செங்கல்பட்டு மாவட்டம் நைனார் குப்பத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் என்பவர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியுள்ளார் மேலும் அந்த பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக தி.மு.க இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் என்பவரை காவல்துறை தேடிவருகின்றர்கள்.
தமிழகத்தில் நடக்கும் கொலைகளை வைத்து அரசியல் செய்யும் திமுக இதுபோன்று பாலியல் சம்பவங்களுக்கு அடிக்கடி அறிக்கை விடுவது, பேட்டி தருவது என தொடர்ந்து விமர்சிக்கும் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரம் பற்றி இதுவரை வாய் திறக்காமல் உள்ளார்.
தினம் தோறும் ஒரு விமர்சனம் என்று வலம் வரும் ஸ்டாலினும் இது பற்றி வாய் திறக்காமல் உள்ளார். திமுக இளைஞரணி பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏன் நியாயம் பெற்று தர முன் வருவது இல்லை.நிதி உதவி அளிப்பதில்லை மேலும் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் ம்=பொங்கி எழும் திமுக மற்ற சமுதாயங்களுக்கு பொங்கி எழுவதில்லை என்று கேள்விகள் எழுந்துள்ளன.
தனது கட்சியை சேர்ந்தவர்கள் என்றால் ஒரு பேச்சு, மற்றவர்கள் என்றால் ஒரு நிலைப்பாடா? என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே இதுகுறித்து ஸ்டாலினும், உதயநிதியும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பலர் கூறி உள்ளனர்.
எங்கே போனார்கள் ஸ்டாலினும் உதயநிதியும்!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















