் கொடுத்து வைத்துள்ளார் அந்த வீட்டின் உரிமையாளர்.

இதனை பயன்படுத்தி காலியாக உள்ள வீட்டின் குளியலறை கண்ணாடியை கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள வெங்கடேசனின் குளியலறையின் மேல வெப்கேமராவை பொருத்தி பெண்கள் குளிப்பதை ரசித்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணையில் முகமது நசீர் உண்மைகளை ஒப்புக் கொண்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

முகமது நசீர் வீட்டு குளியல் அறை வரை கேமரா வைத்து வேவு பார்த்த விஷயம் வெளியே வந்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் அப்பகுதி வாசிகள்.

Exit mobile version