மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் நேற்று, 11வது நாளாக தொடர்ந்தது வருகிறது. காசா மீது இஸ்ரேல் போர் தொடுப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள் உள்ளனர்.
அவர்களில் பலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தனர். அவர்களை அழைத்து வர, ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி இந்தியர்களை மீட்டு கொண்டு வருகிறார்கள்.
2 விமானங்களில் 447 இந்தியர்கள் நாடு திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு சிறப்பு விமானங்கள் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தன. மூன்றாவது விமானத்தில் 197 பேர் நேற்று டெல்லி திரும்பினர். நான்காவது சிறப்பு விமானத்தில் 274 பேர் வந்தனர். நாடு திரும்பிய இந்தியர்கள் ஆபரேஷன் அஜய் திட்டத்தை செயல்படுத்தும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதுவரை ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இது வரை 4 விமானங்களில் 918 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.
5-ம் கட்டமாக நேற்று 286 இந்தியர்கள் 18 நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் டில்லி வந்திறங்கினர். அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















