பிரதம மந்திரி வேளாண் பயிர் காப்பீட்டு திட்டம்.

இந்த திட்டம் இந்த ராபி (Rabi crop) சிறப்பு பருவத்தில் செயற்பட்டுவருகின்றது.

பிரிமியம் மிகவும் கம்மி.

வங்கிக்கடன் பெற்று விவசாயம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட வங்கியே இந்த பிரிமியத்தை செலுத்தும்.

வங்கிக்கடன் பெறாதோர் வேளாண்மைக் கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொதுச்சேவை மையங்கள் மூலமாய் தேவையான ஆவணங்கள் பெற்று பிரிமியம் செலுத்தலாம்.

தேவையான ஆவணங்கள்

1) ஆதார் எண்,
2) வங்கிக்கணக்கு
3) PAN எண் அவசியம்.
4) முன்மொழிவு படிவம் மற்றும் விவசாயி பதிவு படிவம் வங்கிக் கணக்கு எண் (IFSC code உடன்) பாஸ் புக்கின் முதல் பக்க நகல் கிராம அதிகாரி வழங்கிய நிலத்திற்கான சிட்டா, அடங்கல் ஆதார் அட்டை நகல்.

வங்கி மூலம் கடன் பெற்றிருந்தால் இவை ஏதும் தேவையில்லை.

1) பயிர் செய்கையில் வறட்சி காரணமாய் போதிய மகசூல் இல்லாமை
2) வெள்ளம் மற்றும் புயலால் பயிர்கள் அழிவு
3) அறுவடைக்குப் பின் சேமித்த தான்யங்கள்
மழை மற்றும் புயலால் சேதம்.

என அனைத்து வகை இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் இழப்புகள் அனைத்தும் ஈடு செய்யப்படும்.

மனித நேய மிக்க நமது மாண்புமிகு பிரதமர் அவர்களின் இந்த மகத்தான திட்டத்தில்
இணைந்து பயன் பெறுங்கள்.

நாட்டு மக்களின் நலன் சார்ந்த மிக உன்னத சீரிய திட்டம் இது.

விவரங்களுக்கு வேளாண்மைக் கூட்டுறவு
அலுவலகங்கள் தேசியமயாக்கப்பட்ட வங்கிக் கிளைகள் பொதுச்சேவை மையங்கள்
இகைளை அணுகலாம்.

இடர் வருமுன் காத்திடுவோம்.

விவசாயிகள் துயர் அகற்றிடுவோம்.

என்றும் மக்கள் சேவையில் நமது பிரதமர் மோடி-ஜியுடன்

கட்டுரை :- நைனார் நாகேந்திரன்,மாநில துணை தலைவர், தமிழக பாஜக.

Exit mobile version