Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து திரளுது தமிழகம்!

Oredesam by Oredesam
September 6, 2020
in செய்திகள், தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

புதிய கல்வி கொள்கை – மும்மொழி திட்டத்தை ஆதரித்து தமிழ் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

35 வருடங்களுக்கு மேலாக மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த தேசியக் கல்விக் கொள்கையில் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான குழு மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இப்புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுவிட்டது. பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகி வருகின்றன. சில மாநிலங்கள் அதன் சாதக, பாதக அம்சங்களை ஆராய கமிட்டி அமைத்துள்ளன. தமிழ்நாடு மட்டும், இப்புதிய தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்றும், புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள பிற அம்சங்களை ஆராய கமிட்டி அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்தியா முழுவதும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட போதும், தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுத்தன. தமிழகத்தை பொருத்தமட்டில் மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பது ஒன்றே குறிக்கோளாக வைத்து பல அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கல்வியை அரசியல் களமாக்கியதில்லை.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே மொழியும், கல்வியும் தான் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு பிரதான ஆடுகளம் ஆகும். 1932-ல் இந்தி எதிர்ப்பு போராட்டம்; 1952-ல் இந்தி எதிர்ப்பு, குலக்கல்வி எதிர்ப்பு போராட்டம்; மீண்டும் 1965-1966-ல் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம் என மொழியும், கல்வியுமே பிரதான அரசியல் களங்களாக இருந்திருக்கின்றன. மொழி, கல்வியை பயன்படுத்தி தமிழகத்தில் ஒரு மாநில கட்சி தேசிய கட்சியை வீழ்த்தி 1967-ல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது.

எந்த ஒரு தேசமும் வலுவான கல்வி கட்டமைப்பு இல்லாமல் முன்னேற முடியாது. எவ்வளவு கீழாக ஒரு சமுதாயம் வீழ்ந்து கிடந்தாலும், அந்த சமுதாயத்தை தூக்கி நிலைநிறுத்துவதற்கு முதல்நிலைப் படியாக அமைவது கல்வி, நல்ல கல்வி, மிகமிக நல்ல கல்வி மட்டுமே. புத்தர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் உலகப் பிரசித்தி பெற்றதாக இருந்திருக்கிறது. அதன்பின், ஆங்கிலேயர்கள் பரவலாக ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை கல்விக் கூடங்களை உருவாக்கினார்கள். இந்திய நாட்டு விடுதலைக்கு பிறகு, அனைவருக்கும் கல்வி கற்றுக் கொடுப்பது என்பதை குறிக்கோளாகக் கொண்டு நாடெங்கும் பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மாநில அளவில் ஒரு பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்து, அதை ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் மனனம் செய்து, ஒப்புவிக்க வேண்டும் என இருந்ததே தவிர, மாணவர்களுடைய கேள்வி ஞானத்தை வளர்ப்பதாகவோ, சிந்தனையைத் தூண்டுவதாகவோ, வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதாகவோ, பிற கலை அறிவுகளை வளர்ப்பதாகவோ இருந்ததில்லை. நாம் சுதந்திரம் பெற்று 74-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம். நமக்குப் பின்பு விடுதலை பெற்ற நாடுகள் ஒரு சிலவற்றை தவிர, பல நாடுகள் கல்வியிலும், தொழில் நுட்பத்திலும், மருத்துவத்திலும் எவ்வளவோ முன்னேறிச் சென்றுவிட்டன. அதற்குக் காரணம் அந்நாடுகளெல்லாம், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை முன்னெடுத்துச் செல்கிறார்கள். 21-ம் நூற்றாண்டுக்கு தேவையான LIFE SKILL எனும் வாழ்க்கை திறன் சார்ந்த கல்விமுறையை செயல்படுத்துகிறார்கள். ஆனால், நாமோ கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் அரை நூற்றாண்டு காலம் பின்தங்கி இருக்கிறோம். மருத்துவம், வேளாண்மை, சட்டம் மற்றும் பொறியியல் போன்ற தொழில் சார்ந்த கல்வி படித்த விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர, இலட்சோபலட்சம் படித்த இளைஞர்களால் எந்தவிதமான அதிகாரத்தையும் பெற முடியவில்லை.

பிற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிடுகையில் உயர்கல்வி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்தான். ஆனால், அந்த உயர்கல்வி படித்தவர்கள் கூட வேலைவாய்ப்பைத் தேடி அலையக் கூடியவர்களாக இருக்கிறார்களே தவிர, தங்களை சுயமாக நிலைநிறுத்திக் கொள்ளத் தகுதி படைத்தவர்களாக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணமே நமது பாடத்திட்டத்தில் உள்ள கற்றல்-கற்பித்தல் முறையில் உள்ள அடிப்படைப் பிழையாகும். எனவே, இந்தப் பிழையை சரி செய்வதற்குண்டான வழியாகவே இப்பொழுது மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ள புதிய கல்விக் கொள்கையை ஆராய வேண்டும். இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்திலிருந்து இரண்டு முனைகளில் எதிர்ப்பு கொடுக்கிறார்கள். ஒன்று மொழி, இரண்டாவது பாடத்திட்டம். அவர்கள் அதை இந்தி திணிப்பென்றும், சனாதான கல்வி என்றும் எளிதாக முத்திரை குத்தி விடுகிறார்கள். 10-ஆம் வகுப்பு மட்டுமே தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களுக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகளும் போட்டியிட வேண்டும் என தகுதியற்ற கல்வியை கொடுத்தது குற்றம் இல்லையா? இதை இப்பொழுதாவது திருத்த வேண்டிய அவசியம் உண்டா? இல்லையா?

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 50,000 ஆகும். இதில் சர்வதேச பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 25,000-க்கும் குறைவில்லாமல் இருக்கும். சர்வதேச பாடத்திட்டத்தையும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் கடைபிடிக்கும் பள்ளிகளிலும், கேந்திர வித்யாலயா பள்ளிகளிலும் ஏற்கனவே மும்மொழி உண்டு. மும்மொழியே வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு முடிவெடுக்குமேயானால் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி ஏழை, எளிய, நடுத்தர, பின்தங்கிய வர்க்கத்தினரின் குழந்தைகள் மட்டும் இன்னொரு மொழியைக் கூடுதலாக கற்றுக்கொள்ளக் கூடாது என்பது ஓர வஞ்சனையாகாதா? அதுமட்டுமல்ல, இப்பொழுது வெளிநாட்டு பல்கலைக் கழகங்களும் தங்களது கிளைகளை இந்தியாவில் துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த பல்கலைக்கழகங்களில் தரத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வி அமையவில்லை என்று சொன்னால், அந்த பல்கலைக்கழகங்களில் பயில இந்தியக் கல்வி அமையவில்லை என்று சொன்னால் உலகத்தரம் வாய்ந்த கல்வியை நமது பிள்ளைகள் பெறுவதற்குண்டான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் அல்லவா?

இந்திய நாடு பின்தங்கிய நாடு அல்லது வளரும் நாடு என்ற அடையாளத்தைத் துறந்து, வளர்ந்த நாடு என்ற பெயருடன் உலக அரங்கில் திகழ வேண்டுமாயின் மழலைக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரையிலும் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தே தீர வேண்டும். வரும் காலங்களில் வெறும் காகிதப் பட்டங்களை கையில் வைத்திருக்கக் கூடியவர்களுக்கு அல்ல, மாறாக ஒரு துறையிலோ, இரண்டு துறையிலோ திறனை வளர்த்திருக்கக் கூடியவர்களுக்கே எதிர்காலம் வசமாகும். ஒருவர் தன்னுடைய ஊரைக் கடந்து, வேறு இடங்களுக்கு பணிக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகலாம் அல்லது இருந்த இடத்தில் இருந்து கொண்டு வேற்று மொழியைக் கொண்ட மாநிலத்தவருக்கோ, வேற்று நாட்டவருக்கோ கூட பணி செய்து கொடுக்கவேண்டிய சூழல் உருவாகலாம். எனவே ஒரு மொழியல்ல, இரு மொழியல்ல, பலமொழியும் கற்க வேண்டிய சூழல் உருவாகலாம். ”தாய்மொழி இல்லாமல் ஒன்றும் இல்லை; தாய்மொழி மட்டுமே எல்லாமும் அல்ல”. எனவே, தமிழக மாணவர்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆளுமை செலுத்த வேண்டும் என்றால் பல மொழிகளை கண்டிப்பாக கற்க வேண்டும். மும்மொழி என்று சொன்ன உடனேயே திராவிட மனுவாதிகள் வலிந்து இந்தி அல்லது சமஸ்கிருதம் என்று திட்டமிட்டு தமிழகத்தில் பரப்புரை செய்கிறார்கள். இப்போதும் கூட மத்தியக் கல்வித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்திலுமே மூன்றாவது மொழியாக இந்தி மட்டுமே கற்றுக் கொடுப்பதில்லை; ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட அயல்நாட்டு மொழிகளும் கற்று கொடுக்கப்படுகின்றன.

இந்தி வேண்டாம் என நூறாண்டு காலம் கூப்பாடு போட்டு தமிழகத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி விட்டார்கள். இப்பொழுது புதிய கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள மும்மொழிக்கு எதிராக கொடி பிடிப்பது தமிழகத்தை உலக வரைபடத்திலிருந்து துண்டாடுவதற்கு சமமானதாகும். தமிழக அரசியல் கட்சிகள் தங்களுடைய இலாப நட்டக் கணக்குகளை மனதிலே கொண்டும், அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், மும்மொழி எதிர்ப்பு மற்றும் புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு என்பது ஏதுமறியாத வருங்கால தலைமுறைகளுக்கான வாய்ப்புகளை மறுப்பதற்குச் சமமாகும். புதிய கல்விக் கொள்கை ஒரு நன்கு கற்றறிந்த அறிவுஜீவி, அதுவும் இந்திய விண்வெளிக் கழகத்தில் தலைவராகவும் செயல்பட்ட ஒரு பெருந்தகையால் இந்தியாவில் இப்பொழுது நிலவக்கூடிய கல்வி முறையை, உலகில் பல்வேறு நாடுகளின் கல்விமுறையுடன் ஒப்பிட்டு அதன் சாராம்சத்தை அவர் வடித்துத் தந்துள்ளார். இது புத்தகப் புழுக்கள் ஆக்குவதற்காக அல்ல, வித்தகர்கள் ஆக்கிடும் திட்டம். அதில் பள்ளிக்கல்விக்கு மட்டும்தான் மாற்றத்தை கொடுத்திருக்கிறார்களா? அப்படி இல்லையே, மழலைக் கல்வி, ஆரம்பக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, கல்லூரி, பல்கலைக்கழக முறையிலும் மாற்றத்தை அறிவித்திருக்கிறார்கள் அல்லவா?
”வேப்பமர உச்சியில் நின்று பேயொன்னு ஆடுதுன்னு,
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க,
உன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க”

  • என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலுக்கிணங்க இந்தி திணிப்பு, வர்ணாசிரம கொள்கை என்று புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பூச்சாண்டிக் கதைகளை விளையாட்டாக அல்ல, வினையமாக சொல்லி வைப்பார்கள். திராவிட மனுவாதிகள் நமது பிள்ளைகளின் திறமைகளை இளமையிலேயே கிள்ளி எறிய எத்தனிப்பார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம்.

எமது தமிழக மக்களும், மாணவர்களும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் பக்கமே..!

Dr.கிருஷ்ணசாமி,தலைவர் புதிய தமிழகம் கட்சி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

செங்கல்பட்டுக்கு ஜாக்பாட்: ரூ.310 கோடியில் 11 ஆயிரம் வீடுகள்; பிரதமர் வீடு திட்டத்தில் கட்டுமானம் துவக்கம்!..

செங்கல்பட்டுக்கு ஜாக்பாட்: ரூ.310 கோடியில் 11 ஆயிரம் வீடுகள்; பிரதமர் வீடு திட்டத்தில் கட்டுமானம் துவக்கம்!..

June 3, 2022
OREDESAM

ஹிந்தி மொழியின் உப மொழியான மராத்தியில் கடை திறக்கிறது சன் டிவி.! காசு காரிய‌த்தில் கண் வைய‌டா தாண்ட‌வ‌க்கோணே.

October 18, 2021
ஆரம்பித்து உட்கட்சி மோதல்! பொன்முடியை பகைத்ததால் செஞ்சி மஸ்தான் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு !

ஆரம்பித்து உட்கட்சி மோதல்! பொன்முடியை பகைத்ததால் செஞ்சி மஸ்தான் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு !

June 12, 2024
ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்களில் கொவிட்-19 நிலவரம் குறித்து மத்திய அரசு ஆய்வு.

ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்களில் கொவிட்-19 நிலவரம் குறித்து மத்திய அரசு ஆய்வு.

December 23, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x