ஜெய்ஶ்ரீராம் கோஷம் சவால் விட்ட ஓவைசி! ஜெய்ஶ்ரீராம் கோஷத்தை ஆர்ப்பரித்து எழுப்பிய காவிகள்! வைரல் வீடியோ!

ஜெய்ஶ்ரீராம் கோஷம் சவால் விட்ட ஓவைசி! ஜெய்ஶ்ரீராம் கோஷத்தை ஆர்ப்பரித்து எழுப்பிய காவிகள்! வைரல் வீடியோ!

அகில இந்தி மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்பி அசாதுதீன் ஒவைஸி இஸலாமியர்களின் பாதுகாவலராக காட்டி கொள்வதற்கு இந்துக்களை மிரட்டி பேசுவது வழக்கம். இஸ்லாமியர்களிடம் ஹீரோவாக ஓவைஸி காட்டி கொள்வார். பிரிவினை பற்றி பேசி விளம்பரம் தேடிக்கொள்வது இவரின் வழக்கம் ஆகும்.

ஹைதராபாத்தில், நமது முஸ்லீம் மக்கள் தொகை 50% ஐ தாண்டிவிட்டது, இப்போது நாங்கள் பெரும்பான்மையில் இருக்கிறோம். ஆகவே, ராம நவமி, அனுமன் ஜெயந்தி போன்ற இந்து பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஆட்சியாளர்களை நான் கோருகிறேன். சார்மினார் அருகிலுள்ள பாக்ய லட்சுமி கோவிலில் பூஜை மணி கோங்கை ஒலிப்பதை நிறுத்துவதன் மூலம் நாங்கள் ஏற்கனவே எங்கள் பலத்தைக் காட்டியுள்ளோம் என மத மோதலை தூண்டும் விதமாக பேசிவந்தார் ஓவைஸி.

இந்த நிலையில் தான் ஐதராபாத் எம்.பி ஓவைசி ஒருமுறை விடுத்த சவால், “ஹிந்துக்களுக்கு தைரியம் இருந்தால் ஐதரபாத்தில் உள்ள சார்மினாருக்கு முன் ஜெய்ஶ்ரீராம் கோஷத்தை எழுப்பிக் காட்டுங்கள்! என சாவல் விட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஓவைசியின் சவால் இன்று ஏற்கப்பட்டு ஹிந்துக்கள் அங்கு ஜெய்ஶ்ரீராம் கோஷத்தை பலத்த கரகோஷங்களுடன் ஆர்ப்பரித்து எழுப்பினர்.

மேலும் ஒரு காலத்தில் ஓல்டு சிட்டி என்று அழைக்கப்படும் ஹைதரபாத்தின் அடையாளமான சாரமினார் அருகே பி.ஜே.பிக்கொடி தாங்கி யாரும் செல்ல முடியாது ஆனால் இப்பொழுது சார்மினாரை சுற்றி பாஜகவினரின் கொடி தான் பறக்கிறது அங்கே பிரமாண்ட கூட்டமே நடத்தும் அளவிற்கு பாஜக வளர்ந்துள்ளது.

தெலுங்கானா மாநில பிஜேபி தலைவர் பண்டி சஞ்சய் குமாரின் பிரஜா சங்க்ரம யாத்திரையின் ஆரம்பம் சார்மினாரை புரட்டி போடும் அளவுக்கு செம கூட்டம். சார்மினாரின் ஓரத்தில் உள்ள அன்னை பாக்யலஷ்மி கோயிலில் இருந்து பண்டி யாத்திரையைதுவக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://fb.watch/9eWquhZ7w-/

Exit mobile version