அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் நேரடி முகவர்களைக் குழுவில் சேர்ப்பது/ ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு 09.07.2021 அன்று அசோக் நகர் அஞ்சல் அலுவலகத்தில் (உதயம் திரையரங்கிற்கு எதிரே, சென்னை-600 083) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. விருப்பமுள்ள, கீழ் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டோர், தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய முழு விவரங்களையும், வயது,  கல்வித்தகுதி, இருப்பிட சான்றிதழ்களையும் doplichennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09.07.2021க்குள்  அனுப்ப வேண்டும்.

தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள்:

a.    கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி

b.    வயது: 18-50

c.    பிரிவுகள்: வேலை இல்லாதவர்கள்/ சுயமாக பணிபுரியும் கல்வி அறிவுடைய இளைஞர்கள்/ முன்னாள் படை வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்/ காப்பீடுகளின் விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள்

d.    விரும்பத்தக்க கூடுதல் தகுதிகள்:

•     ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முன் அனுபவம்

•     கணினி சார்ந்த அறிவு

•     உள்ளூர் பகுதி பற்றிய அறிவு

•     சென்னையில் வசிப்பவர்

e.    இதர காப்பீட்டு நிறுவனங்களில் ஆயுள் காப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோர் நேரடி முகவராக விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறமாட்டார்கள்

தேர்வு செய்யப்பட்ட தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்  ரூ. 5000-ஐ ரொக்க பாதுகாப்பாக செலுத்த வேண்டும்.

இந்தத் தகவல், சென்னை நகர தெற்கு பிராந்திய அஞ்சல் அதிகாரிகளுக்கான மூத்தக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version