பெரியார் புடுங்கிய தேவையில்லாத ஆணிகள்.. கொள்ளை கொள்கை !

நாம் ஈவெரா வாதிகளை விமர்சிப்பது – அவர்களை புண்படுத்த அல்ல, பயண்படுத்த மட்டுமே
ஈவெராவாதிகளின் போலி பகுத்தறிவுவை திராவிட எதிர்ப்பாளர்கள் தோலுரித்து காட்டியுள்ளார்கள். இத்தகைய பேர்வழிகளுக்கு இப்படி சொன்னால் தான் புத்திவரும். தமிழர்களை முட்டாள் ஆக்கிய திருட்டு திராவிடத்தின் பொய்கள்.

பெண்களை தொடர்ந்து அடிமையாக்கி ,அவமதித்ததுதான் சிறியார் எனும் பெரியாரின் கொள்கையாக இருந்துள்ளது. அடுத்தவன் மனைவியை அபகரிப்பது குற்றமில்லை என சட்டம் இயற்ற வேண்டும் என ஈ வே ரா தீர்மானம் இயற்றினார். பெரியார் ஈ வெ ரா அவர்கள் பெண்களைப் பற்றி அவர் எழுதிய வரிகளை பார்ப்போம்.

1.பெண்கள் கணவனுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே மறுமணம் செய்து கொள்வதை சுமரியாதை கொள்கை ஆதரிக்கும் ,

2.பெண்களின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் விரோதமாய் இருந்தால் சாதாரணமாய் பெண்கள், பிள்ளைகளை பெற்றுக்கொள்வதை அடியோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும்,

3.கணவன் மனைவிக்கிடையே அவர்களது சுயேட்சையும், விடுதலையும் கெடுப்பது குழந்தைகள் தான் அதனால் கண்டிப்பாக பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிறது பெரியாரின் கொள்கை.

4.72 வயதில் அவர் வளர்த்த வளர்ப்பு மகளையே மனைவியாக்கி கொண்டது தான் அவரின் வரலாறாக இருந்துள்ளது.

இன்றைய நிலை என்ன ஆணுக்கு பெண் சமமாக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து காட்டுகிறார்கள். தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் பெரியாரையோ அவரின் கொள்கைகளையோ இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

பெரியார் கடவுள் இல்லை என்றார் ,

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் ,பரப்புகிறவன் அயோக்கியன் ,வணங்குறவன் காட்டுமிராண்டி இதெல்லாம் பெரியாரின் வசனங்கள். பெரியார் விநாயகர் சிலைகளை உடைத்தார் இன்று தெருவுக்கு தெரு விநாயகர் கோவில்கள் உள்ளன.

கடவுள் படங்களை ஆபாசமாக(நிர்வாணமாக) சித்தரித்தனர். கடைசியில் இராமரின் திருவுருவ சிலையை தீயிட்டு கொளுத்தினார். இன்று என்னாச்சி அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க உலகின் மிக பெரிய ராமர் கோயில் உயர போகிறது…

ஈவேரா சாதியை ஒழித்தார் …எங்க ஒழித்தார் அவர் பெயர் பக்கத்தில் ஈ வெ ராமசாமி நாயக்கர் என்று வைத்துக்கொண்டு எப்படி சாதியை ஓழிக்க முடியும் . அரசு பதிவேடுகளில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள் இருக்கின்றன .

கள்ளுக்கடைகளை ஒழித்தார் ,இன்று தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான டாஸ்மாக்கடைகள் உள்ளது . அரசுத்துறைகளில் முக்கியமான துறையாகவும் ,பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சாதனையாக உள்ளது.

ஆக மொத்தத்தில் பெரியார் ஈ வெ ராமசாமி அவர்கள்
புடிங்கிய அனைத்துமே தேவையில்லா ஆணியையே…என்பது தான் வரலாறு .

பெரியாரின் பேரன் இன்று பாஜக வில் ,

தற்போது இந்து மற்றும் பாஜக கொள்கையால் ஈர்க்கப்பட்டு கும்பகோணம் பச்சையப்பா தெருவில் வசிக்கும் திராவிடர் கழகம் நிறுவனர் மறைந்த பெரியார் ஈ.வெ.இராமசாமியின் பேரன் திரு.சதிஷ், திராவிடக் கொள்கையை விட்டு விலகி கும்பகோணம் பா.ஜ.க நகரத் தலைவர் கல்கண்டு ரெங்கராஜன், தஞ்சை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் கும்பா வெங்கடாச்சாரி மற்றும் கும்பகோணம் நகர நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டுள்ளார்.

விநாயகரை உடைத்தால் அது கல்லாம் , கல்லை உடைத்தால் அது பெரியாராம். திக ,திமுக போன்ற பெரியார்வாதிகள் மக்களிடையே பொய் பிரச்சாரத்தை பரப்புகின்றன. இந்துக்கள், இந்து ஆலயங்கள், இந்து தெய்வங்களை மட்டுமே குறை கூறி தமிழகத்தில் தொழிலாக வைத்து இருக்கும் பெரியார்வாதிகளுக்கு, இந்த கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய பிறகு தமிழக மக்கள் இடத்தில் ‘வெற்றிவேல்’ ‘வீரவேல்’ என்ற முழக்கமும், ஆன்மிக எழுச்சியும் மிக பெரிய அளவில் எழுந்துள்ளது .

இந்து தர்மம் சமத்துவத்தையும், மனிதத்தையும், மட்டுமே போதிக்கிறது..!



Exit mobile version