ஹேக் செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு ஹேக்செய்யப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்படுபவர் உலக தலைவர்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் தான் கருத்துக்களை சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது அவரின் தனிப்பட்ட கணக்கான @narendramodi_in ஐ சுமார் 25 லட்சத்திற்கும் மேலானவர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்து covid-19 கான நிவாரண நிதியை அனைவரும் செலுத்தவேண்டும் இது கிரிப்டோகரன்சி முறையில் செலுத்தவேண்டும் எனவும் எனவும் குறிப்பிட்டுள்ளனர் முக்கியமாக பிட்காயின் மூலம் நிதியுதவி செலுத்துங்கள் என ட்விட்டர் பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றது இதுபற்றி தகவல் அறிந்த ட்விட்டர் நிர்வாகம் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. தற்போது அந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

Exit mobile version