அஜித்தோவால் அடுத்த அதிரடி ஆப்ரேசன் !மியான்மர் இந்தியாவின் பக்கம் !

வழக்கமா இந்தியாவுக்கு இம்சை கொடுக்கும் தீவிரவாதிகளை மியான்மர் க்குள் நுழைந்து இந்திய ராணுவம் வேட்டையாடும். ஆனால் வரலாற்றில் முதன்முறை யாக மியான்மர் நாடே தங்களிடம் பிடிபட்ட தீவிரவாதிகளை இந்தியாவின் கைக ளில் ஒப்படைத் து இருக்கிறது

மியான்மர் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ள தீவிரவாதிகள் சாதாரண ஆட்கள் அல்ல. இந்தியாவினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தவர்கள்.அதுவும் சாதா ரண தீவிரவாதிகள் அல்ல. டாப் லீடர்ஸ்

அஸ்ஸாமில் உள்ள போடோ இன மக்களி டம் தீவிரவாதத்தை தூண்டி வரும் என்டி எப்பி சாங்பிஜிட் பிரிவு அதாவது்போடோ லாந்து தேசிய ஜனநாயக முன்னணி மற்றும் கேஎல்ஓ என்கிற காம்டபூர் விடுதலை கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள்

இதில் முக்கியமானவர்கள் அஸ்ஸாமில் தனி நாடு கேட்டு போராடும்போடோ தேசிய ஜனநாயக முன்னணியின் ஹோம் செகரட்டரியாக இருக்கும் ரஞ்சன் தைம ரே அடுத்து மணிப்பூரில் தனி நாடு கேட் டு போராடி வரும் யுனைடட் நேசனல் லிபரேச ன் ப்ரண்ட் அமைப்பின் கேப்டன் சனோடம்பா நிங்கோஜனும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறார்.

இவர்களை விட முக்கியமாக ப்ரீபேக் அதாவது தி பீப்பிள்ஸ் ரெவாலுசனரி பா ர்ட்டி ஆப் கஞ்சிலிபக் என்கிற மணிப்பூர் தீவிரவாத அமைப்பின் தளபதி பாஷு ராம் லாய்ஸ்ராம் இந்தியாவுக்கு கொண் வரப்படுகிறார்.

இவர்களோடு கேஒய்கேஎல் அதாவது கஞ்ச்லிய் யாவோய் கன்னா லுப் என்கிற மணிப்பூர் தீவிரவாத குரூப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அடுத்து பிஎல்ஏ அதாவது பீப்பிள்ஸ் லிபரேசன் ஆர்மி ஆப் மணிப்பூர் என்கிற தீவிரவாத குரூப்பை சேர்ந்த தீவிரவாதிகள்.

இந்த பயங்கரவாத அமைப்புகளை, நம் ராணுவம் வேட்டையாடி வருகிறது. சில மாதங்களுக்கு முன் கூட ஆப்பரேஷன் சன்ரைஸ் என்கிற பெயரில் நம்முடைய ராணுவம் மியான்மர் காடுகளுக்குள் நு ழைந்து இந்த தீவிரவாதிகளை போட்டு தள்ளியது.

இருந்தாலும் சீனா அளிக்கும் பணத்திற்காக புதிதாக தீவிரவாதிகள் உருவாகி கொண்டே இருக்கிறார்கள்.மியான்மர் நாடும் சீனா போடும் பிச்சைக்காக இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.இந்த தீவிரவாதிகளை இந்தியாவில் வன்மு றைகளை உருவாக்கி இந்தியாவை உடைக்க சீனா சோறு போட் டு வளர்த்து வருகிறது.

மோடி அரசின் மிகப்பெரிய சாதனை களில் ஒன்றாக வட கிழக்கு மாநிலங்களில் ஊடுருவி பயங்கரவாத செயல்க ளை செய்து வரும் சீன ஆதரவு தீவிரவாதிகளை வேட்டையாடி வருவதை கூறலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் நிலமெல்லாம் ரத்தம் என்று காங்கிரஸ் ஆட்சிகளில் இருந்ததை வடகிழக்கில் வீசும் வசந்தம் என் று மாற்றியது மோடி அரசு.இதற்கு முக்கி ய காரணம் இந்தியாவின் பாதுகாப்பு ஆ லோசகர் அஜித் தோவல் தான்

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைக ளை ஒடுக்கியதில்அஜித் தோவலின் ப ங்கு அபாரமானது.இன்றைக்கும் இந்திய நீரோட்டத்தில் கலந்து கொள்ளாமல் முரண்டுபிடிக்கும் மாநிலங்கள் வட கிழ க்கு மாநிலங்கள் தான்.

அங்கே உளவுத்துறையில் இருக்கும் பொ ழுது தீவிரவாதகுழுக்களில் தானும் ஒரு தீவிரவாதியாக சேர்ந்து அவர் களுக்குள் சண்டையை உருவாக்கி போராட்டத்தின் திசையையே மாற்றியவர்.

தனி நாடு கேட்டு போராடிய மிசோ தேசி யராணுவம் என்கிற அமைப்பில் நுழை ந்து அதை உடைத்து மிசோ தேசிய முன்னணி என்கிற அமைப்பை உருவா க்கி அவர்களை தேர்தலில் பங்கு பெற வைத்ததும் தோவல்தான்.

தனி நாடு கேட்டு போராடியவர்களை மாநிலத் திற்குள்முடக்கியது எவ்வளவு பெரிய சாதனை.சிக்கிம் நாடு இந்தியா வோடு இணைந்து மாநிலமாக மாறிய தும் இவராலே.மிசோரம் மாநிலமாக மாறியதும் இவரால் தான்.

வங்காளதேசத்தில் இருந்த உல்பா (யு னை டட் லிபரேஷன் பிரண்ட் ஆஃப் அசா ம்)தீவிரவாதக்கூட்டத்தின் பொது செய லாளர் அனுப்சேத்தி யாவை இந்தியா கேட்டும் 20 ஆண்டுகள் இழுத்தடித்த வங்க தேசத்தின் மண்டையில் கொட்டு வைத்து பார்சல்கட்டி இந்தியாவுக்கு தூ க்கி வந்ததில் அஜித்தோவலின் ஆற்றல் தெரியும்

மணிப்பூரில் நம்முடைய ராணுவ வீரர்க ள் 18 பேரை கொன்ற நாகாலாந்து தேசி ய சோஷலிச கவுன்சில் (கப் லாங் பிரிவு) தீவிரவாதிகளை மியான்மர் நாட்டுக்குள் தேடிச்சென்று சுமார் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைசுட்டுக்கொன்ற நமது விமான படைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது அஜித்தோவல்தான்.

அதோடு நாகலாந்து மாநிலத்தில் தனிநா டு கேட்டு போரா டிய இன்னொரு தீவிர வாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்(ஐசக் முய்வா பிரிவு) என்கிறமாவோயிஸ்ட் கூட்டத்தை பிரதமர் மோடி முன்னிலையில் சரணடைய வைத்ததும் அஜித் தோவல் தான்.
.
இப்பொழுது அஸ்ஸாமில் தீவிரவாதத்தை தூண்டி வந்த என்டிஎப்பி எஸ் பிரிவு மற்றும் கேஎல்ஓ தீவிரவாதிகளையும் மணிப்பூரில் வன்முறைகளை தூண்டி விட்டு வந்த யுஎன்எல்எப், ப்ரீபேக்,கேஒய் கேஎல் மற்றும் பிஎல்ஏ என்கிற 4தீவிர வாத குழுக்கள் என்று மொத்தமாக 6 தீ விரவாத குழுக்களின் முக்கிய தலைவர்களை அஜித்தோவல் மூலமாக மியான்மர் அரசு இந்தியாவுக்கு ஒப்படைக்கிறது

இதன் மூலமாக மியான்மர் சீனாவிடம் தங்களுக்கு பயம் இல்லை இந்தியா தா ன் எங்களுக்கு முதன்மை நாடு என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறது.ஏற்கனவே சீனாவின் நட்பு நாடுகள் அனை த்தையும் தன் பக்கம் இழுத்து விட்ட இந்தியா இப்பொழுது மியான்மரையும் இந்தியாவின் கட்டுபாட்டில் கொண்டு வந்து விட்டது என்றே கூறலாம்

வலது சாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி

Exit mobile version