வனிதாவின் மூன்றாவது கல்யாணத்தில் முதல் நாளே வந்த பிரச்சனை ! மூன்றாவது கணவர் பீட்டர்பால் மீது புகார்!

கலாச்சார சீர்கெடுக்கு வழிவகுத்த விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்த்து கொண்ட வனிதா சர்ச்சைகளில் சிக்கி ஓவியா போன்று பிரபலமான கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்றே . இவருடைய தந்தை பழம்பெரும் நடிகரான விஜயகுமார்.சொத்து பிரச்சனை காரணமாக விஜயகுமார்மற்றும் முன்னாள் கணவருடன் வனிதா பேசி கொள்வதில்லை . இப்போ விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் குக் வித் கோமாளி என்ற போட்டியில் பங்கேற்று வருகிறார். வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற ஒரு மகனும் ஜோவிதா, ஜெய்நிதா என்ற 2 மகள்கள் என மூன்று பிள்ளைகள் உள்ளார்கள் இந்த நிலையில் தனது 39 வயதில் 33 வது திருமணம் நடைபெற்றுள்ளது.

வனிதாவின் முதல் திருமணம் நடிகர் ஆகாஷ் , எதோ ஒரு காரணத்திற்காக 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். ஆனந்த் ராஜனை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா. பிறகு 2012-ல் ஆனந்த் ராஜனையும் வனிதா விவாகரத்து செய்தார். மகன் ஸ்ரீஹரி முதல் கணவர் ஆகாஷுடனும் இரு மகள்கள் வனிதாவுடனும் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பீட்டர் பால் என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை சனிக்கிழமையன்று திருமணம் செய்துள்ளார் வனிதா விஜயகுமார். சென்னை போரூரில் உள்ள வனிதாவின் இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி இத்திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவர் பீட்டரின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளதால், திருமணமான மறுநாளே வனிதா விஜயகுமாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன். இவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல், அவர் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளதாகவும், முறையாக விவாகரத்து அளித்த பின்னரே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் தான் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக திருமணமான மறுநாளே வனிதா பீட்டரக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version