பதவி ஆசைக்காக 45 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் தேசம் சிறைச்சாலையாக மாறிய தினம் இன்று ! அமித் ஷா

நாடளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தியால் தோற்கடிக்கப்பட்ட ராஜ் நரேன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்திராகாந்திமீது தேர்தல் வெற்றிக்காக மாநிலஅரசுகளை பயன்படுத்தியதாக தேர்தல் மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.12 ஜூன் 1975, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா இந்த வழக்கில் இந்திராகாந்தியை குற்றவாளியாக அறிவித்தார்.மேலும் நீதிமன்றம் அத்தொகுதியில் அவரது வெற்றி செல்லாது எனவும் அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீ்க்கப்படவேண்டும் என அறிவித்தது. ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாதெனத் தடை விதித்தார்.லஞ்சம், அரசு அதிகாரிகளை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது, மற்றும் அரசின் மின்சாரத்தை பயன்படுத்தியது போன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் அரசாங்க தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடத்தினர். ஜே. பி. நாராயண், ராஜ் நரேன், சத்யேந்திர நாராயண் சின்ஹா மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மக்கள் தில்லி தெருக்களில் வெள்ளமாகத் திரண்டு போராடினர்.

இதனை அடுத்து பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு போன்றவை மூடப்பட்டன. இதுவே பின்னர் இந்திராகாந்தி அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தினார்.

1975 -ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் 45 வது ஆண்டையொட்டி மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவர்களால் முக்கிய தலைவருமான அமித்ஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்நாளில், 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தின் அதிகார பதவி ஆசைக்காக அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே இரவில் தேசம் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. பத்திரிகைகள், நீதிமன்றங்கள், சுதந்திரமான பேச்சு அனைத்தும் மிதிக்கப்பட்டன. ஏழைகள் மற்றும் நலிந்தவர்கள் மீது அட்டூழியங்கள் அரங்கேறியது என்று அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

Exit mobile version