தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மோடி திடீரென தமிழ் பேசுவதும் ராஜராஜ சோழன் முதல் பாரதி வரை பேசுவதும் யாரால் என்று நினைக்கின்றீர்கள்?

அரசியல் தூது என்பது ஒரு கலை, வெளியுறவு அரசியல் என்பதை நிர்ணயிப்பதே அதுதான் . தூது என்றால் அண்டை நாட்டுக்கு சென்று விருந்து உண்டுவிட்டு படம் எடுத்து ...

ஏறுமுகத்தில் அதிமுக பிஜேபி கூட்டணி.

சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கும் நிலையில் களங்களில் இருந்து வரும் செய்திகள் அதிமுக கூட்டணி ஏறு முகத்தை நோக்கியும் திமுக கூட்டணி இறங்கு ...

ஸ்டாலின் தவிர வேறுயாராலும் கோமாளித்தனமாக பேச முடியுமா என்று தெரியவில்லை.

முதல்வர் எடப்பாடியின் சவாலை ஏற்று விவாதிக்க நான் தயார் என்று சொல்லிவிட்டு பிறகு ,"ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநர் அனுமதி தர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ...

லவ் ஜிஹாத் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பல்பு வாங்கும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்கள்…

லவ் ஜிஹாத் & செண்ட்ரல் விஸ்தா வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பல்பு வாங்கும் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கைத்தடிகள்… லவ் ஜிஹாத்: தன்னை அமைதி மார்க்கம் என்பதை ...

திமுகவுக்கு தோல்வியை அளிக்கும் பிரசாந்த் கிஷோர் !

திமுக கூட்டணியில் உள்ள தொகுதி பங்கீடு பிரச்சினை ஆரம்பம்..

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பிஜேபியை காரணம் காட்டி திமுக தன்னுடை ய கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பிரச்சினையை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றியும் பெற்றுவிட்டது. ஆனால் ...

உலகில் மூன்றாம் இடத்தில் இருந்த வியட்நாம் இப்பொழது இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது…

அரிசி ஏற்றுமதியில் பத்தாண்டுகளாக உலகில் மூன்றாம் இடத்தில் இருந்த வியட்நாம் இப்பொழது இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யப் போகிறது. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ...

திமுகவை இனி மக்கள் ஒருபோதும் ஆட்சியில் அமர விட மாட்டார்கள்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் தமிழக அரசு மீதும், அமைச்சர்கள் குறித்தும் அவதூறு பரப்பும் மு.க.ஸ்டாலினை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர ...

போஸ்டரில் மட்டுமே ஸ்டாலினால் முதலமைச்சராக முடியும் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

போஸ்டரில் மட்டுமே ஸ்டாலினால் முதலமைச்சராக முடியும் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் பிறக்கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்றும், அதிமுக ...

ஸ்டாலினுக்கு ஏழரை துவங்கியாச்சு! திமுகவின் கதை இந்த தேர்தலோடு முடிந்துடும்: பகீர் சாபம் விட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஸ்டாலினுக்கு ஏழரை துவங்கியாச்சு! திமுகவின் கதை இந்த தேர்தலோடு முடிந்துடும்: பகீர் சாபம் விட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தொண்டாமுத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினையும், திமுகவையும் விரட்டி விரட்டி வெளுத்துள்ளது அதிமுக தரப்பு. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”திமுகவுக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது. கருணாநிதிக்கு கடன் பிரச்னை கழுத்தை நெரித்தது. கோபாலபுரம் வீடே அவரது கையை விட்டுப் போவது போலிருந்தது. அவரது கடனை அடைக்க எம்.ஜி.ஆர். நடித்து உதவினார். இதுதான் வரலாறு. கடனிலிருந்து மீண்ட கருணாநிதியின் குடும்பம் இன்று மிக மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்ளது. இது எப்படி சாத்தியமென்றால் எல்லாமே ஊழல் பணம். ஊழல் பணம். ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். திமுகவுக்கு ஏழரை  துவங்கிவிட்டது. அதனால்தான் அவர் தொண்டாமுத்தூருக்கு வந்து வம்பிழுத்துள்ளார். திமுகவின் கதையை இந்த தேர்தலோடு மக்கள் முடித்து, அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும். இந்துக் கடவுள்களை பழித்துவிட்டு, இந்துக்களிடமே ஓட்டுக்களை வாங்குவதற்கு நாடகமாடி வருகிறது திமுக. மக்கள் ஏமாந்துவிடக்குடாது.” என்று விளாசித் தள்ளினார். இதே கூட்டத்தில் பேசிய அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் விந்தியாவோ ”மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்துவதென்றால் அங்கே மக்கள்தானே இருக்க வேண்டும். அம்மக்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்வதுதானே ஸ்டாலினின் கடமை. ஆனால் தன் கட்சிக்காரர்களை கொண்டு வந்து உட்கார வைத்துக் கொண்டு மக்கள் கிராம சபை! என்று அதை சொன்னால் எப்படி ஏற்க முடியும்? கேள்விகேட்ட பெண்ணை அடித்து விரட்டியதன் மூலம் ஸ்டாலினின் தைரியம் புரிந்துவிட்டது. இவரெல்லாம் முதல்வராகவே முடியாது என்று அவரது அண்ணன் அழகிரியே சொல்லிவிட்டார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி, ஆட்சியான திமுகவுக்கு ஊழல் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.” என்று ஆவேசம் காட்டினார். ஆக  மொத்தமா சேர்ந்து முடிச்சுட்டாங்க!

கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…

கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…

சாத்தியமுள்ள விமான நிறுவனங்களின் மூலம் சிறப்பு நோக்க முகமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடங்கியுள்ளது. அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கடல் விமான சேவைகளுக்காக பல்வேறு வழித்தடங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபர், லட்சத்தீவுகள், கவுகாத்தி நதிக்கரை, அசாமில் உள்ள உம்ரான்சோ நீர்த்தேக்கம், யமுனா நதிக்கரை, தில்லியிலிருந்து அயோத்தி வரை, தெஹ்ரி, ஸ்ரீநகர் (உத்தரகாண்ட்), சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கடல் விமான சேவைகள் திட்டமிடப்படுகின்றன. கேவடியா மற்றும் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரைக்கு கடல் விமான சேவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2020 அக்டோபர் 31 அன்று இது துவக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே, முக்கிய துறைமுகங்களுக்கான தூர்வாருதல் வரைவு வழிகாட்டுதல்கள் மீதான கருத்துகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது. பங்குதாரர்களுடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. http://shipmin.gov.in/sites/default/files/Draft%2520guidelines%2520for%2520comments_compressed.pdf என்னும் முகவரியில் வரைவு வழிகாட்டுதல்களை காணலாம். கருத்துகளை 2021 ஜனவரி 31 வரை anil.pruthi@nic.in என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

Page 307 of 461 1 306 307 308 461

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x